Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

மேயர் முன்னிலையில் பிச்சைக்காரர்கள், மனநோயாளிகளை விரட்டி பிடித்த அதிகாரிகள்; தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

Print PDF

மாலை மலர் 15.10.2010

மேயர் முன்னிலையில் பிச்சைக்காரர்கள், மனநோயாளிகளை விரட்டி பிடித்த அதிகாரிகள்; தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

மேயர் முன்னிலையில் பிச்சைக்காரர்கள், மனநோயாளிகளை
 
 விரட்டி பிடித்த அதிகாரிகள்;
 
 தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

சென்னை, அக். 15- சென்னை நகரில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநோயாளிகளை பிடித்து பராமரிக்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி தொடங்கியது. ஒரு மாதத்தில் நூற்றுக்கணக் கானவர்கள் பிடிபட்டனர். அவர்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மீண்டும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநோயாளிகள் வேட்டையை தீவிரப்படுத்த மேயர் மா. சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார். அண்ணா சாலையில் மேயர் முன்னிலையில் 22 பேரை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வேனில் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்- அமைச்சர் மு.. ஸ்டாலின் அறிவுரைப்படி சென்னையில் ரோட்டில் அலையும் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகளை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. 748 பேர் மீட்கப்பட்டனர்.

அவர்களில் 270 பேர் மன நோயாளிகள் இவற்றில் 170 பேர் பூரண குணம் அடைந்து ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கிறார்கள். 100 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. உறவினர்களிடம் 74 பேர்கள் ஒப்படைக்கப்பட்டனர். உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் 19 பேர்கள் சேர்க்கப்பட்டனர். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் 492 பேர் சேர்க்கப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பிச்சையெடுத்த 15 நபர்களுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு, அவர்களின் உறவி னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தொற்று நோய் மருத்துவமனையில் தொடர்ந்து 20 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று சுகாதாரத்துறை சார்பில் சென்டரல் ரெயில் நிலையம் அருகிலும், எழும்பூர் ரெயில் நிலையம் அருகிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகிலும், அண்ணாசாலை சிக்னலிலும் 22 நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு, நன்றாக குளிக்க வைத்து சுத்தம் செய்யப்பட்டு, முடிதிருத்தம் செய்யப்பட்டு, புத்தாடை வழங்கப்படும்.

மேலும் அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு, தொற்றுநோய்களுக்கு சிகிச்சைக்கள் வழங்கப்படும். மன நோயாளிகள் கண்டறியப்பட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட உள் ளனர். மேலும் ஆலயங்களிலும், பள்ளி வாசல்களிலும், தேவாலயங்களிலும் முக்கியமான நாட்களில் வீடுகளிலிருந்து வந்து பிச்சையெடுப்பவர்கள் மாநகராட்சி மூலம் எச்சரித்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப் படுவார்கள்.

மாநகராட்சி சார்பில் 2 ஆதரவற்றோர் இல்லங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சுகாதார அதிகாரி டாக்டர் குகானந்தன், கூடுதல் சுகாதார அதிகாரி டாக்டர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

27 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 25 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

Print PDF

தினகரன் 05.10.2010

27 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 25 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

பொள்ளாச்சி, அக். 5: பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியில் கடந்த 27 ஆண்டு போராட்டத்துக்கு முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து 24 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை ஆர்.டி.. அழகிரிசாமி நேற்று வழங்கினார்.பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சிபாளையம் பிரிவு அருகேயுள்ள காளிங்கராயர் நகரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக 4.91 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் 85 நபர்களுக்கு தலா 3 சென்ட் வீதம் பிரித்து வழங்க ஆதிதிராவிடர் நலத்துறை முடிவு செய்தது. அதற்குள் மேற்படி நிலத்தின் உரிமையாளர்கள் அந்த நிலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் மேற்படி நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2000ம் ஆண்டில் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 85 பேரில் 60 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கான இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது 60 குடும்பங்களும் அப்பகுதியில் குடியேறின.

ஆனால் அந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் மீதமுள்ள 25 பயனாளிகளுக்கு நிலத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளி ட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலைக்கு பேரூராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டது. இதுகுறித்த விபரங்கள் அறிந்த நிலையிலும் அப்பகுதி மக்களில் சிலர் அவ்வப்போது அடிப்படை வசதிகோரி சாலை மறியல், பேரூராட்சி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது மீதமுள்ள 25 பயனாளிகளுக்கும் அந்த இடத்தை பிரித்து வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி பயனாளிகள் 25 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை ஆர்.டி.. அழகிரிசாமி நேற்று வழங்கினார்.

அப்போது பேரூராட்சி தலைவர் லிங்கம்மாள், முன்னாள் தலைவர் யு.என். கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ஜெயராமச்சந்திரன், அப்பகுதி வார்டு கவுன்சிலர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இனி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று பேரூராட்சித் தலைவர் லிங்கம்மாள் தெரிவித்துள்ளார். ஆர்.டி.. வழங்கினார்

 

மாற்று திறனாளிகளுக்கு மெரினாவில் தனிப்பாதை

Print PDF

தினகரன் 01.10.2010

மாற்று திறனாளிகளுக்கு மெரினாவில் தனிப்பாதை

மாற்று திறனாளிகள் கடற்கரை அருகில் சென்று கடல் அலைகளை கண்டுகளிக்க மரப்பலகையிலான தனிப்பாதை அமைக்க மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.

இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையின் கிழக்கு பக்க கடற்கரை பகுதியில் அனைவரையும் கவரும் வகையில் ரூ.24.52 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அழகிய நீருற்றுகள், கடல் அலைகளின் அழகை கண்டுகளிக்கும் வகையில் அமர்வு மேடைகள், அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளும் குறிப்பிட்ட அமர்வு மேடைகளுக்கு சென்று அமர்ந்து கடற்கரையின் அழகை கண்டுகளிக்க வசதியாக அமர்வு மேடைகளுக்கு செல்லும் பாதை கிரானைட் கற்களால் சாய்வு தளமாக அமைக்கப்பட்டுள்ளன. நடைபயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக நடைபாதையில் அவர்கள் செல்லும் வழியில் படிக்கட்டுகள் தவிர்க்கப்பட்டு சாய்வு தளமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளிலும், அமர்வு மேடைகளிலும் இருந்து கடற்கரை அழகை ரசிப்பது மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இருப்பினும், மாற்றுத் திறனாளிகள் கடற்கரையின் அருகில் சென்று கடல் அலைகளை ரசிக்கும் வகையில் மரப்பலகையிலான தனிப்பாதை ஏதாவது அமைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கவுன்சிலர்கள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதை மாநகராட்சி பரிசீலித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Last Updated on Friday, 01 October 2010 11:42
 


Page 8 of 18