Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 250 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி             03.02.2014

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 250 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 250 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

திருப்பூர் மாநகராட்சியின் 2, 3-ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா, திருநீலகண்டபுரத்தில் நடைபெற்றது.

இதற்கு, மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், குப்பை அகற்றும் பணியைத் துவக்கிவைத்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அதிமுக ஆட்சியில் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 2.5 ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக முதல்வர் ரூ. 250 கோடி வழங்கி உள்ளனர். அதன்மூலமாக மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறை, வாகனங்கள் பற்றாக்குறை குறித்து

தமிழக முதல்வரின் கவனத்துக் கொண்டுசென்றேன். அதன் அடிப்படையில், தனியார் நிறுவனம் மூலமாக குப்பை அகற்றும் பணிக்கு முதல்வர் அனுமதி அளித்தார்.

தனியார் நிறுவனம் மூலமாக, குப்பை அகற்றும் பணிகளுக்கு 781 பணியாளர்கள், 28 ஓட்டுநர்கள், 800 குப்பை கொட்டும் கன்டெய்னர் தொட்டிகள் உள்ளிட்ட வசதிகளுடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

நகரை தூய்மையாக வைப்பதற்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேயர் அ.விசாலாட்சி பேசியது:

திருப்பூரில் 2, 3-ஆம் மண்டலப் பகுதிகளுக்கு உள்பட்ட 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 வீடுதோறும் குப்பை சேகரித்தல், வீதிகளில் கன்டெய்னர் தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றும் பணிகள் உள்பட தனியார் நிறுவம் மேற்கொள்ளும் இந்தப் பணிகள் அனைத்தும் நவீனத் தொழில்நுட்பம் மூலமாக அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றார்.

இதில், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், சுகாதாரக் குழு தலைவர்

பூலுவப்பட்டி பாலு, நகர்நல அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய குடிநீர் திட்டங்கள் தயார் மாநகராட்சி அந்தஸ்திற்கு தயாராகிறது தஞ்சாவூர் நகராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்                03.02.2014

புதிய குடிநீர் திட்டங்கள் தயார் மாநகராட்சி அந்தஸ்திற்கு தயாராகிறது தஞ்சாவூர் நகராட்சி கூட்டத்தில் தகவல்

தஞ்சை, : தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாகும் போது அதற்கேற்ப குடிநீர் வசதி செய்து தரும் வகையில் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

தஞ்சை நகராட்சி கூட்டம் நேற்று தலைவர் சாவித்திரி கோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக உறுப்பினர் சண்.ராமநாதன் பேசுகையில், குச்சி வரி ரூ.90, ரூ.100 என இருந்தது. தற்போது 6 மாதத்திற்கு ரூ.300 என உயர்த்தப்பட்டுள்ளது. எனது வார்டில் 100 குடும்பங்கள் இந்த குச்சி வரி செலுத்துகின்றனர். ஆனால் கணக்கில் நிலுவை காட்டப்படுகிறது. 51 வார்டுகளிலும் இப்பிரச்னை உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கோடை காலம் நெருங்கி வருகிறது. மேலும் தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இதில் சேருகின்றன. ஏற்கனவே நகராட்சியில் குடிநீர் பிரச்னை உள்ள நிலையில், இவ்வூராட்சிகளையும் இணைக்கும்போது மேலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த ஆணையர் ரவிச்சந்திரன், தஞ்சை மாநகராட்சியில் 11 ஊராட்சிகள், 1 பேரூராட்சி இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி எல்லைகள் விரிவடையும் போது, பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வசதி செய்து தருவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதற்கான திட்ட பரிந்துரைகள் நகராட்சி நிர்வாக ஆணையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக உறுப்பினர் அருளழகன் பேசுகையில், ஆதார் கார்டுக்கான விண்ணப்பங்களை மொத்தமாக நகராட்சி உறுப்பினர்களிடம் கொடுத்தால் நாங்கள் பொதுமக்களுக்கு விநியோகிப்போம். ஆனால் இங்கு வந்து வாங்கி கொள்ளும்படி கூறி விட்டு, பிறகு அவர்கள் வந்த பின் நகல் இல்லை என மக்களை அலைக்கழிக்கின்றனர் என்றார். திமுக உறுப்பினர் ஜெயலட்சுமி பேசுகையில், எனது வார்டில் பராமரிப்பின்றி உள்ள 3 கழிப்பறைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்றார்.

உறுப்பினர் ராஜேஸ்வரன், தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அருகில் உள்ள பகுதிகளை சேர்க்க தீர்மா னம் போடப்பட்டதற்கு பின்னர் மேலும் சேர்க்கப் பட உள்ள பகுதி எது? என்றார்.
இதற்கு ஆணையர், தஞ்சை மாநகராட்சியில் 11 ஊராட்சிகள், ஒரு பேரூ ராட்சி சேர்ப்பதற்கு ஏற்க னவே தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது. எந்தெந்த ஊராட்சி சேர்க்கப்படும் என ஆய்வு செய்து, அப்பணிகள் முடிக்க குறைந்த பட்சம் இரண்டரை ஆண்டுகள் ஆகும் என்றார். தொடர்ந்து ராஜேஸ்வரன் பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள பாலத்தை விரிவுபடுத்த நகராட்சி மூலம் தீர்மானம் போடப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்படுகிறது என்றார்.

இதற்கு தலைவர் சாவித்திரி கோபால், தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறையிலிருந்து முடிவு வந்த பின்னர் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து ராஜேஸ்வரன், நகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பணி முடிந்த பின் சாலையை யார் போட வேண்டும். அப்படி நகராட்சி நிர்வாகம் தான் போட வேண்டும் என்றால் உடனடியாக சாலையை போட்டு போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு ஆணையர், நகராட்சி நிர்வாகம் தான் அந்த பகுதிகளில் சாலை போட வேண்டும். அதன்படி சாலை போடப்படும் என்றார்.

திமுக உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், கேபிள் பதிப்பிற்காக சாலைகளை தோண்டி அப்படியே போட்டு செல்கின்றனர். இதை சீர் செய்ய வேண்டும். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கின் வலது புறத் தில் கடும் துர்நாற்றம் வீசுகிற க்ஷ்து. இதற்கு அருகில் பேருந்து நிலையத்தின் கழிவறையிலிருந்து இவ்வாறு துர்நாற்றம் வருகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்றார். திமுக உறுப்பினர் பாலசுப்பிரமணியன், எனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கழிவறைகளை புதிதாக கட்டித் தர வேண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் சாமிநாதன், மேலவீதி, வடக்கு வீதி பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. தற்போது இவ்வழியாக கும்பகோணம் நோக்கி செல்லும் பேருந்துகள் திருப்பி விடப்பட்டுள்ளன. பேருந்துகள் அதிக வேகமாக செல்கிறது. பள்ளி விட்டு வரும் மாணவ, மாணவிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகள் பேருந்து வரும் வேகத்தை பார்த்து தடுமாறி கீழே விழுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் இவ்வழியாக வரும் பேருந்துகளை பழையபடி பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று வருமாறு செய்ய வேண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் சரவணன் பேசுகையில், எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. மாடுகளும் உலவி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் நெடுஞ்சாலை ஓரம் கடைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.மாடு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் கனகராஜ் பேசும்போது, தஞ்சை நகரில் மாடுகள் இஷ்டம் போல் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்றார். இதற்கு நகராட்சி ஆணையர், தஞ்சை நகரில் யார்? யார் மாடு வைத்துள்ளனர் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 178 பேர் மாடு வைத்துள்ளனர். இவர்கள் மாடுகளை வெளியில் விடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீறி மாடுகளை நகருக்குள் விட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

ரூ.18 லட்சம் நிதியில் வளர்ச்சிப் பணிகள்: திண்டிவனம் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி             01.02.2014

ரூ.18 லட்சம் நிதியில் வளர்ச்சிப் பணிகள்: திண்டிவனம் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கி, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டிவனம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.வி.முகமதுஹரிப் உள்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 6 வார்டுகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்க ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியும், காட்ராம்பாக்கம் தலைமை நீரேற்று நிலையத்தில் உடைந்த இணைப்பு குழாய் சரி செய்ய ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியும், வார்டு எண் 10-ல் வடிகால் வசதி அமைத்து தர ரூ.2 லட்சம் நிதியும், காவேரிப்பாக்கம் தொடக்கப்பள்ளி மராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.7 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் தேவையான மின் வசதி, குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டது. கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 5 of 160