Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது நடைபாதைவாசிகளுக்கு நவீன தங்கும் விடுதி சேலத்தில் 2,800 பேர் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Print PDF

தினகரன் 26.07.2010

நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது நடைபாதைவாசிகளுக்கு நவீன தங்கும் விடுதி சேலத்தில் 2,800 பேர் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

சேலம் மாநகர காவல் துறையின் கணக்கெடுப்பின் படி சேலம் மாநகர எல்லைக்குள் 340 குடும்பங்களில் 1800 பேர் வரை சாலையோரத்தில் வசிக்கின்றனர். இதே போல் சேலம் மாவட்ட அளவில் நான்கு நகராட்சி பகுதிகளிலும் சுமார் ஆயிரம் பேர் வரை வசித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2,800 பேர் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 200 விடுதிகள்

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, து£த்துக்குடி, ஈரோடு, திருப்பூர், வேலு£ர், திருச்சி உட்பட 10 மாநகராட்சிகள் உள்ளன. செங்கல்பட்டு மண்டலத்தில் 26 நகராட்சிகள், சேலம் மண்டலத்தில் 16 நகராட்சிகள், தஞ்சாவூர் மண்டலத்தில் 19, திருச்சி மண்டலத்தில் 22, திருப்பூர் மண்டலத்தில் 24, மதுரை மண்டலத்தில் 22, வேலு£ர் மண்டலத்தில் 21 நகராட்சிகள் உள்பட 150 நகராட்சிகள் உள்ளன. தமிழகத்தில் நகர்புறங்களில் வீடில்லாமல் இருக்கும் சாலையோரவாசிகளுக்காக சுமார் 200 தங்கும் இரவு விடுதிகள் அமைக்கப்படலாம் என நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம், ஜூலை 26: நகர்புறங்களில் வீடின்றி நடைபாதையில் வசிப்பவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை அமைப்பதற்காக கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் நகர்புறங்களில் வீடில்லாமல் சாலையோரங்களில் குடும்பங்களாகவும், தனியாகவும் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி மழை, வெயில் போன்றவற்றின் பாதிப்புடன் சாலையோரங்களில் உள்ள கடைகள், கோயில் வாசல்கள், திண்ணைகள் போன்றவற்றில் இரவு நேரங்களில் படுத்து உறங்குகின்றனர். இவர்களுக்கு உரிய வாழ்வுரிமையை அரசு அளிக்க வேண்டும் என கடந்த 2001ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சாலையோரங்களில் வாழ்பவர்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை மற்றும் கௌரவத்தை அளிக்கும் வகையில் மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன தங்கும் விடுதி அமைத்து தரவேண்டும். இந்த விடுதிகள் 24 மணிநேரமும் செயல்படவேண்டும். குறைந்த பட்ச அடிப்படை வசதிகளான படுக்கை, விரிப்பு, கழிவறை, குடிநீர், பாதுகாப்பு பெட்டகம் (லாக்கர்), முதல் உதவி பெட்டி ஆகியன இருக்கவேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு விடுதி என்ற கணக்கில் போதுமான எண்ணிக்கையில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு சமூக நலம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதிகள் அமைக்க உள்ளது. இதன் பேரில் நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், வீடின்றி சாலையோரம் வசிப்பவர்களை கணக்கெடுக்க வேண்டும். எண்ணிக்கைக்கேற்ப எத்தனை விடுதிகள் அமைக்க வேண்டும் என்பது குறித்த விரிவான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் நகர்புறங்களில் வீடின்றி வசிப்பவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் சாலையோரங்களில் தங்குபவர்களை பற்றி கணக்கெடுக்கும் பணியில் மாநகர் நல அலுவலர் பொற்கொடி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வீதி வீதியாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர். இது பற்றி சேலம் மாநகராட்சி ஆணையர் பழனிசாமி கூறியதாவது: சேலம் மாநகராட்சி எல்லைக்குள் வீடில்லாத குடும்பங்கள், ஆதரவற்றவர்கள், அனாதைகள், முதியவர்கள் உள்ளிட்ட சாலையோர வாசிகள் பற்றி கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இவர்களுக்கு பங்கர் டைப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெறுகிறது. ஏற்கனவே இது போன்று சேலத்தில் விடுதிகள் நடத்தி வரும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

 

சாலையில் வசிப்பவர்களுக்கு நவீன தங்கும் விடுதி

Print PDF

தினகரன் 22.07.2010

சாலையில் வசிப்பவர்களுக்கு நவீன தங்கும் விடுதி

சேலம், ஜூலை 22: நகர்புறங்களில் வீடின்றி சாலையில் வசிப்பவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நகர்புறங்களில் வீடில்லாமல் சாலையோரங்களில் குடும்பங்களாகவும், தனியாகவும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி மழை, வெயில் போன்றவற்றின் பாதிப்புடன் சாலையோரங்களில் உள்ள கடைகள், கோயில் வாசல்கள், திண்ணைகள் போன்றவற்றில் இரவு நேரங்களில் படுத்து து£ங்குகின்றனர். இவர்களுக்கு உரிய வாழ்வுரிமையை அரசு அளிக்க வேண்டும் என கடந்த 2001ம் ஆண்டு பொதுநல நோக்குடன் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சாலையோரங்களில் வாழ்பவர்களுக்கு அடிப்படை வாழ்வுரிமை மற்றும் கௌரவத்தை அளிக்கும் வகையில் மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன தங்கும் விடுதி அமைத்து தரவேண்டும் என நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு விடுதி என்ற கணக்கில் போதுமான எண்ணிக்கையில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு சமூக நலம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதிகள் அமைக்க உள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை செயலர் ராமமோகனராவ் கடந்த 11.5.2010ம் தேதி நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டிக்கு தங்கும் விடுதிகள் குறித்து செயல்படுத்த கடிதம் அனுப்பினார். இதன் பேரில் நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் கடந்த 8.6.10ல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு

Print PDF

தினமலர் 21.06.2010

துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை சேர்மன் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர் களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துப் புரவு பணியாளர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அதே இடத்தில் 42 வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சேர்மன் கெய்க்வாட் பாபு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்களிடம் வீடுகளை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதில், மாற்று இடவசதி செய்தால் உடனடியாக காலி செய்வதாக குடியிருப்போர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.உடன் துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுõர், ஆய் வாளர் அரிநாராயணதாஸ் ஆகியோர் இருந்தனர்.

 


Page 13 of 18