Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்: நாளை தொடக்கம்

Print PDF

தினமணி            17.02.2014

சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்: நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 இடங்களில் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் திங்கள்கிழமை (பிப். 17) முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பிப். 17, 18 மற்றும் 20-ம் தேதிகளில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 660 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் தாய்சேய் நலம் மற்றும் குழந்தைகள் நலம் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வர உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் 4 நகராட்சிகளிலும் 15 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி நாகர்கோவில் நகராட்சியில், மறவன்குடியிருப்பு செயின்ட் மேரி தொடக்கப் பள்ளி, கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப் பள்ளி, ஒழுகின சேரி என்.எஸ்.கே. அரசு உயர் நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

பத்மநாபபுரம் நகராட்சியில்,  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், குழித்துறை நகராட்சியில் மாடவிலாசம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், குளச்சல் நகராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளன.

குருந்தன்கோடு வட்டாரத்தில் கடியப்பட்டணம் ஸ்கேர்டு ஹார்ட் உயர்நிலைப் பள்ளியிலும், மேல்புறம் வட்டாரத்தில் அண்டுகோடு பி.பி.எம் மேல்நிலைப் பள்ளியிலும், ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் தர்மபுரம் எல்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியிலும், அகஸ்தீசுவரம் வட்டாரத்தில்  கன்னியாகுமரி புனித ஜோசப் தொடக்கப் பள்ளியிலும், கிள்ளியூர் வட்டாரத்தில் பள்ளியாடி புனித வியானி மேல்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டாரத்தில்  தோவாளை வடக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தக்கலை வட்டாரத்தில் திருவிதாங்கோடு மலையாளப் பள்ளியிலும், முன்சிறை வட்டாரத்தில் மங்காடு அரசு நடுநிலைப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டாரத்தில் வியன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் கர்ப்பிணி களுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்குதல், ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் பெண்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்குப் பரிந்துரைத்தல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி

உதவி திட்டத்தில் பதிவு செய்தல், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்றுமுதல் சிறப்பு தாய்-சேய் மருத்துவ முகாம்கள்

Print PDF

தினமணி            17.02.2014

இன்றுமுதல் சிறப்பு தாய்-சேய் மருத்துவ முகாம்கள்

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் திங்கள்கிழமைமுதல் வியாழக்கிழமை வரை 9 மாநகராட்சி மருத்துவமனைகளில் சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் நடைபெறும என மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திங்கள்கிழமை (பிப். 17) சிங்காநல்லூர் நகர் நல மையம், ராமநாதபுரம் நகர் நல மையம், செல்வபுரம் நகர் நல மையத்திலும் செவ்வாய்க்கிழமை (பிப். 18) கணபதி நகர் நல மையம், சி.டி.எம். நகர் நல மையம்,  எஸ்.எல்.எம். நகர் நல மையத்திலும், வியாழக்கிழமை (பிப். 20) எம்.எம். நகர் நல மையம், ஆர்.கே.பாய் நகர் நல மையம், வி.வி.எம். நகர் நல மையத்திலும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். கர்ப்பிணிகள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்காக இம் முகாம்கள் நடைபெறுகின்றன.

இம்முகாம்களில் மாநகர மக்கள் தங்களுக்குத் தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்று பயனடையலாம்.

 

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் 2-ஆம் கட்ட பணி

Print PDF

தினமணி            17.02.2014

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் 2-ஆம் கட்ட பணி

மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் 2-ஆம் கட்ட பணி, ஓடந்துறை நகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் பங்கேற்று, புகைப்படம் எடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ரமாசெல்வி முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பாலன், குதுப் நிஷா, நகராட்சி மேலாளர் சித்தார்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட முகாம் குறித்து நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் கூறியது:

கடந்த முகாமில் புகைப்படம் எடுக்காமல் விடுபட்டுப் போன 5 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். இதில் 1 முதல் 7 வது வார்டு பகுதி மக்கள் 14 முதல் 16-ஆம் தேதி வரையும், 8 முதல் 13 வது வார்டு பகுதி மக்கள் 17 முதல் 19-ஆம் தேதி வரையும் எஸ்.எம். நகர் நகராட்சி துவக்கப் பள்ளியிலும், 12, 23, 24,25 வது வார்டு பகுதி மக்கள் 20 முதல் 22-ஆம் தேதி வரை சான்ஜோஸ் மெட்ரிக் பள்ளியிலு ம், 28, 31, 33 வார்டு பகுதி மக்கள் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடூர் நகரவை துவக்கப் பள்ளியிலும், 14, 15, 16 வது வார்டு பகுதி மக்கள் 23 முதல் 25-ஆம் தேதி வரை வ.உ.சி. நகரவை துவக்கப் பள்ளியிலும், 21, 22, 26 வது வார்டு பகுதி மக்கள் 26 முதல் 28-ஆம் தேதி வரை காட்டூர் நகரவை துவக்கப் பள்ளியிலும், 32 வது வார்டு பகுதி மக்கள் 26 முதல் 28-ஆம் தேதி வரை மணி நகர் நகரவை நடுநிலைப் பள்ளியிலும் பங்கேற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்தி பயனடைய வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 


Page 17 of 841