Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

Print PDF

தினமணி             01.02.2014

நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருத்தங்கல் நகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2013-2014ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, தண்ணீர் கட்டணம், உரிமக் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை 28.2.2014ஆம் தேதிக்குள், நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமலிங்கம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை நகராட்சியில் ஊருணிகளை இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

சிவகங்கை நகராட்சியில் ஊருணிகளை இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம்

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஊருணிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 சிவகங்கை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் தலைமை வகித்துப் பேசியதாவது: நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஊருணிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள ஏற்படுத்தும் வகையில் மழைநீர் வடிகால் அமைத்து ஊருணிகளை இணைப்பது குறித்து திட்டம் தயாரிக்க த்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்படி மாநிலத்தில் 30 நகரங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக கம்பம், திண்டுக்கல், மேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆதாரங்களை ஒன்றிணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 6.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிவகங்கை நகராட்சியில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,403 பேர் உள்ளனர். இங்கு ஆண்டுக்கு 336 மிமீ அளவு மட்டுமே மழை கிடைக்கிறது.

  எனவே கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் அதனை ஊருணிகளில் சேமிக்கும் வகையில் சிவகங்கையில் 5 கிமீ வரை 7 பிரதான கால்வாய்களும், இதேபோல் 5 கிலோ மீட்டர் வரை 13 துணைக் கால்வாய் உள்பட85 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய்கள் அமைத்து ஊருணிகள் ரூ.38.5கோடி மதிப்பில் இணைக்கும் திட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஈஜிஸ் இந்தியா நிறுவனம் வரைவு திட்டத்தை தயாரித்துள்ளது.

 திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி, அவர்களின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பேரில் 2 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

  கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் வரதராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

தேரடியில் மீண்டும் உயர் கோபுர மின்விளக்கு

Print PDF

தினமணி             01.02.2014

தேரடியில் மீண்டும் உயர் கோபுர மின்விளக்கு

திருவள்ளூர் தேரடியில் கோயில் தேர் செல்வதற்கு இடையூறாக இருந்ததாக அகற்றப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு, மாற்று இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரின் மையத்தில் உள்ளது தேரடி பகுதி. இப்பகுதி வழியாக திருவள்ளூரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு வந்துதான் செல்ல வேண்டும்.

மேலும் இப்பகுதியிலிருந்து செங்குன்றம் சாலை, ஆவடி சாலை, பனகல் தெரு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் செல்கின்றன.

இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் அங்கு ஏராளமான சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தன.

இதனிடையே மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2012-ஆம் ஆண்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் தேரடி பகுதியில் ரூ.1 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் போது அப்பகுதியில் ஸ்ரீவீரராகவர் கோயில் தேரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பகுதியிலிருந்த உயர்கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டது.

இதையொட்டி அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் அமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேரடி பகுதியை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத்தினர், சாலையோரம் இருந்த கொடிக்கம்பம், கல்வெட்டுகளை அகற்றி அந்த இடத்தில் மின்விளக்கை அமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அங்கு அமைக்கப்பட்டது.

அதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் கே.அட்சய்யா, நகராட்சிப் பொறியாளர் பாபு, நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 


Page 19 of 506