Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம்

Print PDF

தினமணி            17.02.2014

மாநகராட்சி மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

முகாமை தொடங்கி வைத்து மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் முதன்முறையாக இலவச  எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம், இனி ஒவ்வொரு சனிக்கிழண்யும் ஒரு மண்டலத்தில் தொடர்நது நடத்தப்படும்.

எல்.சி எண்டோஸ்கோப்பி மையத்துடன் மாநகராட்சி இணைந்து இம் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மூலம் எண்டோஸ்கோப்பி   பரிசோதனை இயந்திரம் வாங்கப்படவுள்ளது.

குடலில் தொந்தரவு உள்ளவர்கள் அதிக நாள் காத்திருக்காமல் விரைவாக எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்துகொண்டு மருத்துவம் பார்த்துக்கொண்டால் விரைவாக நோய் குணமடையும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, வரும் 22-இல் மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கான இலவச ரத்தப் பரிசோதனை முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெறும். இம் மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மையமும், ராமலிங்கம் காலனி மாநகராட்சி மருத்துவமனையில் ஆயுர்வேத எலும்பு சிகிச்சை மையமும் தொடங்கி வைக்கப்படும்.

வரும் 22-இல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தல், மாநகரப் பகுதியில் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க பயிற்சியளித்தல், சிறப்பாக பணியாற்றும்  குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு பரிசு வழங்குதல், 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாநகராட்சிப் பள்ளி குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்துதல், மாநகராட்சி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி நடத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கோலப் போட்டி நடத்துதல், பிளாஸ்டிக் சேகரிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

வரும் 24-இல் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து      குழந்தைகளுக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் பிப். 24-இல் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அகராதி பரிசாக வழங்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட 140 பேருக்கு இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.ராஜு, மத்திய மண்டலத் தலைவர் கே.ஏ.ஆதிநாராயணன், சுகாதார அலுவலர் பி.அருணா, கல்வி அலுவலர் வசந்தா, உதவி ஆணையர்கள் சுப்ரமணியன், அமுல்ராஜ், பிரபாகரன், ரவி, சுந்தர்ராஜ், சரவணன், சுகாதாரக் குழுத் தலைவர் தாமரைச்செல்வி,

நிதிக் குழுத் தலைவர் பிரபாகரன், பணிக்குழு தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், எஸ்.மணிமேகலை, அன்னம்மாள், வெள்ளியங்கிரி, ஜோதிமணி, எஸ்.பாலன், எல்.சி. எண்டோஸ்கோப்பி மைய மருத்துவர்கள் வித்யா ராஜன், கந்தசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் வேலுமணி, ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாடு-நலத்திட்ட உதவிகள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி           17.02.2014

66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாடு-நலத்திட்ட உதவிகள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாட்டு விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மேயர் செ.ம,வேலுச்சாமி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. 32-வது வார்டு சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவை தலைமையேற்று வழிநடத்தும் அதிகாரம் பெற்றிட முதல்- அமைச்சரின் பிறந்தநாளான மகம் நட்சத்திரத்தில் கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 66 யாக குண்டங்களை அமைத்து தமிழில் வேள்வி வழிபாட்டு நிகழ்ச்சி நேற்றுக்காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அதில் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. 66 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு வர்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றை சுற்றி முளைப்பாரி வளர்க்கப்பட்டிருந்தது.காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வேள்வி வழிபாட்டுக்கு கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம் முன்னிலை வகித்தார்.இதைதொடர்ந்து மேயர் செ.ம.வேலுச்சாமி குத்து விளக்கேற்றி யாக வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.இதில் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

66 யாக குண்டங்கள்

அதன் பின்னர் 100 சிவனடியார்கள் 66 குண்டங்களை வளர்த்து திருஞானசம்பந்தர் பாடிய கோளாறுபதிகம் பாடினார்கள்.அதைதொடர்ந்து காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை 11 வேள்விகள் நடத்தப்பட்டன.அதை தொடர்ந்து வேள்வி யாக சாலையில் வைக்கப்பட்ட 2 திருக்குடங்களை மேயர் செ.ம.வேலுச்சாமியும், கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராமும் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.அதில் உள்ள புனித நீரை கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நீராட்டு நடைபெற்றது.பின்னர் பூஜைகள் செய்யப்பட்டன.

யாக குண்டம் வேள்வி வழிபாடு முடிவடைந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 6 இரு சக்கர தள்ளுவண்டிகளும், சி 66 ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகளும், 66 கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட்டும்,66 கிரிக்கெட் குழுவிற்கு விளையாட்டு உபகரணங்கள் உள்பட 2 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார். அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சின்னசாமி, ஓ.கே.சின்னராஜ், துணைமேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள் கணபதிராஜ்குமார், சாவித்திரி பார்த்தீபன், பி.ஆர்.ஜி. அருண்குமார், குழு தலைவர்கள்அம்மன்அர்ஜுன்,பிரபாகரன், வக்கீல்ராஜேந்திரன்,சாந்தாமணி மற்றும் சாரமேடு பெருமாள், கவுன்சிலர்கள் சிங்கைபாலு, வெண்தாமரைபாலு, எஸ்.ஆர்.அர்ஜுனன், சால்ட்வெள்ளிங்கிரி, வீரகேரளம் மயில்சாமி,செந்தில் என்கிற கார்த்திகேயன், ஏகாம்பரம், தமிழ்மொழி,ஜெயந்தி, குணசுந்தரி, நடராசன், மாரப்பன், முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராஜு, மருதாசலம், நா.கருப்பசாமி, சி.டி.சி. கருணாகரன், வக்கீல் கள் ஆறுமுகம், நாகராஜ், பாலகிருஷ்ணன், எஸ்.பி.சந்திரசேகர், அகஸ்டஸ்,ஆர்.சரோஜினி, பீளமேடு துரை,எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஜி.சுப்பிரமணியன்,கள்ளிப்பாளையம் ஊராட்சி செயலாளர் செந்தில் என்கிற கோவிந்தராஜன், மற்றும் சக்கரையப்பன், வெள்ளானைப்பட்டி ராசு, அருண்குணாளன், ஆனந்தி கோவிந்தராஜன் , சங்கர் பிரபு, புத்தா செந்தில்,தம்பி என்கிற சண்முகசுந்தரம், கோல்டுவின்ஸ் ஜி.எஸ்.ரகுபதி, கணபதி க.ஜெயபிரகாஷ், எஸ்.விவேகானந்தன், சம்சுதீன், எஸ்.சண்முவடிவேல், ஆர்.மாணிக்கம், பி.கே.சீனிவாசன்,சேரன்மாநகர் ராஜசேகர்,கேபிள்பஷீர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

பெ.நா.பாளையத்தில் அம்மா திட்ட முகாம்

Print PDF

தினமணி               15.02.2014

பெ.நா.பாளையத்தில் அம்மா திட்ட முகாம்

கோவை வடக்கு வருவாய்த் துறை சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு கோவை, வடக்கு வட்டாட்சியர் முருகன் தலைமை வகித்தார். பெ.நா.பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரன், வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துவங்கி வைத்தார். இதில், ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி  விண்ணப்பங்களும், குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் கோரிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இதில் தகுதியுள்ள 254 பேருக்கு அப்போதே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றியத் தலைவர் வீரபாண்டி விஜயன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே.குருந்தாசலம், ரகுநாதன், மண்டல துணை வட்டாட்சியர் வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 18 of 841