விளம்பர பலகைகள் வைக்க விதிமுறை
Tuesday, 11 February 2014 10:53
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமணி 11.02.2014 விளம்பர பலகைகள் வைக்க விதிமுறை
சென்னையில் விளம்பர பலகைகளை வைப்பது தொடர்பான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட செய்தி: மின்னனு
அச்சு விளம்பரப் பட்டிகைகள், விளம்பர அட்டைகளை நிறுவ 15 நாள்களுக்கு முன்பே
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும். நில உரிமையாளரிடம்
இருந்து தடையில்லா சான்று, காவல்நிலையத்தில் பெறப்பட்ட தடையில்லா சான்று
பெற வேண்டும். விளம்பர பலகைகளில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற எண்,
காலம், விளம்பர பட்டிகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிடவேண்டும்.
10 முதல் 20 அடி அகலம் உள்ள சாலைகளில் 4 அடி உயரம் மற்றும் 2.5 அடி
அகலத்திலும், 100 அடி அகலத்துக்கு மேல் உள்ள சாலைகளில் 15 அடி உயரம்
மற்றும் 25 அடி அகலம் என விளம்பர பட்டிகைகளின் அளவு இருக்கவேண்டும் போன்ற
விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகள்?பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி
Tuesday, 11 February 2014 09:38
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 11.02.2014 விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகள்?பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி
சென்னை : சென்னையில் விளம்பர தட்டிகள் வைக்க என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மாதம் 9ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், ஒரு குழு அமைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சீராய்வு கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டது.
இதன்படி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தலைமையில் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் சென்னையில் 2,099 விளம்பரதட்டிகள் அகற்றப்பட்டன. அரசாணைப்படி விளம்பர தட்டிகள் வைக்க வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்: விளம்பர தட்டிகள் வைப்போர், 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு 'படிவம் 1' மூலம் விண்ணப்பிக்க வேண்டும். - அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- நிலத்தை பொறுத்து தனியாரிடமோ, அரசு உதவி செயற்பொறியாளர்களிடமோ தடையில்லா சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
- பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என, காவல்துறையிடமும், விளம்பர தட்டிகள் வைக்கும் இடத்தில் வரைபடம் ஒன்றையும் படிவத்துடன் இணைக்க வேண்டும்.
- விண்ணப்பம் கொடுத்த நாளில் இருந்து ஆறு நாட்களுக்கு மிகாமல் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குவார்.
- விளம்பரத்தின் கீழ்பகுதியில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் எண், அனுமதி காலம், விளம்பர தட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒரு அங்குல உயரத்திற்கு குறையாமல் அச்சிட வேண்டும்.
- ஒரு விளம்பர தட்டிக்கு திரும்ப வழங்கப்படாத தொகை 200 ரூபாயும், திரும்ப வழங்கும் தொகை 50 ரூபாயும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி கருவூலத்தில் செலுத்தி, படிவத்துடன் ரசீதை இணைக்க வேண்டும்.
- 10 அடி முதல் 20 அடி வரை அகலம் கொண்ட சாலையில் 4 அடி உயரம் 2.5 அடி அகலம் கொண்டதாகவும், அதிகபட்ச அளவாக 100 அடி அகலத்திற்கு மேல் உள்ள சாலைகளில் 15 அடி உயரம், 25 அடி அகலம் கொண்டதாகவும் விளம்பர பலகைகள் வைக்கலாம்.
- சாலை ஓரங்கள், நடைபாதைகளில் விளம்பர வைக்க அனுமதி இருந்தால், சாலை மத்தியில் அனுமதி கிடையாது. சாலை மத்தியில் அனுமதி இருந்தால், நடைபாதை, சாலை ஓரங்களில் அனுமதி கிடையாது.
- கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலை, தெரு முனை சந்திப்புகள், போக்குவரத்து தீவு உட்பட 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதிகள், நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள், சுற்றுலா தலங்கள், உருவ சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் விளம்பர தட்டிகளுக்கு அனுமதி கிடையாது.
- அனுமதி காலம் முடிந்ததும் விளம்பர தட்டிகள் முறையாக அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நடவடிக்கை
Monday, 10 February 2014 12:01
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினகரன் 10.02.2014 ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நடவடிக்கை
ஓமலூர், : ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரம் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் இணைப்பு மற்றும் முக்கிய நகரமாகும். பஸ் ஸ்டேண்டிற்¢கு போதுமான இடவசதி இருந்தும், இந்த பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் வந்து செல்ல போதுமான இடவசதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால், பல பஸ்கள் உள்ளே வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, தர்மபுரி, மேட்டூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டேண்டிற்குள் வராமலேயே சென்று விடுகின்றன.
இந்தநிலையில் பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள், பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடைகளை பஸ் ஸ்டேண்டிற்கு உள்ளே நீட்டித்து பஸ்கள் வரமுடியாத வகையிலும், பயணிகள் நிற்கமுடியாத நிலையிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகளின் மூட்டைகள், பழக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நிழலுக்காக ஒதுங்கி நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதேபோல் பயணிகள் நடக்க முடியாத அளவில் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. கடைகள் ஓரமாக நின்றால் கடைகாரர்களின் கடுமையான பேச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்துக்கு ஆளான ஒருவர் ஒரு காலை இழந்தார். இது குறித்து வந்த பல்வேறு புகார்களை அடுத்து, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி மன்ற தலைவர் (பொ) பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி மேற்பார்வையில் பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
|
|
|
|
Page 12 of 506 |