Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நெல்லை மாநகர பகுதியில் 21 கோடியில் தார் சாலைகள், கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்

Print PDF

தினத்தந்தி           19.11.2013

நெல்லை மாநகர பகுதியில் 21 கோடியில் தார் சாலைகள், கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தகவல்

நெல்லை மாநகர பகுதியில் 21 கோடி செலவில் தார் சாலைகள், கழிவு நீர் ஓடைகள் சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் விஜிலா சத்யானந்த் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஆணையாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் படித்தார். தொடர்ந்து அவர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:–

அருட்தந்த சேவியர் தனி நாயகம்

அருட்தந்தை சேவியர் தனி நாயகம் அடிகளார் இலங்கையில் 2–8–1913–ம் ஆண்டு பிறந்தார். அவர், தமிழ்மொழி குறித்த தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தமிழ் அறிஞர்களை இணைத்து முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் 1966–ம் ஆண்டு நடத்தினார்.

அவர் நெல்லை மாநகர பகுதியில் வசித்தார். மேலும் அவர், 1940 முதல் 1945 வரை வடக்கன் குளம் புனித தெரசா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காகவே வாழ்ந்த சேவியர் தனிநாயகம் நூற்றாண்டு விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர், தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காகவும், நெல்லையில் வசித்தாலும் நெல்லை பொருட்காட்சி திடலின் நினைவு நடுகல் அமைத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. அந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது.

தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

தெருவிளக்கு

சேகர் (அ.தி.மு.க.):– எனது வார்டு பகுதியில் 3 நாட்களாக இரவும், பகலும் தெரு விளக்குகள் எரிந்தன. இன்று (அதாவது நேற்று) காலை 10 மணிக்கு தான் அந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்சாரம் அதிக அளவு தேவைப்படும் இந்த காலத்தில் 3 நாட்கள் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிந்தால் எப்படி? அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

உதவி ஆணையாளர் (பொறுப்பு) சாந்தி:– எனது கவனத்துக்கு வந்தது. மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். மின் இணைப்பில் பழுது ஏற்பட்டதாக கூறினார். அதை சரி செய்து தெரு விளக்கை அணைத்து இருக்கிறார்.

எல்.இ.டி. பல்புகள்

மேயர்:– நெல்லை மாநகர பகுதியில் எல்.இ.டி. பல்புகள் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த விளக்குகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரகாசமாக எரியும். அதற்கு மேல் குறைந்த அளவு ஒளியில் எரியும். இதனால் மின் சிக்கனம் ஏற்படும். அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் நெல்லை மாநகராட்சி பகுதியில் எல்.இ.டி. பல்புகள் பெருத்தி விடலாம்.

சுப்பிரமணியன் (தி.மு.க.):– எல்.இ.டி. பல்புகளை சோதனை செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் மத்தியில் சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்.

மேயர்:– கவுன்சிலர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்படும். அதன் பிறகு மாநகராட்சி பகுதியில் பொருத்தலாம்.

போக்குவரத்து நெரிசல்

பரமசிவன் (அ.தி.மு.க.):– நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:– நெல்லை டவுனில் இருந்து குலவணிகர்புரம் வரையும், நெல்லை சந்திப்பு அண்ணா சிலையில் இருந்து பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வரையும் இருபுறமும் சாலைகளை அகலப்படுத்தப்படும். பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடை மேடை அமைக்கப்படும்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் சாலைகளை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், கழிவு நீர் ஓடைகளை சரிசெய்ய வேண்டும் என்று பேசினார்கள்.

21 கோடியில் புதிய திட்டம்

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர், “நெல்லை மாநகர பகுதியில் தார் சாலைகள், கழிவு நீர் ஓடைகள் சீரமைக்க ரூ.21 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசு அனுமதி வழங்கிய உடன் பணி தொடங்கும்.

இந்த பணி நிறைவடைந்தால், மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. கழிவு நீர் தண்ணீர் ஓடைகளில் தங்காது“ என்று பேசினார்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

திண்டுக்கல், தஞ்சை மாநகராட்சிகள் உருவாக்க சட்ட முன் வடிவு தாக்கல்

Print PDF

தினமலர்            30.10.2013

திண்டுக்கல், தஞ்சை மாநகராட்சிகள் உருவாக்க சட்ட முன் வடிவு தாக்கல்

சென்னை: திண்டுக்கல், தஞ்சை நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்ட முன் வடிவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:

மக்கள் தொகை அதிகரித்தல், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், உள்ளாட்சி அமைப்பின் ஆண்டு வருமானம் அதிகரித்து வருதல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சை நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு, செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சிறப்பு சட்டம் உருவாக்க, சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்படுகிறது.

இவ்வாறு, சட்ட முன் வடிவில் கூறப்பட்டுள்ளது.

 

அன்னூர் பேரூராட்சி வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை

Print PDF

தினகரன்             09.10.2013

அன்னூர் பேரூராட்சி வளர்ச்சி பணிக்காக ரூ.1 கோடி நன்கொடை

அன்னூர், : அன்னூர் பேரூராட்சி வளர்ச்சிப் பணிக்காக விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுக சாமி ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.

அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோயில் திடலில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவைத் திட்டம் துவக்க விழா தாசில்தார் சம்பத் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் பச்சையப்பன் வரவேற்புரையாற்றினார். அன்னூர் ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மாள், அன்னூர் பேரூராட்சி தலைவர் ராணி, தாசபளஞ்சிக சங்க தலைவர் பொன்னுச்சாமி, ஊர் கவுண்டர் லோகநாதன், தேசிய சேவா சங்க தலைவர் சுராஜ்குருசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர் பூமணி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி கலந்து கொண்டு, உலக சமுதாய சேவா சங்கத்திற்கு சொக்கம்பாளையம் கிராம வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். மேலும் அன்னூர் பேரூராட்சி வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வழங்குவதாகவும் அறிவித்தார். அதை நமக்கு நாமே திட்டத்தில் சேர்த்து அதில் வரும் பங்களிப்புடன் அன்னூர் பேரூராட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பேசுகையில் “சொக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களை கிராமிய சேவைத் திட்டம் தத்தெடுக்கிறது, தினசரி பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நோயற்ற வாழ்வு, அகத்தூய்மை, குடும்ப அமைதி, முதியோரை மதித்தல், பாதுகாத்தல், கர்ம யோக வாழ்க்கை நெறி, சமுதாய விழிப்புணர்வு, மனித நேயம், மத நல்லிணக்கம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் ஆரோக்கியமான அமைதி நிறைந்த கிராமமாக மாற்றப்படும், இத்திட்டத்தின் மூலம் இக்கிராம மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள்’’ என்றார்.

இத்திட்டத்தின் மூலம் சொக்கம்பாளையத்தில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டன. மண்டல செயலா ளர் ஹரிதாஸ் நன்றி தெரிவித்தார். விழாவில் அன்னூர் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயலாளர் திருவேங்கடம், பொரு ளாளார் சுந்தரம், ராஜேந்திரன், கங்காதரன், ராமசாமி, ஆசிரியர்கள் நஞ்சையன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 11 of 160