Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் பசுமை பூங்கா திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி அழைப்பு விடுத்து உள்ளார்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பசுமை பூங்கா

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பசுமை பூங்கா திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக்க இருக்கும் இந்த பசுமை பூங்காவில் பொதுமக்கள் பயன் படுத்தும் வகையில், மூலிகை செடிகள், தியானமண்டபம், ஒரு சிறியஅளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு ரெயில் வண்டி, பொழுது போக்குடன் கூடிய பூங்கா மேலும் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.36 லட்சம் மதிப்பில் நடைபாதைகள், அனுகுசாலைகள், மரக்கன்றுகள், சைக்கிள்தளம், 5 கண்டங்களில் உள்ள உலக அதிசயங்களின் மாதிரிகள், பொதுமக்களுக்கு உணவகம் அமைக்கப்பட உள்ளது.

பசுமை திட்டத்திற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பசுமை ஆர்வலர்களிடம் ரூ.3 ஆயிரம் வைப்புதொகையாக பெற்றுகொண்டு அவர்களின் பெயரில் ஒரு மரம் வளர்த்து மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும்.

5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக உருவாக்கப்படும் பசுமை பூங்காவில் 1,500 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு குமார் எம்.பி.யின் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் 2 எண்ணிக்கை கொண்ட உயர் அழுத்த மின் விளக்குடன் கூடிய மின்கம்பம் அமைக்கப்படுகிறது.

திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. பரஞ்சோதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் லட்சம் மதிப்பில் பசுமை பூங்காவில் அரங்கம் அமைக்கப்படுகிறது. மேலும், பசுமை திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாநகராட்சி அலுவலர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

குடியிருப்போர் சங்கங்களுக்குப் பரிசுகள்

Print PDF

தினமணி             07.02.2014

குடியிருப்போர் சங்கங்களுக்குப் பரிசுகள்

சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும், சென்னையில் சிறந்த சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

எனவே, சென்னையில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் அமைப்புகளின் பெயர், பிரதிநிதிகளின் பெயர் மற்றும் பதவி, பதிவு செய்த விவரம் (பதிவுச் சான்றிதழ்), புகைப்பட ஆதாரத்துடன் செயல்பாடுகளின் விவரம் ஆகியவை குறித்த தகவல்களுடன் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு வரும் பிப். 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மழைநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார்

Print PDF

தினகரன்                03.02.2014

மழைநீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார்

திண்டுக்கல், : திண்டுக்கல் நகரில் மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் குளங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க ரூ.98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நகரின் மொத்த பரப்பளவு 14.01 கி.மீ. ஆகும். கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 7 ஆயித்து 225 பேர் வசித்து வருகின்றனர். கோபாலசமுத்திரகுளம், பி.குளம், மருதாணிகுளம், ராஜாகுளம், சுண்ணாம்பு குளம் என 9 குளங்கள் உள்ளன. செடி, கொடி வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டதால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி சென்றது.

நகரில் போதிய மழையில்லாத காரணத்தால் நிலத்தடிநீர் வறண்டு விட்டது. ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகரின் மக்களின் குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளை முற்றிலுமாக போக்க முடியாமல் உள்ளது.

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுமக்களின் பங்களிப்புடன் நகராட்சி நிர்வாகம் பல லட்சம் ரூபாய் செலவில் பயன்பாடின்றி இருந்த கோபாலசமுத்திர குளத்தை சுத்தம் செய்து தூர் வாரி மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றியது. அதேபோல் திண்டுக்கல்-சிலுவத்தூர் ரோட்டில் உள்ள பி.குளத்தையும் சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து 9 குளங்களிலும் நீர் ஆதாரத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 39.90 கி.மீ. தூரத்தில் பிரதான கால்வாய், 16.30 கி.மீ. தூரத்திற்கு துணை கால்வாய், தெருக்களில் 310.30 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் என மொத்தம் 340.30 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக ரூ.21.60 லட்சத்தில் பிரதான கால்வாய், ரூ.9.02 லட்சத்தில் துணை கால்வாய் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் தெருக்களில் ரூ.37.60 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்டமாக கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேற்பார்வை, பராமரிப்பு, கருவிகள் மற்றும் இதர செலவினங்கள் 30.22 லட்சம் என மொத்தம் 98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர் மருதராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மழைநீர் சேகரிப்புக்கான திட்டம் குறித்த செயல்விளக்க படம் ஒளி பரப்பப்பட்டது.

கூட்டத்தில் ஆணையர் குமார், பொறியாளர் கணேசன், நகர்நல அமைப்பு அலுவலர் பழனியப்பன், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் மருதராஜ் கூறுகையில், ரூ.98.44 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இது அரசு ஒப்புதலுக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்படும் என்றார்.

 


Page 4 of 135