Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பூங்காவை சுத்தம் செய்து மரக்கன்று நடும் பணி

Print PDF

தினமணி        11.05.2017

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பூங்காவை சுத்தம் செய்து மரக்கன்று நடும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் என்.ஜி.ஓ.ஓ. காலனியில் உள்ள பூங்காவை சுத்தம் செய்து அதில் மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, முட்புதர்கள் நிறைந்து இப் பகுதியில் குடியிருப்போர் இதனைப் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.

விருதுநகர் மாவட்ட டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் தலைவி ஜெஸ்ஸி ஏஞ்சல், நகராட்சி நிர்வாகத்தினரை அணுகி, இதனை அறக்கட்டளை சார்பில் தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அணுமதி கோரியிருந்தனர். 

இதன் பேரில் நகராட்சி ஆணையாளர் டி.எம்.முகமது மைதீன், நகர் நல அலுவலர் டாக்டர் மா.சரோஜா ஆகியோர் தலைமையில், தன்னார்வ அறக்கட்டளையின் தலைவி ஜெஸ்ஸி ஏஞ்சல் முன்னிலையில் இளைஞர்கள் பூங்காவை சுத்தம் செய்தனர். பின்னர் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை இந்த அறக்கட்டளையினர் தொடர்ந்து பராமரிப்பார்கள்.

நிகழ்ச்சியில் இப் பகுதி குடியிருப்போர், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.