Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

‘ஆன்லைன்’ மூலம் வரி செலுத்தும் வசதியால் ரூ.92 கோடி வசூல் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF
தினத்தந்தி             15.05.2013

‘ஆன்லைன்’ மூலம் வரி செலுத்தும் வசதியால் ரூ.92 கோடி வசூல் மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிகளை வங்கிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியால், ரூ.92 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.

வரி செலுத்தும் வசதி

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணங்களை பொதுமக்கள் வங்கிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி 13 நேரடி வசூல் மையங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிட்டி யூனியன் வங்கி கிளைகளிலேயே வரி செலுத்தும் வசதி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையில் மேயர் செ.ம.வேலுசாமி இந்த வசதியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதன்படி சிட்டி யூனியன் வங்கியின் 7 கிளைகளான பாப்பநாயக்கன்பாளையம், ஒப்பணக்கார வீதி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், சாய்பாபாகாலனி, ராம்நகர், விளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும்முறை இதன் மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.92 கோடி வசூல்

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறும்போது, வரி செலுத்துவதற்கு மக்களுக்கு வசதியாக வங்கிகளில் வரி செலுத்தும் சேவையை மாநிலத்திலேயே கோவை மாநகராட்சி முதன்முறையாக செயல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வங்கியில் கட்டண வசூல் மையங்களில் 94 சதவீதம் பேர் ரூ.92 கோடி வரி செலுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் லீலாவதி உன்னி, வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமார், கவுன்சிலர் அர்ஜுனன், மற்றும் சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
 

கரூர் நகராட்சி வரி வசூல் தீவிரம்

Print PDF
தினமணி        04.05.2013

கரூர் நகராட்சி வரி வசூல் தீவிரம்

கரூர் நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை கட்டணங்களை வசூலிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது

கரூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, நகராட்சி கட்டடங்களுக்கான வாடகை உள்ளிட்டவைகளை வசூல் செய்ய நகராட்சி ஆணையர் எல். கோபாலகிருஷ்ணன் (பொ) தலைமையில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக குடிநீர் கட்டண பாக்கி, சொத்து வரி, நகராட்சி கடை வாடகை ஆகியை செலுத்தாதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் காமராஜ் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நீண்டகாலமாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றின் நிலுவை குறித்து சம்மந்தப்பட்டவர்கள் இல்லங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டும், தண்டோரா மூலமும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை.

இதையடுத்து நகராட்சி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது. குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை உள்ளிட்டவைகளை  நகராட்சிக்கு சம்மந்தப்பட்டவர்கள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் போது துண்டிப்பு கட்டணமாக ரூ,750, வரி கட்டியபின் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு ரூ.750-ம் செலுத்த வேண்டும் என அறிவித்தது.

இந்த எச்சரிக்கையால் இப்போது நகராட்சிக்கு குடிநீர் கட்டணம், இதர வரி கட்டுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சனிக்கிழமையும் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம், வரி ஆகியவற்றை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

வரி விதிப்பு மறுமதிப்பீடு ; நகராட்சி இயக்குனரகம் உத்தரவு

Print PDF
தினமலர்              03.05.2013

வரி விதிப்பு மறுமதிப்பீடு ; நகராட்சி இயக்குனரகம் உத்தரவு

கம்பம் : வரிவிதிப்பு இல்லாத இனங்கள் மற்றும் குறைவாக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை கண்டறிந்து மறுமதிப்பீடு செய்ய நகராட்சிகளின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், வளர்ச்சி பணிகள் செய்ய, நிதி பற்றாக்குறை உள்ளது. வரி வருவாய் குறைவாக உள்ளது. வரி விதிப்பில், முறைகேடுகள், குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதை அடுத்து, தமிழக நகராட்சி, உராட்சிகளில் வரிவிதிப்பு செய்யாத இனங்கள், வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களை கண்டறிந்து, வரிவிதிப்பை மறுமதிப்பீடு செய்ய நகராட்சிகளின் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, நகராட்சிகளில் அலுவலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, வரி விதிப்பு குறித்து, மறு ஆய்வு செய்யப்படுகிறது.
 


Page 12 of 148