Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் தகவல்

Print PDF

தினத்தந்தி                30.01.2014

மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் தகவல்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட் டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளது என்று மண்டல கூட்டத்தில் தலைவர் ஜான் கூறினார்.

மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் தொட்டிபாளையம் மண்டல கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலை வர் ஜான் தலைமை தாங்கி னார். மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுகுமார் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பிரச் சினை குறித்து கூறிய தாவது:-

சபரீஸ்வரன்:- குமாரசாமி நகரில் சிமெண்ட் ரோடு போட வேண்டும். பாதாள சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும். கங்கா நகரில் உள்ள ரேஷன் கடை வீதி, கல்யாண மண்டப வீதியில் சாக்கடை கால்வாய் அமைத்து தார்சாலை போட வேண்டும். கேத்தம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ- மாணவி களுக்கு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.

கால்வாயில் அடைப்பு

கனகராஜ்:- எனது வார்டில் உள்ள மயான பகுதியில் தனியார் மற்றும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண் டும். லக்கி நகரில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற் பட்டு சாக்கடை நீர் ரோட்டில் செல்கிறது. அடைப்பை சரி செய்ய வேண்டும். பிச்சம்பாளையம் புதூர் அரசு பள்ளியில் உள்ள கழிப்பிடம் மோசமாக உள்ளது. இதை பராமரிக்க வேண்டும்.

விஜயகுமார்:- கண்ண பிரான்நகர், அவினாசிநகர், சதாசிவம் நகரில் 6 மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டும் இன்னும் மின் இணைப்பு கொடுக்கப் படவில்லை மின் இணைப்பு கொடுத்து உப்பு தண்ணீரை உடனடியாக வினியோகம் செய்ய வேண்டும். போயம் பாளையம் பகுதியில் இடம் (சைட்) பிரித்து விற்பவர்கள் மாநகராட்சியிடம் தார் சாலையை ஒப்படைக்க வில்லை. இந்த நிலையில் அங்கு கட்டிடம் கட்டியவர் களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வரி போடப்பட்டுள்ளது. அதே சமயம் தார்சாலை ஒப்படைத்த பகுதி மக்கள் உரிமம் பெற முறைப்படி கோரியும் அனுமதி வழங்கப் படவில்லை.

மின் இணைப்பு

கலைவாணி:- வாவிபாளை யம் தெற்கு பகுதியில் உள்ள அரிஜன காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டித் தர வேண்டும். இந்த பகுதி களில் கடந்த 6 மாதமாக 2-வது திட்ட குடிநீர் வருவ தில்லை. குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையத்தில் ஆழ்குழாய் கிணறு போடப் பட்டும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

அமுதா:- எம்.ஜி.ஆர். காலனி, சத்யா காலனி 7-வது வீதியில் சாக்கடை கழிவு நீர் நடுரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. ஐஸ் வர்யா நகர் எம்.ஜி.ஆர்.நகரில் குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. அப்பகுதிக்கு டிரான்ஸ்பார்ம் அமைத்து தர வேண்டும்.

உமா மகேஸ்வரி:- கொசு மருந்து அடிக்க வாரா வாரம் 2 பேர் தான் வருகிறார்கள். கூடுதலாக ஆட்கள் அனுப்ப வேண்டும். கவுன்சிலர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து மண்டல தலைவர் ஜான் பேசியதாவது:-

194 தீர்மானங்கள்

வார்டு முழுவதும் அனைத்து ஆட்களையும் வரவழைத்து கொசு மருந்து அடிக்கப்படும். தொடர்ந்து 15 வார்டுகளி லும் இதே முறை பின்பற்றப்படும். 18-வது வார்டு தி.மு.க. வார்டு. பெரிய வார்டு, அந்த வார்டுக்கு மட்டும் ரூ.3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கவுன்சிலர் கள் கூறிய அனைத்து பிரச்சினைகளும் அடுத்த கூட்டத்திற்குள் சரி செய்ய நட வடிக்கை எடுக்கப் படும். 194 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2-வது மண்டலத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்த அருண் வரி வசூலில் சுணக்கம் காட்டியதால் 10 நாட்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய் யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மண்டல தலைவர் ஜான் பேசினார்.

 

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் குடிநீர் குழாய் மாற்ற ரூ.17.20 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்                30.01.2014

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் குடிநீர் குழாய் மாற்ற ரூ.17.20 கோடி ஒதுக்கீடு

குமாரபாளையம்: நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய்கள் புதிதாக மாற்றி அமைக்க, குமாரபாளையம் நகராட்சிக்கு, 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. 7.5 கி.மீ., பரப்பளவு கொண்ட இந்நகராட்சியில், நிலத்தடியில் பதிக்கப்பட்ட குடிநீர் மெயின் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால், தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இக்குழாய்கள், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றை சரி செய்யும் வகையில், நகராட்சி பகுதியில் பதிக்கப்பட்டுள்ள அனைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும், அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றில் உள்ள நீரேற்று குழாய்கள் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக அரசு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

நகராட்சி கமிஷனர் சங்கரன் கூறியதாவது:

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடியில் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் உறுதித்தன்மை இழந்ததால், அதிக அளவில் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அவற்றை சரி செய்யும் வகையில், திட்டம் தயார் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டது. அதன் அடிப்படையில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணி விரைவில் துவங்கப்படும். இப்பணி முழுமை அடையும்போது, நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி, குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

நெய்யூர் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014

நெய்யூர் பேரூராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

குளச்சல் அருகே நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள பிரின்ஸ் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி கொடுமுடியில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ரேஷன் கடை கட்டிடமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் செம்பொன்விளை குளலிவிளையில் சிமெண்டு தளமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கு நெய்யூர் சிவ சக்தி விநாயகர் கோவில் அருகே கலையரங்கமும், ரூ.3 லட்சம் செலவில் முரசங்கோடு பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடமும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஆலங்கோடு பகுதியில் சிமெண்டு தளமும், சரல்விளை சி.எஸ்.ஐ. சபை அருகே ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் தார்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு நெய்யூர் பேரூராட்சி தலைவர் பால்சேகர் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் செல்வதாஸ், பென்டேவிட், வின்சென்ட், ஜோலின், மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிகளை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளாட்சன், சாமுவேல் சேகர், ரத்தினகுமார், முரசங்கோடு பங்குதந்தை ஜான்கென்னடி, ஞானதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 6 of 160