Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருச்சியில் 18 வார்டுகள் துப்புரவுப் பணி இனி தனியார்வசம்

Print PDF
தினமணி        05.11.2014

திருச்சியில் 18 வார்டுகள் துப்புரவுப் பணி இனி தனியார்வசம்

திருச்சி காந்தி மார்க்கெட், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களை உள்ளடக்கிய 18 வார்டுகளின் துப்புரவுப் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல்

தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 77,262 வீடுகள், மார்க்கெட், பேருந்து நிலையங்களில் தினசரி 121.95 டன் திடக்கழிவு அகற்றப்பட உள்ளது.

மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இலகுரக தள்ளுவண்டி, வாகனக் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி கதர் மற்றும் கிராமத்

தொழில்துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மேயர் அ. ஜெயா பேசியது:

திருச்சி மாநகராட்சியின் பொன்மலை கோட்டத்தில் 35,36,37,38,39,63,65 வார்டுகள், அரியமங்கலம் கோட்டத்தில் 7,28,29,61,62,64 வார்டுகள், கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில்

40,41.45 வார்டுகள், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வார்டு எண் 9 என 18 வார்டுகளில் துப்புரவுப் பணிகளை ஸ்ரீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம்

மூலம் மேற்கொள்ள 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் 50 ச.கி. பரப்பளவில் உள்ள 77,262 வீடுகளிலும், காந்தி மார்க்கெட், சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு,

நாள்தோறும் 121.95 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன. 5-ம் தேதி முதல் துப்புரவுப் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.

இந்த 18 வார்டுகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் மாநகராட்சிப் பணியாளர்கள், தளவாடப் பொருள்கள் மற்றும் வாகனங்கள் இதர வார்டுகளிலுள்ள பற்றாக்குறைக்கு ஈடு

செய்யப்படும் என்றார்.

நிகழ்வில், தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு. பரஞ்சோதி, த. இந்திராகாந்தி, ஆர்.

சந்திரசேகர், ஆணையர் வே.ப. தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

மழை நிவாரணப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள்: கொசுக்களை கட்டுப்படுத்த 3500 பேர்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

 தி இந்து         24.10.2014

மழை நிவாரணப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள்: கொசுக்களை கட்டுப்படுத்த 3500 பேர்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கோப்பு படம்

கோப்பு படம்

மழை நிவாரணப்பணிகளை கண்காணிக்க, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங் களுக்கும் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் இடர்ப்பாடுகளை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதன்படி சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றுவது, சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது, சேதமான சாலைகளை சரி செய்வது, தொற்று நோய் பரவாமல் தடுப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை துரிதப் படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருங்கி ணைப்பு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த அதிகாரிகள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையுடன் ஒருங்கிணைந்து நிவாரணம், புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளை கண்காணிப்பார்கள். மேலும் அந்தந்த மண்டலங்களில் அன்றாடம் நடக்கும் பணிகள் குறித்த அறிக்கைகளை மாநகராட்சி ஆணையரிடம் அளிப்பார்கள்.

பருவமழை தொடர்பான புகார் களை சென்னை மாநகராட்சியின் 24 மணிநேர புகார் பிரிவு எண் -1913 மற்றும் மாநகராட்சி கட்டுப் பாட்டு அறை எண்களான (044) - 25619237 மற்றும் 25387235 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.

கொசுக்களை கட்டுப்படுத்த 3500 ஊழியர்கள்

சென்னையில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும் 24 மணி நேர மருத்துவசேவை அளிப்பதற்காக, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனை களில் 76 மருத்துவர்களும், 196 பணியாளர்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். குடிசைப் பகுதிகளில் 35 மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு 2,848 பேர் பயன் அடைந்துள் ளனர்.

குடிநீரில் நோய்கிருமிகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, வீடுகள் தோறும் குளோரின் மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் இரண்டு மாதத்திற்கு தேவையான கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் இருப்பில் வைக்கப் பட்டுள்ளன.

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 3,520 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு, தேங்கியுள்ள நீர்நிலைகள் மீது கொசுமருந்து தெளிக்கப்பட்டு கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், குடிசைப் பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க புகைப் பரப்பி கருவிகள் மூலம் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

Print PDF

 தினமணி       26.09.2014

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

மதுரை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் முழு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் எனவும், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், ஆணையர் சி.கதிரவன், துணை மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து பேசுகையில், அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. பிற திட்டங்கள் மற்றும் முதல்வரின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர மக்களுக்கு தண்ணீர் விநியோகத்துக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக கட்டங்கள், உணவகங்கள் போன்றவற்றில் எண்ணற்ற அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இதனால், ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் வணிக நோக்கத்திற்காக அளவுக்கு அதிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த அனுமதியற்ற குழாய் இணைப்புகளை துண்டித்தால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் மட்டுமே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

மாமன்ற உறுப்பினர் விஜயராகவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டு வுருகிறது. இந்த குழாய் இணைப்புகளை முறைப்படுத்தினால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும், அனுமதியற்ற குழாய்களையும் துண்டிக்க முடியும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும், என்றார்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக கட்டடங்களில் 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கண்டறியப்படும் அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும்.

அனுமதியற்ற குழாய் இணைப்புகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவித்தால், அவற்றின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மருத்துவமனையுடன் மருந்தகங்கள் இணைப்பு: மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில், பழங்காநத்தம் மருந்தகத்துக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணியில் இருக்கிறார். கீழ்மதுரை மருந்தகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர், மருந்தாளுர் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.

அதேபோன்று பொன்னகரம் மருந்தகத்துக்கான மருத்துவர் உள்ளிட்ட 6 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆண் செவிலியர் ஒருவரும், காவலர் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், இந்த 3 மருந்தகங்களும் முறையாக செயல்படவில்லை எனற புகாரும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, பழங்காநத்தம் மருந்தகத்தை பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையுடனும், கீழ்மதுரை மருந்தகத்தை கென்னடி மகப்பேறு மருத்துவமனையுடனும், பொன்னகரம் மருந்தகத்தை லேடி வில்லிங்டன் மகப்பேறு மருத்துவமனையுடன் இணைக்கவும் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 மருந்தக ஊழியர்களும் அந்தந்த மகப்பேறு மருத்துவமனைகளில் இணைக்கப்பட்டு பணியாற்றுவர்.

அனுமதியற்ற குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்

மதுரை மாநகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்களில் முழு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்படும் எனவும், மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், ஆணையர் சி.கதிரவன், துணை மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து பேசுகையில், அணையில் போதிய தண்ணீர் இருக்கிறது. பிற திட்டங்கள் மற்றும் முதல்வரின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநகர மக்களுக்கு தண்ணீர் விநியோகத்துக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வணிக கட்டங்கள், உணவகங்கள் போன்றவற்றில் எண்ணற்ற அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இதனால், ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் வணிக நோக்கத்திற்காக அளவுக்கு அதிகமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த அனுமதியற்ற குழாய் இணைப்புகளை துண்டித்தால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் மட்டுமே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

மாமன்ற உறுப்பினர் விஜயராகவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனுமதியற்ற குழாய் இணைப்புகள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டு வுருகிறது. இந்த குழாய் இணைப்புகளை முறைப்படுத்தினால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும், அனுமதியற்ற குழாய்களையும் துண்டிக்க முடியும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும், என்றார்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் பேசுகையில், அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக கட்டடங்களில் 100 சதவீத ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கண்டறியப்படும் அனுமதியற்ற குழாய் இணைப்புகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும்.

அனுமதியற்ற குழாய் இணைப்புகள் குறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவித்தால், அவற்றின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மருத்துவமனையுடன் மருந்தகங்கள் இணைப்பு: மதுரை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்நிலையில், பழங்காநத்தம் மருந்தகத்துக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணியில் இருக்கிறார். கீழ்மதுரை மருந்தகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவர் உள்ளிட்ட 5 பணியாளர்களுக்கு மருத்துவ அலுவலர், மருந்தாளுர் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.

அதேபோன்று பொன்னகரம் மருந்தகத்துக்கான மருத்துவர் உள்ளிட்ட 6 பணியாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆண் செவிலியர் ஒருவரும், காவலர் ஒருவர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால், இந்த 3 மருந்தகங்களும் முறையாக செயல்படவில்லை எனற புகாரும் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து, பழங்காநத்தம் மருந்தகத்தை பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையுடனும், கீழ்மதுரை மருந்தகத்தை கென்னடி மகப்பேறு மருத்துவமனையுடனும், பொன்னகரம் மருந்தகத்தை லேடி வில்லிங்டன் மகப்பேறு மருத்துவமனையுடன் இணைக்கவும் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 மருந்தக ஊழியர்களும் அந்தந்த மகப்பேறு மருத்துவமனைகளில் இணைக்கப்பட்டு பணியாற்றுவர்.

 


Page 5 of 506