Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு மேயர் தகவல்

Print PDF

தினகரன்       27.01.2011

மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு மேயர் தகவல்

சென்னை, ஜன.27:

மாநகராட்சி பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறையின் தரத்தை மேலும் உயர்த்திட அதிக நிதி ஒதுக்கி புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் 2011&2012ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் 15ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கல்வி, சுகாதாரம், பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள், மழைநீர் வடிகால்வாய், நிலம் மற்றும் உடைமைத்துறை, பூங்காக்கள், விளையாட்டரங்கம், பணியாளர் நலன், வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில், ஏற்கனவே 2010&2011ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 122 அறிவிப்புகள் தொடர்பாகவும், அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை நடத்தினர்.
அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 100க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதியுள்ள 22 திட்டங்களையும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மேயர் ஆணையிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சென்னைப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த கடந்த 4 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றல் சார் பள்ளிகள், மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச சீருடை, ஷூ போன்றவை வழங்கப்படுகிறது.

மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக சிறப்புணவு அளித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகரம் மேலும் சிறப்பாக திகழ்ந்திட வரும் 2011&2012ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும். இதில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

கோவை மாநகராட்சி பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல்

Print PDF

தினகரன்     21.12.2010

கோவை மாநகராட்சி பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல்

கோவை, டிச.21:

கோவை மாநகராட்சி ஆண்டு பட்ஜெட் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும்.

கோவை மாநகராட்சியின் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணி வேகமாக நடக்கிறது. வரும் மார்ச் மாதம் பட்ஜெட்தாக்கல் செய்யப்படஉள்ளது. நடப்பாண்டில், மாநகராட்சி வருவாய் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் வரி விதிப்பு, சொத்து, தொழில், சேவை வரி விதிப்பு, குடிநீர் கட்டண வசூல் கடந்த ஆண்டை விட அதிகமாக நடந்துள்ளது. ஆனால், சம்பள கமிஷன் உத்தரவின் படி, சம்பள நிலுவை தொகை அதிகளவு வழங்கப்பட்டது.

ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் இதுவரை சுமார் 1300 கோடிரூபாய்க்கு தொகை செலவிடப்பட்டது. அனைத்து திட்டங்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் 30 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தவேண்டியுள்ளது. எனவே,மாநகராட்சியின் செலவினம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பில்லூர், சிறுவாணி குடிநீர் கட்டண தொகை நிலுவை தொகை 110 கோடி ரூபாய் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக குடிநீர் வாரியத்திற்கு, நிலுவை தொகை வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இந்த தொகை பட்ஜெட்டில் சுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. புதிய ஆண்டு பட்ஜெட்டில் 2009&10ம் நிதி ஆண்டில் சேர்க்காமல் விட்ட திட்டங்களை, செயல்படுத்த கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுரங்க நடைபாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.

இதேபோல், கோவையில் மாநகராட்சி சார்பில் காந்திபுரத்தில் மட்டும் நடைபாதை மேம்பாலம் உள்ளது. நகரில் 15 இடங்களில் சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. வீடு, வீடாக தரம் பிரித்த குப்பை சேகரிப்பு திட்டம், திட்ட சாலை பணி, நகர் முழுவதும் நடைபாதை, பஸ் ஸ்டாப் நிகழ்குடை அமைக்கும் திட்டங்கள் வரும் பட்ஜெட்டில் சேர்க்கப்படும். பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கருத்துகளை கேட்டு சில புதிய திட்டங்களை பட்ஜெட்டில் சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம், இலவச காலணி வழங்கும் திட்டம் உள்பட 20 திட்ட பணிகள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து பட்ஜெட்டில் கூட்டத்தில் கேள்வி எழும் வாய்ப்புள்ளது.


Last Updated on Tuesday, 21 December 2010 09:02
 

2011&12ம் நிதியாண்டுக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினகரன்             09.12.2010

2011&12ம் நிதியாண்டுக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி, டிச. 9: வீட்டு வரி 5 சதவீதம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு வருவாய் நடவடிக்கைகளுடன் கூடிய ரூ6364.43 கோடி மதிப்பீட்டிலான 2011&12ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா நேற்று தாக்கல் செய்தார்.

மாநகராட்சி சிறப்பு நிலைக்குழு கூட்டம் அதன் தலைவர் யோகேந்தர் சந்தோலியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நடப்பு நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு மற்றும் 2011&2012ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா தாக்கல் செய்தார். மொத்தம் 6364.43 கோடியிலான அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பசுமை நடவடிக்கைகளுக்கான திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதேபோல் சாலை, வாகன நிறுத்தங்களை கட்டும் திட்டங்கள், கல்வி, மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா பேசியதாவது:

மாநகராட்சிக்கு இப்போது ரூ2,867 கோடி கடன் உள்ளது. இதனால் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், வருவாய் இனங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

இதற்காக வீட்டு வரி 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. வீட்டு வரி உயர்வு விமான நிலைய ஆணைய சொத்துக்கள், வசிப்பதற்கான வீடுகளாக இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பண்ணை வீடுகள், குடியிருப்புகள் அல்லாத சிறப்பு சொத்துக்கள் ஆகியவற்றை தவிர மற்ற எல்லா பிரிவுகளுக்கும் ஒரே மாதிரியாக 5 சதவீத வரி உயர்த்தப்படுகிறது.

இதன்படி ஏ மற்றும் பிபிரிவு குடியிருப்புகளுக்கு தற்போதுள்ள 12 சதவீத வரி 17 சதவீதமாகவும், ‘சி, 1397904493 மற்றும் இபிரிவு குடியிருப்புகளுக்கு 11 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகவும், ‘எப், ஜி மற்றும் எச்பிரிவு குடியிருப்புகளுக்கு 7 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் வீட்டு வரி உயர்த்தப்படுகிறது. குடியிருப்பு களின் இடத்தை பொறுத்து அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான குடியிருப்பு இடங்கள், குடியிருக்கும் வீடுகளாக பயன்படுத்தும் பண்ணை வீடுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்த வீடுகள் ஆகியவற்றுக்கும் இந்த 5 சதவீத வரி உயர்வு பொருந்தும்.

சாதாரண ஓட்டல்கள், 3 நட்சத்திரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்து உடைய ஓட்டல்கள், மால்கள், .சி வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளத்துடன் கூடிய கிளப்புகள் ஆகியவற்றுக்கு இப்போதுள்ள வரி விகிதமான 20 சதவீதம் அப்படியே நீடிக்கும்.

முறையாக வரி செலுத்துவோருக்கு இப்போது அளிக்கப்படும் 15 சதவீத தள்ளுபடியானது 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மேலும், 100 சதுர மீட்டருக்கு அதிகமுள்ள சொத்துக்கள், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு கூடுதல் தள்ளுபடி எதுவும் அளிக்கப்படாது. இவ்வாறு கமிஷனர் பேசினார்.

பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் நிலைக்குழுத் தலைவர் யோகேந்தர் சந்தோலியா பேசுகையில், "வீட்டு வரி உயர்வு திட்டம் நிராகரிக்கப்படுகிறது"‘ என்று அறிவித்தார். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "நிலைக்குழு தலைவரின் அறிவிப்பு முறைப்படியானது அல்ல. இதுதொடர்பான வரி மதிப்பீட்டுக் குழு கூடித்தான் வீட்டு வரி உயர்வை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை கூடி முடிவு செய்யும். அதன்பின்னர்தான் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்" என்றனர்.

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் மதிப்பீடு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா நேற்று தாக்கல் செய்தார். அருகில் நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா.

 


Page 13 of 31