Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

காரைக்காலில் வரி வசூல் முகாம்:நாளை தொடங்குகிறது

Print PDF
தினமணி        07.04.2013

காரைக்காலில் வரி வசூல் முகாம்:நாளை தொடங்குகிறது


காரைக்காலில் திங்கள்கிழமை (ஏப். 8) முதல் மே. 2-ம் தேதி வரை நகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையர் கே. ரேவதி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியினர், 2013-14-ம் ஆண்டுக்கானசொத்து வரி, தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி மற்றும் இதர வரிகள், வரி பாக்கிகளை ஒவ்வொரு வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏப். 8-ம் தேதி திங்கள்கிழமை வலத்தெரு நடுநிலைப் பள்ளி, 9-ம் தேதி அம்மையார் கோவில், 10-ல் புதுத்துறை சமுதாயக் கூடம், 11-ல் தருமபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, 12-ல் செபஸ்தியார் கோவில், 13-ல் பச்சூர் அரசு தொடக்கப் பள்ளி, 15-ல் கீழகாசாக்குடி சமுதாயக்கூடம், 16-ல் தலத்தெரு தங்கமாரியம்மன் கோவில், 17-ல் நேரு நகர் பிள்ளையார் கோவில், 18-ல் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில், 19-ல் எம்.எம்.ஜி. நகர் பிள்ளையார் கோவில், 20-ல் காரைக்கால்மேடு சமுதாயக் கூடம், 22-ல் கிளிஞ்சல்மேடு ரேணுகாதேவி அம்மன் கோவில், 23-ல் அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 24-ல் மாரியம்மன் கோவில் தெரு ராமலிங்க சுவாமி மடம், 25-ல் நகராட்சி திருமண மண்டபம், 16-ல் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளி, 27-ல் சேத்திலால் நகர் அரசு நடுநிலைப் பள்ளி, 29-ல் மேலஓடுதுறை சமுதாயக்கூடம், 30-ல் கீழஓடுதுறை சமுதாயக் கூடம், மே.1-ம் தேதி கருக்களாச்சேரி திருமண மண்டபம், 2-ல் அக்கரைவட்டம் அரசு நடுநிலைப் பள்ளி.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்று வரிகைகளை செலுத்திட வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF
தினகரன்      05.04.2013

மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


மேட்டூர்: மேட்டூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய குடிநீர் இணைப்பு கட்டண நிலுவை அதிகமாக உள்ளது. இதனால், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை கடந்த 3 நாட்களாக நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று குடிநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

மேட்டூர் நகராட்சியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில், ரூ.45 லட்சத்திற்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பற்றாக்குறையை சரிகட்ட நகராட்சி நிர்வாகம் கெடுபிடி வரிவசூலில் ஈடுபட்டுள்ளது.
 

மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த காலநீட்டிப்பு இன்றுடன் முடிகிறது

Print PDF
தினகரன்      05.04.2013

மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த காலநீட்டிப்பு இன்றுடன் முடிகிறது


கோவை: மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை தொகை செலுத்த இன்றுடன் காலநீட்டிப்பு நிறைவடைகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு 2012-13ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகைகளை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்பட்டன.

மார்ச் மாதத்தின் கடைசி மூன்று தினங்கள் அரசு விடுமுறை நாளாக அமைந்து விட்டதால், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சொத்து வரிதாரர்கள் வரி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, கால நீட்டிப்பு வழங்கக்கோரி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதைத்தொடர்ந்து, 1.4.2013 முதல் 5.4.2013 வரை ஐந்து தினங்கள் காலநீட்டிப்பு செய்து, வரி வசூல் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த கால நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில், சொத்து வரி ரூ.45 லட்சத்து 13 ஆயிரத்து 959, குடிநீர் கட்டணம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 984, வாட் வரி ரூ.26 லட்சத்து 12 ஆயிரத்து 581 உள்பட பல்வேறு கட்டணங்கள் சேர்த்து மொத்தம் ஒரு கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 508 ரூபாய் வசூலாகியுள்ளது. இதுவரை, 89 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவை தொகையையும் விரைவில் வசூலித்து 100 சதவீத இலக்கை எட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றி கமிஷனர் லதா கூறுகையில், ‘‘பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது அனைத்து நிலுவை வரிகளையும் உடனடியாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம். குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வேண்டுகிறோம்‘‘ என்றார்.
 


Page 14 of 148