Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

மின்மயமாக்கும் திட்டத்தில் 500 குடிசைகளுக்கு இணைப்பு

Print PDF

தினமலர் 17.04.2010

மின்மயமாக்கும் திட்டத்தில் 500 குடிசைகளுக்கு இணைப்பு

சிவகங்கை : குடிசைகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் திட்டத்தில், 500 குடிசைகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இலவச இணைப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, புதிய மீட்டர், 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு பொருத்தப்படும். மாவட்டத்தில் எஸ். புதூர், திருப்புத்தூர், கண்ணங்குடியில் 13 கிராமங்களில், 500 குடிசைகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 40 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட் டுள்ளது.மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் யதீந்திரன் கூறுகையில், ''இத்திட்டத்தில் விண் ணப்பித்த அனைவருக்கும் நான்கு மாதங்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். இணைப்பு பெற்றவர்கள், நிர்ணயித்த அளவில் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காத, குடிசைவாழ் மக்கள், தற்போது விண்ணப்பித்தால் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.

Last Updated on Saturday, 17 April 2010 06:49
 

வீட்டுமனைப் பட்டா: நகரப் பகுதி ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்

Print PDF

தினமணி 06.04.2010

வீட்டுமனைப் பட்டா: நகரப் பகுதி ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்

புதுச்சேரி, ஏப்.5: வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் வி. வைத்திலிங்கம் கூறினார்.

÷தனியார் இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் க. லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினார்.

÷அதற்கு பதிலளித்து முதல்வர் வி. வைத்திலிங்கம் பேசியது:

÷ புதுச்சேரி நில மானிய விதிகளின்படி நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா பெற தகுதி பெற்றவர்கள். தனியார் நிலங்களில் ஆக்கிரமிப்புச் செய்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்குத் தகுதி அடிப்படையில் வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக ஒரு சட்ட முன் வரைவை அறிமுகம் செய்ய அரசு உத்தேசித்துள்ளது என்றார்.

÷அப்போது விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) குறுக்கிட்டு, இப்போதுள்ள சட்டத்தைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

÷அவரைத் தொடர்ந்து ஆர். சிவா குறுக்கிட்டு, புதுச்சேரியில் இது போன்று தனியார் நிலங்களில் நிறைய பேர் வீடுகள் கட்டிக்கொண்டுள்ளனர். அந்த இடங்களை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை என்றார்.

÷இதற்குப் பதில் அளித்த முதல்வர் வைத்திலிங்கம், இது போன்று பல்வேறு இடங்கள் இருக்கின்றன. மேலும் நகரத்தில் வசிக்கும் ஏழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 06 April 2010 09:30
 

தூத்துக்குடியில் ரூ. 10 கோடியில் ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா

Print PDF

தினமலர் 02.03.2010

தூத்துக்குடியில் ரூ. 10 கோடியில் ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாயிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்னும் 10 நாளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மட்டும் இரண்டரை கோடி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.நிகழ்ச்சியின் போது சுனாமி நிவாரண திட்டத்தின் கீழ் அரசு சார்பில் இலவசமாக கட்டப்பட்ட 49 பேருக்கு வீட்டின் சாவியை கலெக்டர் வழங்கினார்.

மீனவர் நலவாரியத்தின் கீழ் திருமணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதி உதவிகள், மீனவர் விபத்து காப்புறுதி நிவாரணம் மொத்தம் 8 பேருக்கு சுமார் மூன்றரை லட்ச ரூபாய் வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது;சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. 4 பேக்கேஜ்களாக இதற்கான பணிகள் நடந்தது. மொத்தம் மாவட்டத்தில் 798 வீடுகள் கட்டும் பணி நடந்தது. ஒரு வீட்டிற்கு 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கியது. இதில் இதுவரை 681 பேருக்கு வீடுகளின் சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். இன்னும் 117 வீடுகள் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இம் மாத இறுதிக்குள் அவர்களுக்கு வீட்டின் சாவி ஒப்படைக்கப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் 2009-2010ம் ஆண்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் பெரும்பாலும் மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. இந்த நிதியாண்டு முடிவுக்கு வருவதால் இறுதியாக பாக்கியுள்ளவர்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் வரும் 15ம் தேதியை ஒட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடியில் வைத்து வழங்கப்படுகிறது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்டங்களை வழங்குகிறார்.

மொத்தம் சுமார் 10 கோடிக்கு மேல் அன்று நலத்திட்டம் சில துறைகள் சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுழல்நிதி, பொருளாதார கடன், நேரடி கடன்கள், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ் மட்டும் கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் உதவித் தொகை, மூன்று ஆண்டுகள் வரை குடியிருப்போருக்கு பட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நலத்திட்டம் மட்டும் பத்து கோடி ரூபாயிற்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இந்த நிதியாண்டின் நலத்திட்டங்கள் முழுவதும் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி வீரனன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா, மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சுசீலா, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன், வேளாண்மை துணை இயக்குநர் தனசிங்டேவிட், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 06:54
 


Page 15 of 18