Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

துப்புரவு தொழிலாளர்களுக்காக போதை மறுவாழ்வு மையம் துவக்கம்

Print PDF

தினமலர் 11.02.2010

துப்புரவு தொழிலாளர்களுக்காக போதை மறுவாழ்வு மையம் துவக்கம்

கோவை: மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் ஆண், பெண் இருபாலரும் மது மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தால், அவர்களை மீட்பதற்காக போதை மறுவாழ்வு மையம் கோவை நகரில் புதியதாக துவக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 2 ஆயிரத்து 935 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் 141 பேர் மது மற்றும் தீவிர போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது தெரியவந்தது. இவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்பதற்காக மாநகராட்சி 50 வது வார்டுக்குட்பட்ட லாலிரோட்டில் உள்ள துணை மகப்பேறு மருத்துவ மையம், போதை மறுவாழ்வு மையமாக மாற்றியமைக்கப்பட்டது.இவர்களுக்கு முதல்கட்டமாக மாநகராட்சி டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் மிகவும் மோசமான நிலையிலிருக்கும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுமாநகராட்சி போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு அன்றாடம் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்கள் வெளியேறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு கருதி இரு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாநகராட்சி டாக்டர்கள், இரண்டு நர்ஸ்கள், இரண்டு மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவ சிகிச்சையளிப்பதோடு, அவர்களோடு கலந்துரையாடி மனிதனின் குணத்தையும், மனதையும் மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இம்மையத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களின், பழைய வாழ்வை மீட்க மாநகராட்சி நிர்வாகம் போராடி வருகிறது.

Last Updated on Thursday, 11 February 2010 07:49
 

தொகுப்பு வீடுகளுக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 9.02.2010

தொகுப்பு வீடுகளுக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு

வேலூர், பிப். 8: வேலூர் மாவட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டித்தர ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ந.அருள்ஜோதி அரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.2008}2009ம் நிதியாண்டில் இத்திட்டம் கீழ் வேலூர் மாவட்டத்தில் 4,967 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது 2009}2010ம் நிதியாண்டில் 9,424 வீடுகள் கட்டவும், 2,422 கூரை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றவும் ரூ.52.93 கோடி நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்துள்ளன.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவிதம், இதர பிரிவினருக்கு 40 சதவிதம் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இதில் 15 சதவிதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் வேலூர் அரசுப் பொருள்காட்சியில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி முகமை அரங்கில் பெறலாம். பிப்ரவரி 10}ம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளதற்கான சான்று, சொந்த இடத்திற்கான பட்டா நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் தேர்வுக்குப் பிறகு, 265 சதுர அடியில், மாநில அரசு பங்களிப்புத் தொகை ரூ.29 ஆயிரம், மத்திய அரசு பங்களிப்புத் தொகை ரூ.26 ஆயிரம் என ரூ.55 ஆயிரம் மதிப்பிலான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:18
 

இலவச வீட்டுமனைத் திட்டம்: ஆட்சியர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 08.02.2010

இலவச வீட்டுமனைத் திட்டம்: ஆட்சியர் வேண்டுகோள்

நாகப்பட்டினம், பிப். 7: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் அரசுக்கு நிலம் வழங்க முன்வருமாறு நில உரிமையாளர்களுக்கு நாகை ஆட்சியர் ச. முனியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் நிகழ் நிதியாண்டில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தில் ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாகை வட்டம், பனங்குடி கிராமத்தில் ரூ. 5.9 லட்சம் மதிப்பில் சுமார் 30 பேருக்கும், 80. வடுகச்சேரி கிராமத்தில் 5.4 லட்சம் மதிப்பில் 30 பேருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள ரூ. 23,68,823 நிதி ஒதுக்கீட்டில் 340 ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்களுக்கு மயானம், மயானப் பாதை மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதை வசதி ஆகியவற்றுக்காக நிலம் கையகப்படுத்த ரூ. 1.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், வாட்டாக்குடி, வடக்குப் பொய்கைநல்லூர், தென்னாம்பட்டினம், ஆறுபாதி, மடப்புரம் ஆகிய பகுதிகளில் மயான விரிவாக்கம், மயானப் பாதை மற்றும் காலனி பாதை அமைக்க ரூ. 95,323 மதிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், நில உரிமையாளர்கள் அரசுக்கு நிலம் அளிக்க முன்வர வேண்டும் என அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Monday, 08 February 2010 10:01
 


Page 17 of 18