Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பாதாள சாக்கடை வேலை நின்றதால் சாலை பணிகள் பாதிப்பு சென்னை மேயர் தகவல்

Print PDF

தமிழ் முரசு               19.06.2013

பாதாள சாக்கடை வேலை நின்றதால் சாலை பணிகள் பாதிப்பு சென்னை மேயர் தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஆலந்தூர்:சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்துக்கு உட்பட்ட 169 வது வார்டு பாலாஜி நகரில் 56 லட்ச ரூபாய் செலவில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சிறுவர் விளை யாட்டு திடல், நடை பயிற்சி மேடை மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் மற்றும் மக்கள் பொழுதுபோக்க இருக்கை அமைத்துள்ளனர்.பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவுக்கு கவுன்சிலர் ஜெ.கே.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சின்னையா கலந்துகொண்டு பூங்காவை திறந்து வைத்தார். உயர் கோபுர மின்விளக்கை மேயர் சைதை துரைசாமி இயக்கி வைத்து,  பேசும்போது, ‘‘200 பூங்கா அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 14 வது மண்டலத்தில் 250 கோடி ரூபாய் செலவில் நவீன சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 500 சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

விழாவில், சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்பி, கே.பி.கந்தன் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ராஜராம், மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடம், முன்னாள் கவுன்சிலர்கள் சிவசங்கரன், பத்மநாபன், தியாகராஜன், தனசேகர், டில்லிபாபு, ஜவகர், ரஞ்சித் குமார் கலந்துகொண்டனர்.

 

கோபியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

கோபியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் பஸ்சுக்காக காத்து நிற்கும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையாளர் பா.ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.

இதேபோல் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கோபி நகராட்சிக்கு உள்பட்ட சாமிநாதபுரம், செங்கோட்டையன் காலனி, சீதாலட்சுமிபுரம், விவேகானந்தர் வீதி, யாகூப் வீதி ஆகிய 5 இடங்களில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக ஆழ்துளை கிணறுடன் கூடிய, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த புதிய குடிநீர் தொட்டிகளையும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இந்த விழாவில் நகராட்சி நிர்வாக என்ஜினீயர் கிருஷ்ணக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரினீயோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல்முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

ரூ.20 லட்சத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள்

Print PDF

தினமணி               18.06.2013 

ரூ.20 லட்சத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள்

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் உதயேந்திரத்துக்கு குடிநீர் வழங்க அம்பலூர் எக்லாஸ்புரம் பாலாற்றில் 2 ஆழ்துளை கிணறு தோண்டுதல், மின்மோட்டார்கள், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

திடக் கழிவு மேலாண்மை திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடுகள்தோறும் குப்பைகளை சேகரித்து உரம் தயாரிக்க அனுமதி அளித்தல் உள்பட 11 தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜெகன், செயல் அலுவலர் முஹம்மத் ரிஜ்வான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 16 of 160