Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Community Development

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை சீரமைக்க உத்தரவு

Print PDF

தினமணி 04.02.2010

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை சீரமைக்க உத்தரவு

சிதம்பரம்,பிப். 3: சிதம்பரத்தில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து "தினமணி'யில் புகைப்படத்துடன் வெளியான செய்தியையடுத்து, அதை சீரமைக்குமாறு மத்திய அரசு பழங்குடியினர் நல தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

÷குடியிருப்பின் அவல நிலை குறித்து வெளியான செய்தியையடுத்து, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மக்கள் குறைதீர்க்கும் பிரிவு செயலர் ஏ.வி. வீரராகவன், இதுகுறித்த செய்திக் குறிப்புடன் பழங்குடியினர் நல தேசிய ஆணைய இயக்குநருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பினார்.

÷இதையடுத்து, துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை உடனடியாக நேரில் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை பழங்குடியினர் நல தேசிய ஆணையத்துக்கு விரைவாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமனுக்கு பழங்குடியினர் நல தேசிய ஆணையத்தின் இயக்குநர் இ. தசரதன் உத்தரவிட்டுள்ளார்.

Last Updated on Thursday, 04 February 2010 10:54
 

காரையாரில் மலைவாழ் மக்கள் பங்கேற்ற முதல் கிராமசபைக் கூட்டம்

Print PDF

தினமணி 27.01.2010

காரையாரில் மலைவாழ் மக்கள் பங்கேற்ற முதல் கிராமசபைக் கூட்டம்

அம்பாசமுத்திரம், ஜன. 26: காரையார் காணிக்குடியிருப்பில் மலைவாழ் பழங்குடியின மக்கள் பங்கேற்ற முதல் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட 9- வது வார்டில் காரையார் காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குழி, மயிலாறு, தருவட்டான்பாறை, சேர்வலாறு, அகஸ்தியர் காணிக்குடியிருப்பு ஆகியன உள்ளன. இப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக உருவாக்கி அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில் வன உரிமை சட்டத்தின் கீழ் அண்மையில் நகராட்சி 9- வது வார்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை கொண்டு வன உரிமைக்குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் முதல் கிராம சபைக் கூட்டம் நகர்மன்றத் தலைவரும் அக்குழு தலைவருமான எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் காணிக்குடியிருப்பில் நடைபெற்றது.

இதில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் எஸ். சிவசங்கரன், நகராட்சி நிர்வாக அதிகாரி இ. முருகன், கிராம நிர்வாக அலுவலர் மது, வன உரிமைக்குழு நிர்வாகிகள் கணேசமூர்த்தி, ஜெயவாணி, ஆறுமுகம், வனவர் செல்வராஜ் மற்றும் மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு தனி நபர் பட்டா வழங்க வேண்டும், பாரம்பரிய உரிமைகள் மற்றும் முன்னோர்கள் எடுத்து விற்பனை செய்து வந்தபடி விளை பொருட்களை மகசூல் செய்ய அனுமதிக்க வேண்டும்,

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மின் இணைப்பு வழங்க வேண்டும், வனங்களில் கால்நடைகளை மேய்க்கவும், புல் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Wednesday, 27 January 2010 08:39
 

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு வீடு கட்ட நிதியுதவி

Print PDF

தினமணி 5.11.2009

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு வீடு கட்ட நிதியுதவி

களக்காடு, நவ. 4: களக்காட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு மத்திய, மாநில அரசு உதவியுடன் வீடு கட்டித் தரப்படவுள்ளதாக பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.

களக்காடு பேரூராட்சி அவசரக் கூட்டம் அதன் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பி.சி. ராஜன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் ச. முத்துகிருஷ்ணன் உறுப்பினர்களிடையே பேசியதாவது:

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு தலா ரூ.1.20 லட்சத்தில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளன.

இதில், பயன்பெற விரும்பும் பயனாளிகள் ஏற்கெனவே அரசிடம் இருந்து இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றிருக்க வேண்டும்.இவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

வீடு கட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.20 லட்சம் வழங்கப்படும். இதில், 10 சதவிகிதத்தை தனது பங்களிப்பாக பயனாளி செலுத்த வேண்டும்.

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 25 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பொருட்டு உரிய நபர்களின் பட்டியலை விரைவில் அனுப்பி வைக்குமாறு திருநெல்வேலி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கேட்டுள்ளார் என்றார் அவர்.

அப்போது உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ருக்குமணி, பிரேமா ஆகியோர் தங்களது வார்டுகளில் 10-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனைப்பட்டாவுக்கு உரிய ஆவணங்கள் வைத்துள்ளதாகவும் அவர்களை இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதேபோல, உறுப்பினர்கள் எம்.ஆர். கந்தசாமி, நெல்லையப்பன், அப்துல்மஜீத், ஆகியோரும் தங்களது வார்டுகளிலும் தாழ்த்தப்பட்டோர் பலர் இலவச வீட்டு மனைப் பட்டா வைத்துள்ளனர் அவர்களையும் இத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இத் திட்டத்தின்படி, 25 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒவ்வொருவருக்கும் ரூ.1.20 லட்சத்தை மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வந்துள்ளன. பயனாளிகள் மொத்தமாக ஒரே பகுதியில் இருந்தால் அப் பகுதியில் சாலை, மின்சாரம், குடிநீர், வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியான நிதியை ஒதுக்கித்தர முன்வந்துள்ளன என்றார் அவர்.

கூட்டம் முடியும் வரை எந்தெந்த வார்டுகளில் பயனாளிகளை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. 1 மற்றும் 20.வது வார்டுகளில் உள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

Last Updated on Thursday, 05 November 2009 06:29
 


Page 18 of 18