Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரக்கோணம் நகர்மன்ற தலைவர் இன்று பதவியேற்பு

Print PDF
தினமணி    24.09.2014

அரக்கோணம் நகர்மன்ற தலைவர் இன்று பதவியேற்பு

அரக்கோணம், செப். 23: அரக்கோணம் நகர்மன்றத் தலைவராக தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.கண்ணதாசன் புதன்கிழமை பதவியேற்கிறார்.

அரக்கோணம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.கண்ணதாசன், இன்று காலை 9 மணி அளவில் அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் நகர்மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார். இத்தகவலை அரக்கோணம் நகராட்சி ஆணையர் விஜயகுமாரி தெரிவித்தார்.

இதில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்.எல்.ஏ. சு.ரவி, அதிமுக மாவட்டச் செயலரும், சோளிங்கர் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான என்.ஜி.பார்த்தீபன், நகர்மன்ற உறுப்பினரும், அதிமுக நகரச் செயலருமான துரைகுப்புசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
 

புதிய மேயர் இன்று பதவியேற்பு

Print PDF
தினமணி          24.09.2014

புதிய மேயர் இன்று பதவியேற்பு

கோவை மாநகராட்சியின் 5-ஆவது மேயராக அதிமுகவைச் சேர்ந்த ப.ராஜ்குமார், புதன்கிழமை பதவியேற்கிறார்.

  கோவை மாநகராட்சி மேயராக இருந்த அதிமுகவின் செ.ம. வேலுசாமி, கடந்த மே மாதம் பதவி விலகினார். அதையடுத்து கடந்த 18-ஆம் தேதி மாநகராட்சி மேயர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ப.ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

  ப.ராஜ்குமார் திங்கள்கிழமை மாலை சென்னை சென்றார். தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின், செவ்வாய்க்கிழமை கோவை திரும்பினார்.

  கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் புதன்கிழமை காலை மாநகராட்சியின் 5-ஆவது மேயராக ப.ராஜ்குமார் பொறுப்பேற்கிறார். இதற்காக கலையரங்கம் தயாராகி வருகிறது.
 

மாநகராட்சியின் ஐந்தாவது மேயரானார் ப.ராஜ்குமார்

Print PDF
தினமணி          23.09.2014  

மாநகராட்சியின் ஐந்தாவது மேயரானார் ப.ராஜ்குமார்


கோவை மாநகராட்சியின் ஐந்தாவது மேயராக ப.ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோவை மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் ப.ராஜ்குமார் 2,91,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் கோவை மாநகராட்சியின் ஐந்தாவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செ.ம.வேலுசாமி 2,81,728 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக மேயர் வேட்பாளர் நா.கார்த்திக் 1,53,816 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சுமார் 1,27,912 வாக்குகள் வித்தியாசத்தில் செ.ம.வேலுசாமி வெற்றி பெற்றார்.

இதனிடையே செ.ம.வேலுசாமியின் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மே மாதம் மேயர் பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து நடந்த மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமார் வெற்றி பெற்று, ஐந்தாவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மேயர்கள்: கோவை மாநகராட்சியின் முதல் மேயராக வி.கோபாலகிருஷ்ணன் (த.மா.கா), 1996ல் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து தா.மலரவன் (அதிமுக), ஆர்.வெங்கடாசலம் (காங்கிரஸ்), செ.ம.வேலுசாமி (அதிமுக) ஆகியோர் மேயர் பொறுப்பு வகித்தனர். மேயர் பதவியை அதிமுகவே மூன்று முறை வென்றுள்ளது.
 


Page 12 of 841