Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

ரூ.8.28 கோடியில் தாழ்த்தப்பட்டோருக்கு வீடு கட்டும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு

Print PDF

தினமணி 27.09.2010

ரூ.8.28 கோடியில் தாழ்த்தப்பட்டோருக்கு வீடு கட்டும் பணி: அமைச்சர் நேரில் ஆய்வு

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ.8.28 கோடியில் தாழ்த்தப்பட்டோருக்காக அரியூர் பகுதியில் வீடு கட்டும் பணியை, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

÷புதுச்சேரி ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 ஆயிரம் வீடுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

÷இத்திட்டத்தின் கீழ், ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் மூலம் நகரப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 17 இடங்களில் 1660 வீடுகளும், கிராமப் பகுதியில் ஹட்கோ நிதியுதவியுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 1340 வீடுகளும் அமைக்கப்பட உள்ளது.

÷முதல் கட்டமாக ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் அரியூர் பகுதியில் 142 வீடுகள் ரூ.8.28 கோடி மதிப்பில் அமைப்பதற்கு கடந்த மே மாதம் பூமி பூஜை நடந்தது.

÷பின்னர் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 142 வீடுகளும் தளம் அமைக்கப்பட்டு பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

÷ஒவ்வொரு வீடும் தெருவாசல் தாழ்வாரம், அனைத்து உபயோக வரவேற்பு அறை, சமையல் அறை, கழிவறை, மாடிப்படி ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

÷ஏழுமலை எம்எல்ஏ, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் கே.டி.அழகிரி, ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கோ.மலர்கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ந.நரேஷ்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஆதிதிராவிடர் மக்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி அமைச்சர் கந்தசாமி ஆய்வு

Print PDF

தினகரன் 27.09.2010

ஆதிதிராவிடர் மக்களுக்கான குடியிருப்பு கட்டும் பணி அமைச்சர் கந்தசாமி ஆய்வு

புதுச்சேரி, செப். 27: புதுவை அரியூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ.8.28 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் 142 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணியை அமைச்சர் கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிட மக்க ளின் மேம்பாட்டுக்காக வருடத்துக்கு 3ஆயிரம் வீடுகள் வீதம் 5 ஆண்டுகளில் சுமார் 15ஆயிரம் வீடுகள் கட்ட ஆதிதிராவிட நலத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஜவகர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் மூலம் 17 இடங்களில் மொத்தம் 1660 குடியிருப்புகளும், புதுவை, காரைக்கால் பிராந்தியத்திலுள்ள கிராமப்பகுதிகளில் ஹட்கோ உதவியுடன் 19 இடங்களில் மொத்தம் 1340 குடியிருப்புகளும் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக அரியூர் பகுதியில் ரூ.8.28 கோடி செலவில் 142 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சமையல் அறை, வரவேற்பறை, கழிவறை, மாடிப்படி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் முழுமை யாக மாதிரி வீடு ஒன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 142 குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை ஆய்வு செய்தார். குடியிருப்புகளை தரமானதாக கட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது ஏழுமலை எம்எல்ஏ, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் அழகிரி, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் மலர்க்கண்ணன், செயற்பொறியாளர் சுரேஷ்நாதன் மற்றும் ஊர்பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச் சர் கந்தசாமி கூறுகையில், ‘குடியிருப்புகள் உறுதியாகவும், தரமானதாகவும் கட்டிக்கொடுக்க ஆலோசனை வழங்கியுள்ளேன். கட்டு மான பணிகள் வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்என்றார்.

 

தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் திறப்பு

Print PDF

தினமணி 20.09.2010

தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் திறப்பு

மதுரை, செப். 19: செல்லூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமை தற்கொலை தடுப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

தற்கொலை எண்ணண் வந்தால் இம்மையத்தை தொடர்புகொண்டு அந்த எண்ணத்திலிருந்து விடுபட ஆலோசனை பெறலாம். 37 வயதுக்கு உள்பட்டோரில் 37.8% பேர் தற்கொலை செய்வதாக கணக்கெடுப்பில் தெரியவருகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மையத்தில் மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலோசனை மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் அவர்களுக்கு உதவ ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மனநல திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் பேசியது:

அறிவியல் வளர்ச்சி அபரிமிதமான நிலையில் அதனால் குடும்பத்தில் குழப்பமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாணவப் பருவத்தில் பிள்ளைகள் அதிக மனக் குழப்பத்துக்கு ஆளாகி மனநலம் பாதித்தும் காணப்படுகின்றனர். ஆகவே, மனநலம் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவையாகிறது.

செல்லூரில் தொடங்கப்பட்டுள்ள தற்கொலை தடுப்பு மையத்தை தொடர்புகொள்ள புதிய தொலைபேசி எண்ணுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (0011 என்ற எண் சனிக்கிழமை செயல்படவில்லை) இதற்கு தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கவும் மையம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மனநலப்பிரிவு டாக்டர் ரவீந்திரன், தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகநாதன், மாநகராட்சி நகர்நல சுகாதாரத்துறை அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


Page 9 of 18