Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சென்னையின் காற்றின் தரம் உயர்வு; மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Print PDF

தினமலர்        05.08.2021

சென்னையின் காற்றின் தரம் உயர்வு; மாசு கட்டுப்பாட்டு வாரியம்
 
Chennai, Air Quality, சென்னை, காற்று தரம்

சென்னை: சென்னை மாநகரில் கொரோனா 2வது அலையால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.

சென்னையில் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் காற்றின் தரமானது திருப்தி என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், கொரோனா 2வது அலையில், ஊரடங்கின் காரணமாக வாகனப் போக்குவரத்து குறைந்ததால், ஏப்ரல், மே மாதங்களில், கத்திவாக்கம், ராயபுரம், பெருங்குடி, கோயம்பேடு ஆகிய இடங்களில் காற்றின் தரமானது நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


latest tamil news
ஆனால், தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் அதிக பயன்பாடு, ஜெனரேட்டர் எரிபொருள் பயன்பாடு, கட்டுமான வேலைகள் போன்ற காரணங்களால் காற்றின் தரமானது மீண்டும் குறைந்து வருகிறது. சென்னையில் உள்ள ஆலந்தூரில் அமைந்துள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவின்படி காற்றின் தரம் பி.எம்.2.5 என்ற மிதமான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.
Last Updated on Thursday, 05 August 2021 12:00
 

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை: நெல்லையில் 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தி இந்து        25.03.2017

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை: நெல்லையில் 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சியில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் மக்காத மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

9 டன்னாக குறைந்தது

தொடக்கத்தில் புதன்கிழமை தோறும் 13 டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டன. தற்போது இது 9 டன்னாக குறைந்துள்ளது. மக்களிடையே பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாடு குறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

மேலும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாக, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இதுவரை தச்சநல்லூர் மண்டலத்தில் ரூ.52,700, பாளையங்கோட்டை மண்டலத்தில் 50,500, மேலப்பாளையம் மண்டலத்தில் 30,900, திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.54,600 என்று மொத்தம் ரூ.1,88,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு திடக்கழிவை உருவாக்கும் உணவகங்கள், திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், 5,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகங்கள் மக்கும் குப்பையை வளாகத்தினுள்ளேயே தங்களது சொந்த பொறுப்பில் உரமாக்கவோ அல்லது எரிவாயு தயாரிக்கவோ வேண்டும் என்றும், ஏப்ரல் 8-ம் தேதிக்குப் பின்னர் அவர்களது வளாகத்திலிருந்து மக்கும் குப்பைகளை பெற இயலாது என்றும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

செயல் விளக்கம்

கடந்த 10-ம் தேதி இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, உயிரி எரிவாயு உருவாக்கும் நிறுவன நிபுணர்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இயந்திர நிறுவனங்களின் நிபுணர்களால் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள், அம்மா உணவகங்களில் இவர்கள் தல ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை எடுத்து சென்று பரிசோதித்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 27 March 2017 10:55
 

ரிப்பன் மாளிகையில் பூத்து குலுங்கும் 28 வகையான மரங்கள் நட திட்டம்

Print PDF

தினமலர்       05.01.2015

ரிப்பன் மாளிகையில் பூத்து குலுங்கும் 28 வகையான மரங்கள் நட திட்டம்

 

சென்னை : ரிப்பன் மாளிகை வளாகத்தில், பூத்து குலுங்கும் 28 வகையான மரங்களை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகம் 11.4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது ரிப்பன் மாளிகை, இணைப்பு கட்டடங்கள், நான்கு தளங்கள் கொண்ட புதிய இணைப்பு கட்டடம், விக்டோரியா மாளிகை ஆகியவை இந்த வளாகத்தில் உள்ளன.அதில், புதிய கட்டடம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா மாளிகை ஆகிய மூன்றை தவிர, மற்ற அனைத்து இணை கட்டடங்களையும் இடித்து தள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இடங்களை பசுமையாக வும், பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வில்வம், புன்னை, வேம்பு, பவளமல்லி, நாகலிங்கம், வென்நாகு, வெள்ளைகுடம்பா, நிலத்திருவட்டி, மருதமரம், புங்கமரம், ஆலமரம், பளசுமரம், இளவமரம், அரசமரம், மூங்கில் மரம், செண்பகம், சந்தனம், தென்னை, வாழை, நெல்லி, பச்சிளை, அசோகம், இளந்தை, நாவல், மாமரம், கல்யாண முருங்கை உட்பட 28 வகையான மரங்கள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடவு செய்ய வடிவமைப்பு தரப்பட்டு உள்ளது.இந்த மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மாதங்களில் பூத்துகுலுங்கும். இந்த அனைத்து வகை மரங்களையும் வளாகத்தில் நடுவதன் மூலம், ஆண்டு முழுவதும் பூத்து குலுங்கும் இயற்கை எழிலுடன், ரிப்பன் மாளிகை வளாகம் பசுமையாக இருக்கும். தற்போது வளாகத்தில் 156 மரங்கள் உள்ளன. அவை அப்படியே பராமரிக்கப்படும். புதிதாக எவ்வளவு மரங்களை நடுவது என இறுதி செய்யவில்லை.

விக்டோரியா மாளிகையை ஒட்டி 2,000 கார்களை நிறுத்தும், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கான உணவகம், பூங்கா தனியேஏற்படுத்தப்படும்.மதிப்பீடுகள் விரைவில் தயார் செய்யப்பட உள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாகம் ரிப்பன் மாளிகையின் முன்புறமும், விக்டோரியா மாளிகை பகுதியிலும் பணி மேற்கொண்டுள்ளது.வரும் ஜூலையில், இந்த இடங்களில் பணி முடித்து, மாநகராட்சி நிலத்தை திரும்ப தருவதாக அந்நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. நிலம் கைக்கு வந்ததும், உலகத்தர பூங்கா அமைக்கும் பணிகளை துவங்கும் வண்ணம், ஒப்பந்தம் கோரி, தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 135