Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது

Print PDF

மாலை மலர்             08.02.2014 

கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது
 
கோயம்பேடு, சாத்தாங்காடு வணிக கடைககள் குலுக்கல் மூலம் இன்று ஒதுக்கப்பட்டது

சென்னை, பிப். 8 - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மறைமலைநகர், மணலி புதுநகரில், காலிமனை ஒதுக்கீடு, கோயம்பேடு, சாத்தாங்காடு பகுதியில் கடை ஒதுக்கீடு வழங்க கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் இன்று எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள 4 கடைகளுக்கும், சாத்தாங்காடு இரும்பு எக்கு அங்காடியில் 154 கடைகளுக்கு குலுக்கல் நடைபெற்றது.

சி.எம்.டி.ஏ. முதுமை கணக்கு அதிகாரி மலைச்சாமி முன்னின்று குலுக்கல் நடத்தினர்.

இதில் கோயம்பேட்டில் உள்ள 4 கடைகளுக்கு 261 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் வடிவேல், சுமதி, மதியழகன், சுசீலா சோதியா ஆகிய 4 பேர்களுக்கு கடை ஒதுக்கீடு கிடைத்தது.

இதேபோல் சாத்தாங்காட்டில் உள்ள 154 கடைகளுக்கு 27 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் குலுக்கலில் கடை கிடைத்தது.

45 நிமிடத்தில் குலுக்கல் முடிந்து கடைகள் ஒதுக்கப்பட்டது.

மறைமலைநகர் மற்றும் மணலி புதுநகரில் வீட்டு மனைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 12–ந்தேதி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் குலுக்கல் நடக்கிறது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

20 ஆண்டுகளாக வரி கட்டாதவர்கள் 20 ஆயிரம் பேர்

Print PDF

தினமலர்              07.02.2014  

20 ஆண்டுகளாக வரி கட்டாதவர்கள் 20 ஆயிரம் பேர்

ஆலந்தூர் : ஆலந்தூர் மண்டலத்தில், கடந்த, 20 ஆண்டுகளாக, கழிவுநீர் மற்றும் குடிநீர் வரிகட்டாத, 20 ஆயிரம் பேர் உள்ளிட்ட 37 ஆயிரம் பேருக்கு, குடிநீர் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட, 156 முதல், 167 வரையிலான வார்டுகளில், 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகளும், 33 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகளும் உள்ளன.

156 முதல், 159 வரையிலான வார்டுகள், ஊராட்சி மற்றும் பேரூராட்சியாக இருந்தவை என்பதால், அங்கு கழிவு நீர் இணைப்பு இல்லை. தற்போது, மாநகராட்சி சார்பில், 159வது வார்டில், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வசூலிக்க முடிவு இந்த நிலையில், 160 முதல், 167 வரையிலான வார்டுகளில் உள்ள, 37 ஆயிரம் பேர், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி கட்டாமல், நிலுவை தொகையை பாக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, குடிநீர் வாரியம், நிலுவை தொகையை வசூலிக்க முடிவு செய்து, கடந்த சில தினங்களுக்கு முன், 37 ஆயிரம் பேருக்கும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 1993ம் ஆண்டு முதல், வரி கட்டாமல் குடிநீர், கழிவுநீர் வசதி பெற்றவர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். 5 கோடி ரூபாய் இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாய் வரி வரவேண்டும்.

ஆனால், இரண்டு கோடி ரூபாய் கூட வசூலாகவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்த போது, 37 ஆயிரம் பேர் வரி கட்டாமல் இருந்தது தெரிந்தது. தற்போது, அவர்களுக்கு, அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அவர்களுக்காக, 163, 164, 166, 167வது வார்டு மற்றும் மண்டல அலுவலகத்தில் சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வரி கட்ட தவறினால், குடிநீர் வாரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

உடுமலை மத்திய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கலெக்டர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி            05.02.2014

உடுமலை மத்திய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கலெக்டர் ஆய்வு

உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

உடுமலை மத்திய பஸ் நிலையம்

உடுமலை பழனி மெயின்ரோட்டில் நகராட்சி மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு போதிய இட வசதி இல்லாததால் மத்திய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக பஸ் நிலையத்தின் கிழக்கே வி.பி.புரத்தில் இருந்த குடிசை வீடுகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டன.

வி.பி.புரம் காலியிடம் மொத்தம் 1 ஏக்கர் 79 சென்ட் உள்ளது. இந்த இடம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறைக்கு சொந்தமானது. இதில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடம் 21 சென்ட் போக மீதி உள்ள, வி.பி.புரம் கிழக்கு பழனி மெயின் ரோடு பகுதியில் 10 சென்ட் இடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டவும், அதற்கு பின்னால் 5 சென்ட் இடத்தில் உள் வட்ட அளவர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த 36 சென்ட் இடம் போக மீதி உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் இடத்தை நகராட்சி மத்திய பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற் கான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கான இடம், நெடுஞ்சாலைத்துறை இடம், போக்குவரத்து போலீஸ் நிலையம் மற்றும் உள்வட்ட அளவர் அலுவலகம் கட்டு வதற்கு தேர்வான இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருப்பூர் மாவட்ட கலெக் டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று உடுமலை வந்தார்.

பின்னர் அவர், பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், உடுமலை பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு, கழிப் பறையின் மேல் இருந்த பழுதடைந்த கான்கிரீட் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும். பஸ் நிலையத் திற்குள் அதிக எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் வைத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

துப்புரவு பணிகள்

அப்போது ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் ரத்தினா, நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி, சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன், கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஜி.சண்முகம், கவுன்சிலர் ஏ.ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் ஆய்வையொட்டி, நகராட்சி நிர்வாகம் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பணியாளர்கள் அவசர அவசரமாக துப்புரவு பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 


Page 14 of 506