Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

போக்குவரத்து செயல்பாட்டுக்கு 10 நகராட்சிகளுக்கு ரூ. 2.5 கோடி மானியம்

Print PDF

தினகரன்       21.01.2011

போக்குவரத்து செயல்பாட்டுக்கு 10 நகராட்சிகளுக்கு ரூ. 2.5 கோடி மானியம்

சென்னை, ஜன. 21:

கடந்த ஆண்டில் போக்குவரத்து செயல்பாடு, மேலாண்மை திட்டத்தின் மூலம் 10 நகராட்சிகளுக்கு ரூ. 2.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தின் மாநகரங்கள், நகரங்களில் தற்போதுள்ள நடைமுறைகளை ஆராய்ந்து, நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை நீக்கி சீரான முறையில் ஏற்படுத்த நகர் ஊரமைப்பு துறையால் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 5 மாநகரங்களும், 58 நகரங்களுக்கும் போக்குவரத்து செயல்பாடு மற்றும் மேலாண்மை திட்டங்களையும் நகர் ஊரமைப்பு துறை தயாரித்துள்ளது.

இந்த திட்டங்களை அந்தந்த உள்ளாட்சியே செயல்படுத்த போதிய நிதி வசதி இல்லாதிருக்கும் நிலையில் ஊரமைப்பு நிதியிலிருந்து மானியமாக நிதி வழங்கி திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, திட்ட மதிப்பீட்டில் 75 சதவீத தொகை நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து மானியமாகவும், மீதம் 25 சதவீத தொகை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தனது சொந்த நிதியிலிருந்தும் செலவு செய்ய வேண்டும். அதிகபட்ச மானிய தொகையாக மாநகராட்சி ஒன்றுக்கு ரூ. 50 லட்சமாகவும், ஒரு நகராட்சிக்கு ரூ. 25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு துறையால் கடந்த 2009&10 ஆண்டில் போக்குவரத்து செயல்பாடு மற்றும் மேலாண்மை திட்டத்தின்படி செங்கல்பட்டு, ராஜபாளையம், மயிலாடுதுறை, உடுமலைப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருப்பத்தூர், பரமக்குடி, சிதம்பரம் உட்பட 10 நகராட்சிகளுக்கு தலா ரூ. 25 ட்சம் வீதம் நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 75 விழுக்காடு மானியமாக மொத்தம் ரூ. 2.50கோடியை அரசு வழங்கியுள்ளது.
 

கசாப் வழக்கு விசாரணையால் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு

Print PDF
தினகரன்       30.12.2010

கசாப் வழக்கு விசாரணையால் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு


மும்பை, டிச. 30:

தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான வழக்கின் விசாரணையால் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப், ஆர்தர் ரோடு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது அப்பீல் மனு, சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஒர்லி, பிரபாதேவி உள்பட 47 இடங்களில் புதிய குடிநீர் குழாய்களை பதிக்க, 2009ம் பிப்ரவரியில் மும்பை மாநராட்சி டெண்டர் விட்டது.

ரூ. 35 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், 35 இடங்களில் பணியை முடித்து விட்டார்.
ஆர்தர் ரோடு சிறை அருகே உள்ள சானே குருஜி மார்க் பகுதியில் பணி நடக்கவில்லை. கசாப் வழக்கு விசாரணை தொடங்கியதால், அப்பகுதியில் பணி தொடர போக்குவரத்து போலீஸ் அனுமதி மறுத்து விட்டது. 2009 முதல் கடந்த மே வரை அப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.

தற்போது இந்த பணியை மேற்கொள்ள கூடுதலாக ரூ. 12 கோடி வேண்டும் என்று ஒப்பந்ததாரர் கோரியுள்ளார்.

இதை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. கான்ட்ராக்டர் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் மாநகராட்சிக்கு கடிதமும் எழுதியுள்ளார். அஜ்மல் வழக்கு விசாரணையால், தற்போது மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
 

வணிக நிறுவனங்களிடம் ரூ. 200 கோடி திரட்ட மாநகராட்சி திட்டம்

Print PDF
தினகரன்      21.12.2010

வணிக நிறுவனங்களிடம் ரூ. 200 கோடி திரட்ட மாநகராட்சி திட்டம்

பெங்களூர், டிச.21:
 
 
வணிக நிறுவனங்களிடம் லைசென்ஸ் கட்டணமாக ரூ.200 கோடி திரட்ட பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெருநகர் பெங்களூர் எல்லைக்குள் 5 லட்சத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் அவற்றில் 40 ஆயிரம் வணிக நிறுவனங்கள் மட்டுமே லைசென்ஸ் பெற்றுள்ளன. லைசென்ஸ் கட்டணமாக மாநகராட்சிக்கு ரூ.17 கோடி கிடைத்துவருகிறது. இத்தொகையை ரூ.200 கோடியாக உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா, இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. முடிதிருத்தும் கடை முதல் சாப்ட்வேர் நிறுவனம் வரை பெங்களூர் எல்லையிலுள்ள வணிக நிறுவனங்கள் கட்டாயமாக லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை சித்தய்யா வலியுறுத்தியுள்ளார்.

மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் விளம்பர பிரிவுக்கான துணை கமிஷனர் ராமச்சந்திரமூர்த்தி இதுகுறித்து கூறியது: சிறிய வணிக நிறுவனங்களிடமிருந்து சிறிய தொகைதான் வசூல் செய்யப்பட்டாலும் கூட அனைவரும் லைசென்ஸ் கட்டணம் செலுத்தினால் அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

‘லைசென்ஸ் பெறுவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. பணம் செலுத்திய பிறகும் லைசென்ஸ் கிடைக்கவி¢ல்லை‘ என்று வர்த்தகர்கள் புகார் கூறுகின்றனர்.

எனவே பெங்களூர் மாநகராட்சி தலைமையகத்திலேயே லைசென்ஸ் வழங்க ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி அதன் மூலம் லைசென்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு உடனடியாக லைசென்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மண்டல வாரியாக துண்டு பிரசுரங்கள் மூலம் வணிகர்களுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 


Page 10 of 37