Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருத்தங்கலில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்க நகராட்சி முடிவு

Print PDF

தினமணி             23.01.2014 

திருத்தங்கலில் ரூ.3 கோடியில் சாலை சீரமைக்க நகராட்சி முடிவு

திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைப் பகுதிகளில் பேவர்கல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர்மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி மற்றும் துணைத் தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் கூறினார்கள்.

  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற சாலைமேம்பாட்டு  திட்டத்தின்கீழ், நகராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சிமிண்ட் பேவர்கல் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 3 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து, இந்தத் தொகையை, அரசு மானியமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு. திட்ட பிரேரணை தயார் செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வார்டு எண் 1,9 மற்றும் 12ல் உள்ள அண்ணா காலனி குறுக்குத் தெருக்கள், இந்திரா நகர், கண்ணகி காலனி, பழனிச்சாமி வீதியிலும், வார்டு 2,7, மற்றும் 16ல் சுப்பிரமணியர் கோவில் குறுக்குத் தெரு, ராதாகிருஷ்ணன் காலனி, அய்யாச்சாமி பிள்ளை சந்து, மாட்டுமந்தை வீதி ஆகியவற்றிலும், வார்டு 3,11 மற்றும் 13ல் உள்ள பசும்பொன் நகர் குறுக்குத்தெரு, பாண்டியன் நகர் குறுக்குத்தெரு, 32 வீட்டு காலனி குறுக்குத்தெரு, முனீஸ்வரன்நகர், கே.கே.நகர் பகுதியிலும், வார்டு 10,14 மற்றும் 17ல் உள்ள தெருக்களான அழகன்சந்து, வையன் வீதி, எஸ்.என். புரம் சாலைகுறுக்குத் தெரு பகுதியிலும், வார்டு 19,20 மற்றும் 21 ஆகியவற்றில் உள்ள தெருக்களான போடிநாயக்கர் குறுக்குத்தெரு, ஆசாரிமார் நந்தவன குறுக்குத்தெரு, மேலமாடவீதி, சுக்கிரவார்பட்டி குறுக்குத்தெரு பகுதிகளிலும், வார்டு 15, 18 ல் உள்ள தெருக்களான நாடார் பிள்ளையார் கோவில் தெரு, சுக்கிரவார்பட்டி சாலைகுறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் பேவர் கல் சாலை அமைக்கப்படும்.

 

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

Print PDF

தினகரன்             23.01.2014 

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி 4வது மண்டல பகுதியில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு சேவை நிதி கழகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணியால் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 46வது வார்டு பகுதியில் சரவணபவ நகர் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லத்தம்பி நகர் ஆகிய பகுதிகளில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளுவர் நகர், நிட்இந்தியா ரோடு ஆகிய பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலும் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவுள்ள.

 47வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லும், பாரதிநகர் முதல்வீதி, 2வது வீதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிநகர் 3வது வீதி, 7வது வீதி ஆகிய பகுதிகளில் 34 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

4வது மண்டல பகுதியில் உள்ள இருவார்டுகளிலும் 2.28 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தார்சாலைகள், மழைநீர்வடிகால் அமைத் தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி பாரதிபாளையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பணியைத் தொடங்கி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் காஞ்சனா பழனிச்சாமி, மனோகரன், ஆணையாளர் விஜயலட்சுமி, பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணை யர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி, எம்.கே.ராஜா, கவிதாரமேஷ், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை

Print PDF

தினமணி             21.01.2014 

சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை

திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் சபாபதிபுரம் தெருவில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் கோயில் வாசல் வரை செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்கு நாழிக்கிணறு வழியாக செல்வதற்கு சபாபதிபுரம் தெரு வழியாக சாலை உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளால் இச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இச்சாலையைச் சீரமைக்க பல்வேறு தரப்பிலிருந்து பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி, தைப்பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஐயப்ப சீசன் போன்ற பல காரணங்களால் நிதி ஒதுக்கியும் இச்சாலையானது சீரமைக்கப்படாமல் இருந்தது.  தற்போது இருபுறங்களும் கான்கிரீட் கற்கள் பதித்து, நடுவில் புதிய தார்ச்சாலை, ரதவீதி-அமலிநகர் சந்திப்பில் தொடங்கி நாழிக்கிணறு டோல்கேட் வரை சுமார் 773 மீ. சாலை ரூ. 73 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா, உதவி பொறியாளர் சண்முகநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மு.வடிவேல் உள்ளிட்டோர் இப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ள மாசிப்பெருந்திருவிழாவுக்கு முன்னதாக இச்சாலை சீரமைப்புப் பணி நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 7 of 167