Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தரமற்ற இறைச்சி விற்பனை: 11 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி               03.02.2014

தரமற்ற இறைச்சி விற்பனை: 11 கடைகளுக்கு சீல்

சென்னையில் தரமற்ற இறைச்சி விற்ற 11 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

சென்னை மாதவரம் மண்டலத்தில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது, இரட்டை ஏரியில் 3 கடைகள், மாதவரம் ரோஜா நகரில் ஒரு கடை, அடையாறு மண்டலம் இந்திரா நகர், சின்னமலை, வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டையில் 7 கடைகள் என மொத்தம் 11 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தக் கடைகளுக்கு சீல் வைத்து பூட்டப்பட்டன.

அக்கடைகளில் இருந்து இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் எலியட்ஸ் கடற்கரையில் ஆய்வு செய்தபோது, அங்கு உபயோகிக்க தகுதியற்ற எண்ணெய், புகையிலை போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 400 குடிநீர் பாக்கெட்டுகள், 50 குடிநீர் பாட்டில்கள், 5 லிட்டர் சமையல் எண்ணெய், 50 புகையிலை பாக்கெட்டுகள், 4 கிலோ 40 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

 

கொடைக்கானலில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு "சீல்'

Print PDF

தினமணி               03.02.2014

கொடைக்கானலில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு "சீல்'

கொடைக்கானலில் வாடகையை செலுத்தாத நகராட்சிக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கொடைக்கானல் நகராட்சிக்கு, ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் சாலை, அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் பல மாதங்களாக நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகை பாக்கித் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இது குறித்து, நகராட்சி ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 16 கடைக்காரர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தனர்.

எனவே, இந்த கடைகளை பூட்டி சீல் வைக்க, நகராட்சி ஆணையர் (பொறுப்பு)சாகுல்ஹமீது உத்தரவிட்டார்.

அதன்படி, குறிப்பிட்ட கடைகளை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சத்யா ஆய்வுசெய்து, பூட்டி சீல் வைத்தார்.

இதனிடையே, கொடைக்கானல் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் சாமுவேல், அசன், தங்கபாண்டியன் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையால், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடித்த 10 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

காலியிடங்களில் புதர் இருந்தால் மாநகராட்சி அகற்றும்: மேயர்

Print PDF

தினமணி               03.02.2014

காலியிடங்களில் புதர் இருந்தால் மாநகராட்சி அகற்றும்: மேயர்

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காலியிடங்களில் புதர்கள் இருந்தால், அவற்றை மாநகராட்சியே அகற்றும் என மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக மாமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் செ.ம. வேலுசாமியின் பதில்:

குடியிருப்புகள் உருவாகும்போது வீட்டு மனையைப் பலர் வாங்குகின்றனர். ஒரு சில இடங்களில் வீடுகள் கட்டிக் குடியேறுகின்றனர். அவ்வாறு குடியேறும்போது பல இடங்களில் 4 வீடுகளுக்கு நடுவில் காலியிடம் உள்ளது.

அந்தக் காலியிடத்தில் புதர்கள் உருவாகின்றன. இதனால் அதில் பாம்பு உள்ளிட்டவை குடியேறுகின்றன. இதனால் வீடுகளில் குடியிருப்போருக்குத் தொல்லைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு காலியாக இருக்கும் இடத்தின் உரிமையாளர்களுக்கு முதலில் மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பலாம். புதர்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர் அகற்றாவிட்டால் மாநகராட்சியே அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

சம்பந்தப்பட்ட காலியிடத்தின் உரிமையாளர்கள் கட்டடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கும்போது, புதர்களை அகற்றியதற்கான கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கலாம் என்றார் மேயர்.

 


Page 17 of 506