Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Financial Management

ஏழைகளுக்கான மாநகராட்சி பட்ஜெட்

Print PDF

தினகரன் 30.08.2010

ஏழைகளுக்கான மாநகராட்சி பட்ஜெட்

பெங்களூர், ஆக. 30: பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஏழைகள¢ நலன்சார்ந்ததாக பட்ஜெட் இருக்கும் என்று பெங்களூர் பொறுப்பு அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங¢களூர் மாநகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 மாதங்கள் கழிந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் இழுபறியில் இருந்தன. ஒருவழியாக இன்று மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நிதிக்குழு தலைவர் சதாசிவா பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மேயர் நடராஜ், துணைமேயர் தயானந்த், பெங்களூர் பொறுப்பு அமைச்சர் அசோக், மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா, நிதிக்குழு தலைவர் சதாசிவா ஆகியோர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். மாநகராட்சியிலுள்ள ஒவ்வொரு வார்டுக்கும் மேம்பாட்டு நிதியாக தற்போது ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது. கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று அந்த தொகையை ரூ.2 கோடியாக உயர்த்தலாம் என்று ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னி¢ட்டு நிதிக்குழு அதிகாரிகள் பட்ஜெட் வடிவமைப்பை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பட்ஜெட் குறித்து அமைச்சர் அசோக் கூறியதாவது: மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே பெங்களூரின் பல பகுதிகளிலும் மக்கள் பெரும் பிரச்னைகளை சந்திப்பது வழக்கமாகிவருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசல், காற்றுமாசடைதல் உள்ளிட்ட பிரச்னைகளும் அதிகரித்துள்ளன. இப்பிரச் னைகளுக்கு நிரந்தர தீர்வு காணுவதற்கு மாநகராட்சி பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாட்டின் அழகான நகராக பெங்களூரை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்காக பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் அமைப்பது, கீழ்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பாஜ ஆட்சியில் செய்துவைத்துள்ளோம்.

பெங்களூர் மாநகராட்சி தற்போது பாஜ வசமுள்ளது. எனவே இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் செயல்படுத்தாத பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். குறிப்பாக ஏழை மக்களின் நலன் காக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்றார்.

 

2 முறை ஒத்திவைக்கப்பட்டு மாநகராட்சி பட்ஜெட் 23ம் தேதி தாக்கல்

Print PDF

தினகரன் 13.08.2010

2 முறை ஒத்திவைக்கப்பட்டு மாநகராட்சி பட்ஜெட் 23ம் தேதி தாக்கல்

பெங்களூர், ஆக. 13:பெருநகர் பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 2முறை ஒத்திவைக்கப்பட்டு இம்மாதம் 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

பெருநகர் மாநகராட்சியின் மேயராக எஸ்.கே.நடராஜ் பதவியேற்று நான்கரை மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. சதாசிவாவை நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவராக நியமனம் செய்து ஒன்றரை மாதம் கடந்துவிட்டது. இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முனிசிபல் சட்டத்தின்படி ஆண்டுக்கு ஒருமுறை சூழற்சி முறையில் மேயர், துணைமேயர் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைய மேயரின் பதவி காலம் இன்னும் 7 மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளது.

இம்மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தாலும், அதை செயல்படுத்த சில மாதங்கள் ஆகும். தற்போதுள்ள மேயர் பதவிக்காலத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், எந்த வளர்ச்சி திட்டம் செயல்படுத்தாமல் காலம் கடத்தப்பட்டது. தற்போது மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகம் வந்து நான்கு மாதங்கள் கடந்தும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருப்பது, நிலைக்குழு அமைப்பது உள்பட எந்த பணியும் நடக்காமல் காலம் கடத்துவது போன்ற சம்பவங்கள் மக்களிடம் கெட்ட அபிபிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதாசிவா, கடந்த 7ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதாக அறிவித்தார். அது முடியாத பட்சத்தில் வரும் 16ம் தேதி (திங்கட்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். பட்ஜெட் தயாரிப்பு பணி இன்னும் முழுமை பெறாததால், வரும் 16ம் தேதி தாக்கல் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் மூலம் தெரியவருகிறது. பட்ஜெட் நகல் தயாரித்து அதை முதல்வர் எடியூரப்பாவிடம் கொடுத்து, அவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்பது மேயரின் முடிவாகவுள்ளது.

மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் எப்படி திட்டம் வகுக்க வேண்டும் என்பதற்கான மாதிரி பட்டியலை கடந்த 20 நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் தயாரித்து நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவாவிடம் கொடுத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து மாநகராட்சின் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் சதாசிவா இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக மேயர் நடராஜ், துணைமேயர் தயானந்தா, ஆணையர் சித்தையா, நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவா நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில் மாநகராட்சியின் நிலைக்குழு எண்ணிக்கையை 12வரை உயர்த்தி கொள்ள ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் வழங்கியுள்ளதை தொடர்ந்து, பட்ஜெட் தாக்கலுக்குள் நிலைக்குழு தலைவர்கள் நியமனம் செய்ய மேயர் முடிவு செய்துள்ளார்.

 

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 16ல் தாக்கல்

Print PDF

தினகரன் 06.08.2010

பெங்களூர் மாநகராட்சி பட்ஜெட் 16ல் தாக்கல்

பெங்களூர், ஆக. 6: பெருநகர் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்தும் இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருப் பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006 நவம்பர் மாதம் தொடங்கி கடந்த மே மாதம் வரை 41 மாதங்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், இருந்த மாநகராட்சிக்கு தேர்தல் நடத்திய புதிய மேயர் மற்றும் துணை மேயர் பதவியேற்று செயலாற்றி வருகிறார்கள். இதுவரை நான்கு முறை மாமன்ற கூட்டமும் நடந்துள்ளது. மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்ய வசதியாக சதாசிவாவை நிதி மற்றும் வரி நிலைக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடன் 7 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவராக பொறுப்பேற்ற சதாசிவா, ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வேன் என்று அறிவித்தார். இதற்கு வசதியாக மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளுடனும் வேகமாக ஆலோசனை நடத்தினார். இடையில் பட்ஜெட் தாக்கல் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, ஆகஸ்ட் 9ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதாக சதாசிவா தெரி வித்தார். ஆனால், தற்போது மாந கராட்சி வட்டாரத்தில் விசாரித்ததில் வரும் திங்கட்கிழமை 16ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் ஏற்பாடு எதுவுமில்லை என்பது தெரியவந்தது.

மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் அமைந்து கடந்த வாரத்துடன் 100 நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் காலம் கடத்துவது மாநகரின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாநகராட்சி நிர்வாகம் அமைந் 1397776754 3மாதம் கடந்து நான்காவது மாதம் தொடர்கிறது. மேயர் எஸ்.கே.நடராஜ் தலைமையிலான நிர்வாகம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்கும். இப்போது பட்ஜெட் தாக்கல் செய்தாலும், அதில் அறிவிக்கும் திட்டம் செயல்பட சில மாதங்கள் தேவைப்படும். இதில் மேயர் நடராஜ் தனது பதவி காலத்தில் எந்த சாதனையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பது மக்களின் கருத்தாகவுள்ளது.

மாநகராட்சியில் இதுவரை நிதி மற்றும் வரி நிலைக்குழுவை தவிர வேறு நிலைக்குழு தலைவர்கள் நியமனம் செய்யவில்லை. தற்போது நிலைக்குழுவின் எண்ணிக்கையை 12 வரை உயர்த்த ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதால், காலியாகவுள்ள 11 குழுக்களுக்கு உடனடியாக தலைவர்கள் நியமனம் செய்தபின், பட்ஜெட் தாக்கல் செய்ய மேயர் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. மாநகராட்சி வட்டார கணிப்பின் படி இம்மாதம் 16ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

 


Page 17 of 31