Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் பெற மேயர் தீவிரம்

Print PDF

தினகரன் 08.09.2010

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் பெற மேயர் தீவிரம்

பெங்களூர், செப். 8: பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மறுபட்ஜெட் தாக்கல் செய்ய கோரி வருகின்றன. இந்நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகளின் ஒப்புதலை பெற மேயர் தீவிரமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பெங்களூர் மாநகராட்சியின் 2010&11ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 29ம் தேதி வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் பி.என்.சதாசிவா தாக்கல் செய்தார். ரூ8,488 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டம் கொண்ட பட்ஜெட்டாக இருந்தது. இதன் மீது மாநகராட்சியில் கடந்த 4 நாட்களாக விவாதம் நடந்து வருகிறது. மேயர் தலைமையில் நேற்று நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் எம்.நாகராஜ் பேசும்போது, மாநகராட்சிக்கு வரும் வருவாயை விட 90 மடங்கு அதிகம் திட்ட வளர்ச்சி பணி மேற்கொள்வதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி திட்டம் செயல்படுத்துவதை தவிர்த்து, மாநகராட்சி மூலம் கிடைக்கும் வருவாய், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை கொண்டு வளர்ச்சி திட்டம் செயல்படுத்த வேண்டும். தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை ரத்து செய்து, புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எதிர்ப்பை மீறி ஒப்புதல் பெற்றால், மாநகராட்சி கூட்டத்தை ஸ்தம்பிக்க செய்வோம் என்றார்.

மாநகராட்சி மஜத தலைவர் பத்மநாபரெட்டி பேசும்போது, மாநகராட்சியில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற்றால், ஜனநாயகத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளை மதிக்கவில்லை என்று அர்த்தமாகும். இந்த விஷயத்தில் மேயர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் முழுக்க முழுக்க மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது. இதை வாபஸ் பெற்று புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் ஏற்று சில மாற்றம் செய்யப்படும். ஆனால், மறு பட்ஜெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மேயர் உறுதியாக தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் சத்தம் போட்டனர். பின் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற மேயர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

Print PDF

தினமணி 31.08.2010

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

பெங்களூர், ஆக.30: நகர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்ஜெட்டாக மாநகராட்சி பட்ஜெட் உள்ளது என்று மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எம்.நாகராஜ் தெரிவித்தார்.

திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் குறித்து அவர் கூறியதாவது:

÷பாஜக முதன் முதலில் மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் நகரில் பல வளர்ச்சித் திட்டங்களை இந்த நிர்வாகம் கொடுக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் அளித்துள்ளது. பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையில்லை. இதனால் வரும் ஆண்டுகளில் நகர வளர்ச்சி பூஜ்ஜியமே.

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பவில்லை. சமுதாயத்தின் எந்த பிரிவினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. மாநகராட்சி தற்போது வாங்கியுள்ள கடன் தொகை, அதற்கான வட்டி ஆகியவை குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆனால் இப்போது சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதன் மூலம் மாநகராட்சி திவால் ஆகும் சூழ்நிலை ஏற்படும்.

மாநகராட்சிக்கு மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த நிர்வாகத்தின் பதவிக்காலம் இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. இதற்குள் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை இந்த நிராவகம் நிறைவேற்றபோகிறது என்றார் அவர்.

 

எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியைப் புறக்கணித்த நகராட்சி

Print PDF

தினமணி 31.08.2010

எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியைப் புறக்கணித்த நகராட்சி

கரூர், ஆக. 30: கரூர் நகர்மன்றக் கூட்டத்தில், மக்களவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி நிதி சம்பந்தமான தீர்மானங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கரூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் பெத்தாட்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் பி. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், ஆணையர் ஜி.ஆர். உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாத விவரம்:

மாரப்பன்: நகராட்சியில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்கள் மீது ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்து வருகிறார்.

ஆணையர்: முறையாக வந்த மனுக்களுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும். உறுப்பினர் குறிப்பிட்ட மனு முறையாக வரவில்லை.

இதுகுறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆணையர்: விதிக்கப்பட்டுள்ள வரி அதிகமாக தோன்றினால் எதில் குறைபாடு உள்ளதோ அதைச் சுட்டிக்காட்டி மனு வழங்கப்பட வேண்டும். ஆனால், எதையும் குறிப்பிடாமல் வழங்கப்படும் மனு முறையற்ற மனுவாகும்.

ஆண்டாள் பாலகுரு, என். மணிராஜ்: வரி குறைப்பு தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு கமிட்டிக் கூட்டம் ஏன் கூட்டப்படவில்லை?

வே. கதிரவன்: லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமையவுள்ள பாலத்தின் அகலத்தை குறைக்க கூடாது.

இந்த சாதாரணக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நகராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிபைப், ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி செய்துக் கொடுப்பது, சிறுபாலம் அமைப்பது, மழைநீர் வடிகால், சாலையோர பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 28 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மதிப்பு |ரூ.25 லட்சமாகும்.

இதில் 18, 28 வார்டுகளில் ஆழ்குழாய் கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி, குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காக மக்களவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து |ரூ 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல, உழவர் சந்தை, ராமானூர், திருமாநிலையூரில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்க என மொத்தம் | ரூ7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் இதற்கு அனுமதி அளிக்குமாறும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானங்கள் மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ| 43.75 லட்சம்.

மேலும், கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ| 25 லட்சத்தில் கணினி அறிவியல் ஆய்வகம், |ரூ 9.90 லட்சத்தில் 30 மடிக் கணினிகள், புதியதாக கட்டப்படவுள்ள கட்டடத்தில் ரூ| 2.25 லட்சத்தில் மின் வசதிகள் செய்துக் கொடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2010-11-ம் ஆண்டு சிறப்புச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சியில் சாலைகள், மழைநீர் வடிகால்களை புதுப்பிக்க 36 வார்டுகளுக்கும்ரூ |471.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இரா. பிரபு, . முத்துசாமி, . சுப்பன், விஜயலட்சுமி, எஸ். கமலா, எஸ். பரமேஸ்வரி, . நல்லமுத்து, சீனிவசான், ராஜலிங்கம், பி. பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 15 of 31