Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு

Print PDF

தினமணி             13.02.2014

எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு

எடப்பாடி நகர்மன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.தனலட்சுமி  புதன்கிழமை பொறுப்பேற்றார்.

 எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2008- 2009-ஆம் ஆண்டு ஆணையராக இருந்தவர் ஏ.அருணாசலம். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிமாறுதலாகிச் சென்றார். அதற்குபிறகு, எடப்பாடி நகர்மன்றத்துக்கு ஆணையர் நியமிக்கப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக நகராட்சிக்கு என தனியாக ஆணையர் நியமிக்கப்படாமல் பொறியாளர்களே கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர். தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமங்கலம் நகர்மன்ற ஆணையராக பணியாற்றி வந்த ஜி.தனலட்சுமி எடப்பாடி நகர்மன்ற ஆணையராக நியமனம் செய்யப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றார். .

இதுகுறித்து தனலட்சுமி கூறியது:  எடப்பாடியை சுற்றிப்பார்க்கும் போது குப்பைகள்தான் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை சீர்படுத்துவதில்தான் என்னுடைய முதல்கவனம் இருக்கும் என்றார் அவர்.

 

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

Print PDF

தினமணி             13.02.2014

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

ஆற்காடு நகராட்சி ஆணையராக பணியாற்றி ஆரணி நகராட்சிக்கு பணி மாறுதலாகிச் செல்லும் செ.பாரிஜாதத்துக்கு பிரிவு உபசார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கீதாசுந்தர் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள்,அலுவலக பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு:2 வேளை மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு

Print PDF

தினமணி             13.02.2014

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு:2 வேளை மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்துவைத்தார். இதையடுத்து மேயர் உள்ளிட்டோர் முதல் விற்பனையை ஆரம்பித்துவைத்தனர். இதில் காலையில் இட்லியும், மதியம் சாம்பார், தயிர் சாதமும் விற்கப்பட உள்ளது.

  மதுரையில் மேலவாசல், புதூர் மாநகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்கெனவே அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில் ஏழை நோயாளிகளும்,  பொதுமக்களும் பயன்படும் வகையில் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுக்கு முன்புறம் ரூ.25 லட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,  காற்றோட்ட வசதி, சூரிய சக்தியில் செயல்படும் வெந்நீர் அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  அம்மா உணவகத்தினை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை திறந்துவைத்தார். இதையடுத்து மருத்துவமனை அம்மா உணவகம் அருகே இருந்த பந்தலில் மாநகராட்சி மேயர் வி.ராஜன்செல்லப்பா அம்மா உணவகத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்துவைத்தார்.   பின்னர் மேயர்,  ஆணையர் கிரண்குராலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.வடிவேல்முருகன், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) ரா.அண்ணாதுரை ஆகியோர் உணவகத்திற்குள் சென்று உணவருந்தி விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நகர் நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர் தேவதாஸ், 36 வது வார்டு கவுன்சிலர் ஆனந்தவள்ளிதங்கம், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  உணவகத்தில் காலையில் இட்லி (ரூ.1) மட்டும் விற்கப்படும். தினமும் 2400 இட்லிகள் விற்கப்படவுள்ளன. மதியம் சாம்பார் சாதம் (ரூ.5) 600 பேருக்கும், தயிர்சாதம் (ரூ.5) 300 பேருக்கும் அளிக்கப்படும். காலை, மதியம் 2 நேரம் உணவகம் என தெரிவிக்கப்பட்டது. 

  மருத்துவமனைக்குள் திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் முதல் நாளே ஏராளமான நோயாளிகள் உறவினர்கள் உணவருந்தினர். இதனால் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

 


Page 20 of 841