Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

உழவர்கரை நகராட்சியில் பிப்ரவரி 2 முதல் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாம்

Print PDF

தினமணி           29.01.2014 

உழவர்கரை நகராட்சியில் பிப்ரவரி 2 முதல் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் ஈஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் வரும் 2ஆம் தேதி தொடங்கி, மார்ச் 30ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

2ஆம் தேதி ரெயின்போ நகர் டான் சிறப்பு பள்ளியிலும், 9ஆம் தேதி லாஸ்பேட்டை விவேகானந்தர் பள்ளியிலும், 16ஆம் தேதி ஆலங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியிலும் நடைபெறும்.

2ஆம் தேதி பாக்கமுடையான்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியிலும், மார்ச் 2ஆம் தேதி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 9ஆம் தேதி வெங்கட்டா நகர் தமிழ்ச்சங்கக் கட்டடத்திலும் முகாம் நடைபெறுகிறது.

மேலும் 16ஆம் தேதி குறிஞ்சி நகர் சமுதாயக் கூடம், 23ஆம் தேதி சாரம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், 30ஆம் தேதி மேரி உழவர்கரை நகராட்சி பழைய அலுவலத்திலும் முகாம் நடைபெறும்.

மேலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களின் அனைத்து சனிக்கிழமைகளிலும் தட்டாஞ்சாவடி விவிபி நகர் மற்றும் ஜவஹர் நகர் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வீட்டுவரி, சொத்துவரி கணினி வரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரையும் செயல்படும்.

அனைத்து வார்டுகளிலும் உள்ள வீட்டு வரி நிலுவை வைத்துள்ளோர், சொத்து வரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி

Print PDF

தினமணி          26.01.2014 

வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி

கடலூர் நகரில் வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி தொடங்கப்படவுள்ளது. இதன்படி அதிக வரி நிலுவை உள்ளவர்களை நேரில் அழைத்துப் பேச முடிவு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

 கடலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் சொத்து வரி நிலுவை ரூ.7.5 கோடி. இந்த தொகையை வசூலிப்பது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

 இக் கூட்டத்தில் பொறியாளர் ரவி, நகர்நல அதிகாரி குமரகுரு, நகரமைப்பு அதிகாரி முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் பேசியதாவது: சொத்து, குடிநீர் வரி நிலுவையை விரைவாக வசூலிக்க வேண்டும் என்றும் நகராட்சி அனுமதி பெறாமல் முறைகேடாக போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க குழு அமைக்கப்படும்.

 தற்போது சொத்து வரி பாக்கி ரூ.5.39 கோடி, குடிநீர் கட்டணப் பாக்கி ரூ.2.17 கோடியாக உள்ளது. வசதி படைத்தவர்கள்தான் அதிக பாக்கி வைத்துள்ளனர்.

எனவே அவர்கள் சொத்து வரி பாக்கியை விரைவில் செலுத்தினால் துப்புரவுப் பணி உள்ளிட்டவைகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். இதற்காக ஒவ்வொரு வார்டிலும் அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களில் 5 முதல் 10 பேரை அழைத்துப் பேச இருக்கிறேன்.

 கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் நகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்புகளை எடுத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 எனவே அத்தகைய குடிநீர் இணைப்புகளை  துண்டிக்க பொறியாளர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க உள்ளோம். அந்த குழுவினர் வார்டு, வாரியாகச் சென்று முறையற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டு பிடித்து துண்டிப்பார்கள் என சி.கே.சுப்பிரமணியன் கூறினார்.

 

மானாமதுரை பேரூராட்சி: ஜன. 31 க்குள் வரி பாக்கிகளை செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமணி             25.01.2014

மானாமதுரை பேரூராட்சி: ஜன. 31 க்குள் வரி பாக்கிகளை செலுத்த வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி பகுதியில் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்தப்படாத அனைத்துவிதமான வரி பாக்கிகளையும் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தெரிவித்துள்ளதாவது:

  ஒவ்வொரு நிதியாண்டிலும் முதல் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை மே மாதத்துக்குள்ளாகவும் இரண்டாம் அரையாண்டுக்கான வரி பாக்கிகளை நவம்பர் மாதத்துக்குள்ளும் செலுத்த வேண்டும். மானாமதுரை பேரூராட்சி பகுதியில் இதுவரை வரி பாக்கிகளை செலுத்தாத பொதுமக்கள் உடனடியாக வரி பாக்கிகளை 31 ஆம் தேதிக்குள் செலுத்தி சட்டப்பூர்வ மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 வரி மற்றும் வரியற்ற இனங்களை செலுத்தாமல் உள்ள நபர்களின் பெயர் பட்டியல் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டர் பிளக்ஸ் போர்டுகளில் வைக்கப்பட்டு தினசரி நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படும்.

  வரி செலுத்தாதவர்களின் வீட்டு மின் இணைப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் மின் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்கவும் மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.

  விடுமுறை நாள்களில் வரி பாக்கிகளை செலுத்த ஏதுவாக சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் வசூல் மையம் செயல்படும் என்றார்.

 


Page 7 of 148