Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ரூ. 5.94 லட்சம் நிதி பசுமை பூங்கா அமைக்க அள்ளித்தந்த வள்ளல்கள்

Print PDF

தினகரன்          21.11.2013  

ரூ. 5.94 லட்சம் நிதி பசுமை பூங்கா அமைக்க அள்ளித்தந்த வள்ளல்கள்

திருச்சி,: திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப் பூர் பசுமை பூங்கா அமைக் கும் திட்டத்தில் மரங்கள் வளர்க்க பசுமை ஆர்வலர் கள் நேற்று வரை 198 பேர் ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் வைப்பு நிதி  வழங்கியுள்ளனர். ஆர்வம் உள்ளவர் கள் இந்த திட்டத்தில் பங்கேற்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் பஞ்சப்பூரில் மாநகராட் சிக்கு சொந்தமான 5 ஏக் கர் நிலப் பரப்பில் பசுமை பூங்கா உருவாக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மூலிகை செடிகள், தியான மண்டபம், சிறிய அளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர்கள் பய ன்படுத்தும் ரயில் வண்டி ஆகியவை அமைக்கப்படுகிறது.

பசுமை திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை ஆர்வலர்களிடம் ரூ.3 ஆயிரம் வைப்பு தொகை யாக பெற்றுக் கொண்டு அவர்களின் பெயரில் ஒரு மரம் வளர்த்து மாநகராட்சியால் பராமரிக்கப்படும். இப்பசுமை திட்டத்தில் திருச்சி மகாத்மா காந்தி பள்ளியில்  6ம் வகுப்பு படி க்கும் மாணவி அக் ஷயா திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணியிடம் ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

பசுமை திட்டத்திற்கு ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களில் இதுவரை மொத்தம் 198 பேர் தங்கள் பெயரில் மரம் வளர்க்க இணைத்துக் கொண்டு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும் பசுமை பூங்காவில் தங்கள் பெயரில் மரம் வளர்க்க ஆர்வம் உள்ளவர் கள் திருச்சி மாநகராட்சி அலுவலர்களை அணுகலாம்.

இதுதொடர்பான விபரங்களை அறிய 76395- 66000 என்கிற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.

 

சூரிய மின்மயமாகிறது நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம்

Print PDF

தினமலர்          19.11.2013

சூரிய மின்மயமாகிறது நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம்

சென்னை, நகராட்சி ஆணையர் அலுவலகத்தில், 1 கோடி ரூபாய் செலவில், சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், நிலவும் மின் பற்றாக்குறையை, சமாளிக்க, சூரிய மின் உற்பத்தி கொள்கையை, தமிழக அரசு, அறிவித்து உள்ளது. இதன்படி, தனியார் வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில், சூரிய மின் உற்பத்தியை, அதிகரிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. தனியார், சூரிய மின் உற்பத்தியை, மேற்கொள்ள, அரசு மானியம் அளிக்கிறது. அரசு அலுவலகங்களில், அரசே, சூரியமின், உற்பத்தி நிலையங்களை அமைக்கிறது.

எழிலகத்தில்...

கவர்னர் மாளிகை, முதல்வர் அலுவலகம் ஆகியவற்றில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், அமைக்க நடவடிக்கை, எடுக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில், சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படுகிறது. சென்னை, எழிலகத்தில் உள்ள, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், 50 கிலோவாட், மின் திறன் கொண்ட, சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்க, ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அத்துறையின், மூத்த அதிகாரி ஒருவர்,கூறியதாவது:

தமிழக அரசின், சூரிய மின் உற்பத்தி, கொள்கையின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைக்கப்படுகிறது. ஆறு மாடிகள் கொண்ட, இந்த கட்டடத்தின் மேற்பரப்பில், 50 கிலோ வாட், திறன் கொண்ட, சூரியமின் உற்பத்தி நிலையம், அமைக்கப்பட உள்ளது.

பெரும்பகுதி கிடைக்கும்

தமிழ்நாடு, எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய அரசின் புதுப்பிக்க தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, இதன் கட்டுமான பணி ஒப்படைக்கப்படும்.

சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, ஐந்தாண்டுகளுக்கு பராமரித்து தர வேண்டும் என்ற, ஒப்பந்தத்தில், பணி வழங்கப்படுகிறது.

சூரிய மின் உற்பத்தி நிலையம், அமைப்பதன் மூலம், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு, தேவைப்படும், மின்சாரத்தில் பெரும் பகுதி பூர்த்தியாகும். இந்த திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 

கிழக்கு மண்டல அலுவலகத்தில் தினசரி 40 யூனிட் சூரிய மின்உற்பத்தி

Print PDF

தினத்தந்தி            07.11.2013

கிழக்கு மண்டல அலுவலகத்தில் தினசரி 40 யூனிட் சூரிய மின்உற்பத்தி

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.

மின் உற்பத்தி திட்டம்

கோவை மாநகராட்சி¢ கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரூ.9.70 லட்சம் மதிப்பில் 7.5 கிலோ வாட்ஸ் சூரிய (சோலார்) மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்குவதற்கு பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அவரது முந்தைய ஆட்சி காலத்தில் தான் அதிக அளவு மின் உற்பத்திக்கான காற்றாலைகள் நிறுவப்பட்டன. அதே போல் தற்போது மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சூரிய மின் சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சோலார் நகரம்

கோவை மாநகராட்சி சோலார் நகரமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 நகரங்களில் தமிழகத்தில் முதன்மை நகரமாக உள்ளது. இதனால் இந்த மாநகராட்சியில் நிறுவப்படும் சோலார் மின் திட்டங்களுக்கு அதிக அளவு மானியம் பெறப்படுகிறது. சோலார் நகரமாக உயர்த்துவதன் முதல் கட்டமாக மாநகராட்சி அனைத்து அலுவலகங்களிலும் சோலார் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார் மின் சக்தி திட்டங்கள் அமைத்திட பணிகள் மேற்கொள்ளப்படும்.

40 சதவீதம் சேமிப்பு

தற்போது மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள 7.5 கிலோ வாட்ஸ் சோலார் மின் உற்பத்தி முலம் நாள் ஓன்றுக்கு 40 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனால் இம்மண்டல அலுவலகத்திற்கான மின் தேவையில் 40 சதவீதம் சேமிக்கப்படுவதுடன் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. மேலும் 7 ஆண்டுகளில் சோலார் மின் திட்டத்திற்கு செலவிடப்பட்ட முதலீட்டு தொகையும் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

யார்-யார்?

நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் க.லதா, துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு. மண்டலத்தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், ராஜ்குமார், பெருமாள்சாமி, நிலைக்குழுத்தலைவர்கள் தாமரை செல்வி, செந்தில் குமார், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகர பொறியாளர் சுகுமார், நிர்வாக பொறியாளர் லட்சுமணன், உதவி கமிஷனர் பிரபாகரன், கவுன்சிலர்கள் மாரப்பன், சால்ட் வெள்ளிங்கிரி, பால்ராஜ், முத்துசாமி, செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 10 of 135