Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Print PDF

தினமலர் 28.09.2009

Last Updated on Tuesday, 28 July 2009 09:17
 

ஆகஸ்ட் 15 முதல் மெரீனா கடற்கரையில் "பிளாஸ்டிக்' பொருள்களுக்கு தடை

Print PDF

தினமணி 28.07.2009

ஆகஸ்ட் 15 முதல் மெரீனா கடற்கரையில் "பிளாஸ்டிக்' பொருள்களுக்கு தடை



ஆகஸ்ட் 15 முதல், மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை சிறுகடை வியாபாரிகளிடம் விளக்குகிறார் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஜூலை 27: சென்னை மெரீனா கடற்கரையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வியாபாரிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னையை எழில்மிகு நகராக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அண்ணா சாலையில் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் பண்பாட்டை விளக்கும் வகையில் ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து மேம்பாலங்களிலும் சுரங்கப் பாதைகளிலும் சுவரொட்டிகள் ஒட்டவும், சுவர் விளம்பரங்கள் தீட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையை மேம்படுத்த ரூ. 40 கோடியில் பணிகள்: மெரீனா கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் ரூ.40 கோடியில் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனவளர்ச்சி பாதிப்பும், சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. மக்களின் நலத்துக்கும் பேராபத்து ஏற்படுகிறது.

எனவே, முதற்கட்டமாக பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் இல்லாத மெரீனா கடற்கரையை உருவாக்கும் வகையில், இப் பொருள்களை பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் கடற்கரை மணலில் புதைந்து, மழை நீர் நிலத்தின் அடியில் உட்புகாமல் தடுக்கிறது.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி தேநீர், பாப்கான் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்க ஏற்பாடு: மெரீனா கடற்கரையில் குடிநீர் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 28 July 2009 06:24
 

பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த கடும் சட்டம் தேவை: உயர் நீதிமன்றம்

Print PDF

தினமணி 28.07.2009

பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த கடும் சட்டம் தேவை: உயர் நீதிமன்றம்

சென்னை, ஜூலை 27: பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேவா மண் என்ற அமைப்பின் அறங்காவலர் ஏ நாராயணன் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாராயணன் தாக்கல் செய்த மனு விவரம்:

"150 மைக்ரானுக்கும் குறைவான மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களால் உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் கைப்பைகள், டீ "கப்'கள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும்' என்று மனுவில் கோரினார்.

இந்த மனு நீதிபதி டி. முருகேசன், நீதிபதி கே. வெங்கட்ராமன் ஆகியோர் கொண்ட "டிவிஷன் பெஞ்ச்' முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

"ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

ஆனால், 2003-ல் கொண்டுவரப்பட்ட இந்த சட்ட முன் வடிவு இன்னமும் சட்டமாகவில்லை. இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டால் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் குறையும்; ஆனாலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியாது.

எனவே, பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான பிரிவுகளுடன் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து பெரிய அளவில் பிரசாரம் செய்ய வேண்டும்.

வேறு மாநிலங்களில் 60 மைக்ரான் அளவுக்குக் கீழே உள்ள மெல்லிய பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

 


Page 133 of 135