Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு

Print PDF

தினத்தந்தி            05.02.2014

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு

விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது என்று திட்டக்குழும உதவி இயக்குனர் ஜி.ஈசுவரன் கூறினார்.

சங்க கூட்டம்

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்க துணை தலைவர் டி.ஆர்.தமிழரசு வரவேற்றுப் பேசினார்.

தூத்துக்குடி உள்ளுர் திட்டக் குழும உதவி இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர் (பொறுப்பு) ஜி.ஈசுவரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

25 ஆயிரம் சதுர அடிக்குள்ளான வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு உரிய ஆவணங்களை முறைப்படி எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்துக்கு சமர்ப்பித்தால், 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டு விடும். 25 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவதற்கு உள்ளுர் திட்ட குழுமத்துக்கு முறையான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அவைகள் சரியாக இருந்தால், சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையருக்கு திட்ட அனுமதி வழங்க சமர்ப்பிக்கப்படும். காலி இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி பெறுவது எளிது.

அனுமதி வழங்கப்பட்ட பின்பு கட்டிடங்களில் ஏதேனும் அனுமதிக்கு புறம்பாக இருந்தால் 50 சதவீதம் வரை விதிவிலக்கு அளிக்கப்பட்டு, உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெறலாம். 50 சதவீதத்துக்கு மேல் அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்டு இருந்தால் திருத்தப்பட்ட திட்ட அனுமதி, அதற்குரிய கட்டணம் செலுத்தி சென்னையில் உள்ள நகரமைப்பு ஆணையரிடமிருந்து திட்ட அனுமதி பெற வேண்டும்.

நடவடிக்கை

திட்ட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும். விதிகளை மீறிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்டதற்கு ஏற்பட்ட எல்லா செலவுகளையும் கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து திட்ட விதிமுறைகளின் படி வசூலிக்கப்படும்.

கோர்ட்டில் கட்டிட உரிமையாளர்கள் தொடந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், திட்ட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கலாம். மேலும் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தில் இருக்கக்கூடிய கட்டிட தளவாட சாமான்களையும் திட்டக் குழுமம் அபகரித்துக் கொள்ளும்.

மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் வீடு கட்டுவதற்கு என்று வரையறுக்கப்பட்ட இடங்களில் தொழிற்சாலை கட்ட வேண்டும் என்று கருதினால், அதற்குரிய திட்ட அனுமதி பெறுவதற்கு, உரிய ஆவணங்களுடன் உள்ளுர் திட்ட குழுமம் மூலமாக சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் தமிழக அரசின் அரசாணையிலும் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இதற்கு சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். 4 ஆயிரம் சதுர அடிக்குள்ளாக கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் இருந்து திட்ட அனுமதி பெறலாம்.

நோட்டீசு

தற்சமயம் திட்ட விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் பைபாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கு முறைப்படியாக திட்ட அனுமதி பெற்று, அனுமதிக்கு புறம்பாக கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர்(பொறுப்பு) ஜி.ஈசுவரன் கூறினார்.

கோரிக்கை

தொடர்ந்து உறுப்பினர் செயலர் ஈசுவரனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதில் உள்ளுர் திட்டக் குழும அனுமதி பெறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது. தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல் வருகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், உள்ளுர் திட்டக் குழும அனுமதி பெறுவதற்கு கால நிர்ணயம் வரையறுக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த விதமான இடையூறுகளும் விளைவிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

 

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மின்மோட்டார் பறிமுதல்

Print PDF

தினகரன்            05.02.2014

குடிநீர் இணைப்பு துண்டிப்பு மின்மோட்டார் பறிமுதல்

அனுப்பர்பாளையம், : அவிநாசியில் குடிநீர் குழாயிலிருந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்ததால், நேற்று பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்தனர்.

அவிநாசி பழைய பஸ் நிலையம் அருகே போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கடை வீதி குடியிருப்பு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாகவும், அந்த பகுதியில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் குடிநீர் மிகவும் குறைவாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடிநீரில் சாக்கடை கலப்பதில்லை என தெரிந்தது. மேலும் அங்குள்ள ஒரு உணவகத்தில் குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை பொருத்தி அதிகளவு குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. மேலும் மின்மோட்டாரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுபோல புகார்கள் அடிக்கடி வருவதால், தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு மின்மோட்டாரை வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டுபிடித்து மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை

Print PDF

தினகரன்            05.02.2014

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை

ஓமலூர், : ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால்  ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரம் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் இணைப்பு மற்றும் முக்கிய நகரமாகும். பஸ் ஸ்டேண்டிற்¢கு போதுமான இடவசதி இருந்தும், இந்த பஸ் ஸ்டாண்ட்  போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் வந்து செல்ல போதுமான இடவசதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால், பல பஸ்கள் உள்ளே வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதன்படி, தர்மபுரி, மேட்டூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டேண்டிற்குள் வராமலேயே சென்று விடுகின்றன.

இந்தநிலையில் பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள், பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடைகளை பஸ் ஸ்டேண்டிற்கு உள்ளே நீட்டித்து பஸ்கள் வரமுடியாத வகையிலும், பயணிகள் நிற்கமுடியாத நிலையிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும்,  புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகளின் மூட்டைகள், பழக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நிழலுக்காக ஒதுங்கி நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதேபோல் பயணிகள் நடக்க முடியாத அளவில் நடைபாதை கடைகள்  ஆக்கிரமித்துள்ளன. கடைகள் ஓரமாக நின்றால் கடைகாரர்களின் கடுமையான பேச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்துக்கு ஆளான ஒருவர் ஒரு காலை இழந்தார். இது குறித்து வந்த பல்வேறு புகார்களை அடுத்து, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி மன்ற தலைவர் (பொ) பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி மேற்பார்வையில் பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 


Page 15 of 506