Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சியின் அம்மா திட்டம் துவக்கம்

Print PDF
தினமணி       07.04.2013

மாநகராட்சியின் அம்மா திட்டம் துவக்கம்


மதுரை மாநகராட்சி சார்பில்  செயல்படுத்தப்படும் அம்மா திட்டத்தை (அழகிய மதுரை மாநகர் திட்டம்) 85 ஆவது வார்டு ஜான்சிராணி பூங்கா திடல் பகுதியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சனிக்கிழமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அவர் பேசியது:  மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், 100 வார்டுகளிலும் இத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

தென் மாவட்டங்களை தொழில் நகரமாக மாற்றவும், மதுரை மாநகரை வளர்ச்சி அடைந்த நகரமாக மாற்றுவதற்கு முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் உதவியாக இருக்க வேண்டும்.  சென்னையில் துவங்கப்பட்டதைப் போல, மதுரை மாநகராட்சிப் பகுதியிலும் விரைவில் அம்மா உணவகம் துவங்கப்பட உள்ளது என்றார்.

மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா:

அம்மா திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள 10 குழுக்கள் மூலம், வார்டு முழுவதும் குப்பை அகற்றும் பணி, சாலையில் தேங்கியுள்ள மணல் குவியல்கள் மற்றும் கட்டடக்  கழிவுகளை அகற்றுதல், திறந்தவெளிச் சாக்கடை மற்றும் மழைநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணி, குடிநீர் அடிபம்ப் பழுது நீக்குதல் மற்றும் குடிநீர் கசிவை தடுத்தல், பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்குதல், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, தெருவிளக்கு பராமரிப்பு, கொசு ஒழிப்பு, பொது கழிப்பறைகள் பராமரிப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.  மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ரூ.54 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF
தினமணி                06.04.2013

ரூ.54 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்


காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.54.50 லட்சத்தில் மேம்பாட்டு திட்டப் பணிகளை விஸ்வநாதன் எம்.பி. புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் துணை சுகாதார நிலையம் முத்தியால்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையத்தின் பழைய கட்டங்களை புதுப்பிக்க வேண்டும். கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பேரில், அப்பணிகளுக்கு காஞ்சிபுரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதாக விஸ்வநாதன எம்.பி. உறுதியளித்திருந்தார்.

அதன்படி முத்தியால்பேட்டு துணை சுகாதார நிலைய பழையக் கட்டடம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டது. புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடந்தது.

விஸ்வநாதன் எம்.பி. அடிக்கல் நாட்டினார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ், ஊராட்சித் தலைவர் ஜோதியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் உயர்நிலைப்பள்ளியில் ரூ.6 லட்சம் செலவில் கூடுதல் பள்ளிக் கட்டடத்துக்கும் எம்.பி. அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் நகராட்சி சிங்கபெருமாள் கோயில் மாடவீதி முதல் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு வரை ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

காது கேளாதோர் பள்ளியில் ரூ.3 லட்சத்தில் சமையலறைக் கட்டடம், தலா ரூ.3 லட்சம் செலவில் காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் ஆழ்குழாய் கிணறு, தண்ணர் தொட்டி மற்றும் மின் கோபுர விளக்கு,

நகராட்சி சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் புதிய பள்ளிக்கட்டடம், ரூ.2 லட்சத்தில் புத்தேரி தெருவில் பயணிகள் நிழற்குடை, ரூ.2.5 லட்சம் செலவில் கைலாசநாதர் கோயில் தெருவில் சத்துணவுக் கூடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
 

ராயபுரம் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.75 கோடிசேத்துப்பட்டு ஏரியில் படகு சவாரி-பசுமைப் பூங்கா

Print PDF

தினமணி                06.04.2013

ராயபுரம் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.75 கோடிசேத்துப்பட்டு ஏரியில் படகு சவாரி-பசுமைப் பூங்கா

 


Page 19 of 160