Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு கிடுக்கிப்பிடி

Print PDF

தினமலர்      13.09.2014

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு கிடுக்கிப்பிடி

மதுரை: மதுரை மாநகராட்சியில் கிடப்பில் இருக்கும் ரூ.29 கோடியை உடனே வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளதால் நேற்று கமிஷனர் கதிரவன் அவசர கூட்டம் நடத்தினார்.மாநகராட்சியில் கட்டுமானம் தொடர்பான அனுமதி மற்றும் ஒப்புதல் பெற வருவோர் 'உள்கட்டமைப்பு மேம்பாடு' கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். இதுதொடர்பான அரசின் ஆணை நடைமுறையில் இருந்த போதும் மாநகராட்சியில் அதை கடந்த காலங்களில் பின்பற்றவில்லை.வணிக வளாகம், குடியிருப்புகளுக்கு என அளவைக்கு ஏற்பட கட்டணம் மாறுபடுகிறது. பெறப்படும் கட்டணம் மூலம் மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ளலாம். தவிர அது தொடர்பான அறிக்கையை அரசுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த வகையில் மதுரையில் ரூ.29 கோடி உட்கட்டமைப்பு மேம்பாடு கட்டணம் பாக்கி இருப்பது அரசுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவற்றை வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கமிஷனர் கதிரவன் நேற்று நகரமைப்பு பிரிவினர் மற்றும் வருவாய் பிரிவினருடன் அவசர கூட்டம் நடத்தினார். பாக்கியுள்ள ரூ.29 கோடியை வசூலிக்க உத்தரவிட்ட கமிஷனர், அது தொடர்பான சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Last Updated on Monday, 15 September 2014 07:11
 

சமூக விரோத செயல்களை தடுக்க குடிநீர் தொட்டியை சுற்றி சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்             23.01.2014 

சமூக விரோத செயல்களை தடுக்க குடிநீர் தொட்டியை சுற்றி சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு

திண்டுக்கல், : சமூகவிரோத செயல்களை தடுக்க மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்குட்பட்ட 18, 23, 30 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டியுள்ளது. இதில் ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர் தொட்டியை சுற்றி சுற்றுச்சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது. காலபோக்கில் பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் சுவர் சிதைந்து விட்டது. சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை மர்மநபர்கள் இடித்து விட்டனர். இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் கும்பல் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது.

இதனையடுத்து சமூகவிரோத செயல்களை தடுக்கவும், மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்ளவும், நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து சுற்றுச்சுவர் கட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சுற்றுச்சுவர் இல்லாததால் குடிநீர் தொட்டி பகுதியில் சமூக விரோத செயல் நடந்து வருவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதை தடுக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

 

சூரிய மின் விளக்குகள் பொருத்த பங்களிப்பு நிதி வழங்கல்

Print PDF

தினமணி             04.01.2014 

சூரிய மின் விளக்குகள் பொருத்த பங்களிப்பு நிதி வழங்கல்

புதுப்பாளையம் பேரூராட்சியில் 30 சூரிய மின் விளக்குகள் பொருத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் மின்சார சிக்கனம் மற்றும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

இதற்காக, பொதுமக்களின் பங்களிப்புத் தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் பேரூராட்சித் தலைவர் கா.சித்ரா அண்மையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் என்.ராஜா, இளநிலை உதவியாளர் பெ.பிச்சாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 2 of 37