Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

Print PDF

தினமணி              08.08.2021  

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

posters

சென்னையை அழகுபடுத்தும் வகையில், இதுவரை, பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றி உள்ளனா்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற மாதம்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம், மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அப்புறப்படுத்தி அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகிறது.
 அதன் அடிப்படையில் இதுநாள்வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் 1,00,420 சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது. 

இதில் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 7,498 இடங்களில் 25,403 சுவரொட்டிகளும், மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 7,883 இடங்களில் 31,263 சுவரொட்டிகளும், தெற்க்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 9,003 இடங்களில் 43,754 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


     

    சென்னையின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

    Print PDF

    தி இந்து        11.06.2017

    சென்னையின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

    மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கும் பணிகளைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்.
    மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கும் பணிகளைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்.

    சென்னையின் குடிநீர் பிரச் சினையை போக்குவதற்காக கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஏரிகள், வறட்சி காரணமாக வறண்டுள்ளன. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையைப் போக்க கல் குவாரிகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குவாரி தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று இந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அமைச்சர் தகவல்

    பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    145 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 63 சதவீதம் மழை குறைந்துள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து 7ஆயிரம் நடைகள் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு ரூ.13.63 கோடி செலவானது. மேலும் 20 நாட்களில் இந்த பணி முடிவடைந்தது. இந்த திட்டத்துக்கு ராட்சத மோட்டார் பம்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது சரித்திர சாதனை திட்டம்.

    தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியை செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் திமுகவினரும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை செய்கின்றனர். அவர்கள் ஏரியில் உள்ள செடி கொடிகளை மட்டுமே அகற்றுகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நீர்நிலைகளை தூர்வாரவில்லை. பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே தூர்வாரும் பணியை செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. பழனி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் அருண்ராய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

     

    சென்னை மாநகராட்சி சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

    Print PDF

    தி இந்து         13.06.2017

    சென்னை மாநகராட்சி சார்பில் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

    சென்னை மாநகராட்சி சார்பில், உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது.

    கடந்த 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் (5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்) உள்ளனர். அதில் ஊரகப் பகுதியில் 81 லட்சம் பேரும், நகரப் பகுதியில் 20 லட்சம் பேரும் உள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 20 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாரஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

    நாட்டின் எதிர்கால தூண்களான குழந் தைகளை, இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பங்கேற்று, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பணிக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை வாசிக்க, மாநகராட்சி அதிகாரிகளும், பணி யாளர்களும், உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.கோவிந்தராவ், ஆர்.லலிதா, எம்.விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    காவல் ஆணையர்

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணி யாளர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி, துணை ஆணையர்கள் அ.ராதிகா, ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     
    • «
    •  Start 
    •  Prev 
    •  1 
    •  2 
    •  3 
    •  4 
    •  5 
    •  6 
    •  7 
    •  8 
    •  9 
    •  10 
    •  Next 
    •  End 
    • »


    Page 1 of 841