Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரின் ஒரு பகுதியில்இன்றும் நாளையும் குடிநீர் வராது

Print PDF
தினமணி      29.01.2015

மாநகரின் ஒரு பகுதியில்இன்றும் நாளையும் குடிநீர் வராது

திருச்சி பொன்மலைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பிரதான குழாயில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் மாநகரின் ஒரு பகுதியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் மு. விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

இதனால் குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள்:

கல்லுக்குழி, சங்கிலியாண்டபுரம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், வடக்கு உக்கடை, தெற்கு உக்கடை, சஞ்சீவி நகர்.