Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சியில் ரூ. 56 கோடி வரி பாக்கி

Print PDF

தினகரன்        13.11.2013

மாநகராட்சியில் ரூ. 56 கோடி வரி பாக்கி

மதுரை, : மதுரை மாநகராட்சியில் ரூ.105 கோடி வரி வசூலாகாமல் பாக்கி இருந்தது. தீவிர வசூல் காரணமாக ரூ.49 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ. 56 கோடி வரி வசூலாகாமல் பாக்கி உள்ளது. இதில் அரசு அலுவலகங்கள் செலுத்த வேண்டிய பாக்கி அதிக அளவில் உள்ளது. இதனை வசூலிக்க தீவிர நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

 

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தொழில் வரி 25% உயர்வு

Print PDF

தினமணி             05.09.2013

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தொழில் வரி 25% உயர்வு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தற்போது வசூலிக்கப்பட்டுவரும் தொகையிலிருந்து, அனைத்து தொழில் வரிகளும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் கூறியது:     மேட்டுப்பாளையம் நகராட்சியில் தொழில்கள், வணிகங்கள், வேலைவாய்ப்பு விதிகள் 99-ன் கீழ் தொழில் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி விகிதங்களை உயர்த்த வேண்டும் என்ற விதியின் கீழ், நகராட்சிகளில் வரி உயர்வு அமலாக்கப்படுகிறது.

அதன்படி, இம்மாதம் 1-ஆம் தேதி முதல் 25 சதவீதம் தொழில் வரி உயர்த்தலாம் என நகர்மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வர உள்ளது.

தற்போது அரையாண்டு வருமானம் ரூ. 21,000-க்குள் இருந்தால், தொழில் வரி செலுத்த தேவையில்லை. ரூ. 21,000 முதல் ரூ. 30,000 வரை இருந்தால் தொழில் வரியாக ரூ. 101, ரூ. 30,001 முதல் ரூ. 45,000 வரை இருந்தால் ரூ. 250, ரூ. 45,001 முதல் ரூ. 60,000 வரை இருந்தால் ரூ. 507, ரூ. 60,001 முதல் ரூ. 75,000 வரை இருந்தால் ரூ. 761-ம், ரூ. 75,000-க்கு மேல் இருந்தால் ரூ. 1014 தொழில் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து, மேற்கண்ட தொகையிலிருந்து இனிமேல் 25 சதவீதம் கூடுதலாக தொழில் வரி செலுத்த வேண்டும்.

 

தொழில் வரி செலுத்த மேலும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்

Print PDF

தினகரன்            21.08.2013

தொழில் வரி செலுத்த மேலும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்

கோவை:  கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா வெளியிட்ட அறிக்கை : கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைந்த மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வருகின்ற, தனியாருக்கு சொந்தமான தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிகவளாக கடைகள், விடுதிகள், சினிமா தியேட்டர்கள் முதலிய அனைத்து நிறுவனத்தாலும் பணி அமர்த்தப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ.3,500க்கு மேல் அதாவது 6 மாத வருமானமாக ரூ.21 ஆயிரத்திற்கு மேல் பெறப்படும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்திலிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை தொழில்வரி பிடித்தம் செய்து “ ஆணையாளர், கோவை மாநகராட்சி’’ என்ற பெயரில் இத்தொகை செலுத்தப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்திற்கு ஏற்ப தொழில்வரி தொகையினை பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு தவறாது செலுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களின் சட்டப்பூர்வ கடமையாகும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உண்டான தொழில்வரி தொகையினை அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80, 81, 82, 83 மற்றும் 84 ஆகிய பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக கடந்த 19 மற்றும் 20 ஆகிய இருதினங்கள் நடத்தப்பட்டது. அனைத்து வணிகர்களின் கோரிக்கைளை ஏற்று இம்முகாம் மேலும் இரண்டு தினங்கள் அதாவது 21 மற்றும் 22 ஆகிய இருநாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜவீதி வாகனம் நிறுத்துமிடம் அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர் வார்டு அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறும் எனவும் இதனை அனைத்து வணிக நிறுவனங்களும் முழுமையாக பயன்படுத்தி தொழில்வரி பதிவு செய்து தொழில் வரி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு லதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 10 of 148