Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கேபிள் வயர் கட்டணம்: மாநகராட்சி உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை

Print PDF
தினமணி      17.09.2014

கேபிள் வயர் கட்டணம்: மாநகராட்சி உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை


கேபிள் வயருக்கு மாநகராட்சி கட்டணம் விதிப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியனிடம் கேபிள் ஆபரேட்டர்கள் செவ்வாய்க்கிழமை அளித்தனர்.

 மதுரை மாநகராட்சிப் பகுதியில் கேபிள் வயர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.21,749 செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையரால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேபிள் வயர்களுக்கான கட்டணத்தை இதுவரை எம்.எஸ்.ஓ-க்கள் தான் செலுத்தி வந்தன. அதுவும் கிலோ மீட்டருக்கு ரூ.6500 மட்டுமே வசூலிக்கப்பட்டது.

 அரசு கேபிள் டிவி நிறுவனம் தான் இப்போது எம்எஸ்ஓ-வாக இருக்கிறது. இந்நிலையில், கேபிள் ஆபரேட்டர்கள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
 

தொழில் உரிமம் பெற மாநகராட்சி அறிவுறுத்தல்

Print PDF
தினமணி       16.09.2014

தொழில் உரிமம் பெற மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் தொழில் புரிவோர் தொழில் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 இது குறித்து மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919-ன்படி,

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொழில் நடத்த தொழில் உரிமம் பெறவேண்டும். மேலும் இந்த உரிமத்தை ஒவ்வொரு நிதியாண்டிலும் புதுப்பிக்க வேண்டும்.  எனவே சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொழில்புரியும் வணிகர்கள் உடனடியாக தொழில் உரிமத்துக்கான விண்ணப்பத்தை மண்டல அலுவலகங்களில் அளித்து உரிமம் பெற வேண்டும். தொழில் உரிமம் பெறாமல் தொழில்புரிவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் விவரங்களை 1913 என்ற இலவச எண்ணிலோ மாநகராட்சியின் இணையதளத்திலோ அறிந்துகொள்ளலாம்.
 

மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் பிரச்னைக்கு இன்று தீர்வு

Print PDF
தினமணி      12.09.2014

மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் பிரச்னைக்கு இன்று தீர்வு


சேலம் மாநகராட்சியின் 21 வார்டுகளில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வரும் தாற்காலிக துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (செப்.12) தீர்வு எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநகராட்சியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள 21 வார்டுகளில் தாற்காலிகப் பணியாளர்களாக உள்ள சுமார் 680 துப்புரவுத் தொழிலாளர்களும் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய 16 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்தை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், சேலம் மாவட்ட அரசிதழில் தாற்காலிக தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ரூ.165 ஆக இருப்பதை ரூ.246 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இப்போது தனியார் நிறுவனம் தங்களுக்கு ரூ.211 வரை தர முன் வந்துள்ளது. அதை ரூ.246 ஆக உயர்த்தி வழங்கினால் எங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தினசரி ரூ.246 ஊதியம் வழங்கினால் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, மற்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதனால் துப்புரவுத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு வெள்ளிக்கிழமை முடிவு எட்டப்படலாம் என்று கூறப்படுகிறது.
 


Page 6 of 506