தினமணி 29.01.2014
உழவர்கரை நகராட்சியில் பிப்ரவரி 2 முதல் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சியில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் ஈஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் வரும் 2ஆம் தேதி தொடங்கி, மார்ச் 30ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
2ஆம் தேதி ரெயின்போ நகர் டான் சிறப்பு பள்ளியிலும், 9ஆம் தேதி லாஸ்பேட்டை விவேகானந்தர் பள்ளியிலும், 16ஆம் தேதி ஆலங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியிலும் நடைபெறும்.
2ஆம் தேதி பாக்கமுடையான்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியிலும், மார்ச் 2ஆம் தேதி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 9ஆம் தேதி வெங்கட்டா நகர் தமிழ்ச்சங்கக் கட்டடத்திலும் முகாம் நடைபெறுகிறது.
மேலும் 16ஆம் தேதி குறிஞ்சி நகர் சமுதாயக் கூடம், 23ஆம் தேதி சாரம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், 30ஆம் தேதி மேரி உழவர்கரை நகராட்சி பழைய அலுவலத்திலும் முகாம் நடைபெறும்.
மேலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களின் அனைத்து சனிக்கிழமைகளிலும் தட்டாஞ்சாவடி விவிபி நகர் மற்றும் ஜவஹர் நகர் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வீட்டுவரி, சொத்துவரி கணினி வரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரையும் செயல்படும்.
அனைத்து வார்டுகளிலும் உள்ள வீட்டு வரி நிலுவை வைத்துள்ளோர், சொத்து வரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.