Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைப்பு

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைப்பு

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

பழுதடைந்த சாலை

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் குடியிருந்து வருகின்ற னர். இங்கு இருந்து அண்ணா நகருக்கு சாலை செல்கிறது. கடந்த காலகட்டங்களில் குறிப்பிட்ட சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியும் நிறைந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் வாகனங்களும் இயக்க முடியாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கூடலூர் நகராட்சி நிர்வாகத் திடம் பொதுமக்கள் முறையீட்டனர்.

ரூ.5 லட்சத்தில் சிமெண்டு சாலை

இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் ரூ.5 லட்சம் நிதியை ஒதுக்கியது. பின்னர் கோத்தர்வயல் மெயின் ரோட்டில் இருந்து அண்ணா நகர் வரை 130 மீட்டர் தூரம் புதியதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இதனால் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் தோமஸ் கூறும் போது, நீண்ட காலமாக அண்ணா நகர் சாலை பழுத டைந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதியதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

Print PDF

தினமலர்           29.01.2014 

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

தஞ்சாவூர்: தஞ்சையில், நகராட்சி பகுதியில் சாலைகளை, 14 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் சாவித்திரி, கமிஷனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். இதனால், பல ஆண்டாக, குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலைகளுக்கு சாப விமோசனமும், விடிவுகாலமும் கிடைத்துள்ளது. தஞ்சை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 51 வார்டுகள் உள்ளன. பல்வேறு வார்டுகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்து, பழுதாகி கிடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தில், 14 கோடியே, 21 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஜெ., ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தஞ்சை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்த குண்டு குழி சாலைகளை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. தஞ்சை நகராட்சிக்கு உட்பட்ட, 37வது வார்டிலுள்ள விக்டோரியா நகர், ஆதிசேஷன் தெருவில் சாலை சீரமைப்பு பணியை நகராட்சி தலைவர் சாவித்திரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இன்ஜினியர் சீனிவாசன், உதவி இன்ஜினியர்கள் முத்துலட்சுமி, சங்கீத பிரியா, கவுன்சிலர் சிவக்குமார், அ.தி.மு.க., வார்டு செயலாளர் கிருபாகரன் பங்கேற்றனர்.

தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி கூறியதாவது: முதல்வர் உத்தரவுப்படி, நகராட்சி சாலைகளை சீரமைக்க, 14 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தஞ்சை நகராட்சி பகுதியில், 51 வார்டுகளிலும் சீரமைக்காமல் இருந்த சாலைகள், 4 பிரிவாக பிரித்து, தார் சாலை போடும் பணி மேற்கொள்ளப்படும். இதன்படி, 6,840 மீ., இரண்டு கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பிரிவாகவும், 8,240 மீ., 3 கோடி ரூபாய் மதிப்பில் மற்றொரு பிரிவாகவும், 11ஆயிரத்து,920 மீ., 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்றாம் பிரிவாகவும், 10ஆயிரத்து,190 மீ., 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்காவது பிரிவாகவும் பணிகள் நடக்கவுள்ளது. தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தஞ்சையில் முதல்வர் உத்தரவாலும், நகராட்சி அதிரடி நடவடிக்கையாலும் பழுதான சாலைகளுக்கு சாப விமோசனம் கிடைத்துள்ளது. கடந்த முறை தி.மு.க., நகராட்சி தலைவர் பொறுப்பு வகித்தது முதல் இதுவரை, பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக குட்டை போல மழை நீர் தேங்கிய தெருக்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இனிமேல் நகர தெருக்களில் டூவீலர், ஆட்டோ பயணிகள் அவதிப்பட வேண்டியதில்லை என, தஞ்சை நகர மக்கள் தெரிவித்தனர்.

 

ரூ.25 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூஜை

Print PDF

தினகரன்             25.01.2014

ரூ.25 லட்சம் மதிப்பில் சாலை அமைக்க பூஜை

புதுச்சேரி, :புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை மூலம் வழங்கிய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகர மற்றும் கிராம அமைத்துறை நிதி உதவியுடன் உருளையன்பேட்டை வார்டு பகுதியில் உள்ள மார்க்கெட் வீதி முழுவதும் ரூ.25 லட்சம் செலவில் புதுச்சேரி நகராட்சி மூலம் சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை நேரு எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர் சாய்நாதன், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் பழனிராஜன், தொகுதி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் கலியன், ராமலிங்கம், சிவராஜ், அப்துல்கலாம், இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் அஞ்சலிதேவி, கோபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


Page 5 of 167