Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

Print PDF

தினத்தந்தி            16.12.2013

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சியில் ரூ.15½ கோடியில் புதிய தார்சாலைகள் அமைப் பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சியில் 3-வது மற்றும் 4-வது மண்டல பகுதியில் சேதமடைந்த தார் சாலைகளை தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மேயர் விசாலாட்சி தலைமை தாங்கினார். கமிஷ னர் செல்வராஜ், துணைமேயர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வனத்துறை அமைச் சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். விழா வில் மண்டல தலைவர்கள் முத்துச்சாமி, கிருத்திகா, கவுன்சிலர் கீதாஆறுமுகம், மாநகர பொறியாளர் ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், செல்வவிநாயகம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரூ. 15½ கோடி

3-வது மண்டலத்தில் உள்ள 31-வது வார்டு முதல் 45-வது வார்டு வரை 15 வார்டுகளிலும் மொத்தம் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.8 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுபோல் 4-வது மண்டலத்தில் உள்ள 46-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை (49, 59-வது வார்டுகள் தவிர) 13 வார்டுகளில் மொத்தம் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் மதிப்பில் தார்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்

Print PDF

தினத்தந்தி           12.12.2013

சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ.1½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்

சேலம் ஆனந்தா இறக்கம் மேம்பாலத்தில் ரூ. 1½ கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தார்சாலை அமைத்தல்

சேலம் டவுன் ஆனந்தா இறக்க உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பாலத்தை விரிவுபடுத்த, தனியாரிடம் இருந்து ரூ. 2½ கோடி மதிப்பில் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தி கிரயம் செய்தது. அதன்பிறகு பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இருபுறமும் மண்சாலை அமைக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது.

இந்த மண்சாலையில் ரூ. 1½ கோடி மதிப்பில் புதியதாக தார்சாலை அமைத்து மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், ஆணையாளர் அசோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தார்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மேயர் கேட்டுக்கொண்டார்.

ஒரு வாரத்தில் பணிகள் முடியும்

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் அசோகனிடம் கேட்டபோது, ஆனந்தா இறக்க உயர்மட்ட மேம்பாலம் இருபுறமும் ஒரு வாரத்திற்குள் தார்சாலை போடப்பட்டு விடும். அதைத்தொடர்ந்து கடை வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆனந்தா புதிய பாலத்தை ஒருவழிப் பாதையாக பயன்படுத்தலாமா? என போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என்றார்.

இந்த ஆய்வின்போது, மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் சித்ரா, முருகன், செயற்பொறியாளர்கள் அ.அசோகன், காமராஜ், வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, மதுசூதனன், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

தார் சாலை பணி

Print PDF

தினமலர்           05.12.2013 

தார் சாலை பணி

புதுச்சேரி: ஆனந்தரங்க பிள்ளை நகரில் 10 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகளை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகர் வார்டுக்கு உட்பட்ட ஆனந்தரங்க பிள்ளை நகரில், தார் சாலை அமைக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஆனந்தரங்க பிள்ளை நகரில் நடந்த நிகழ்ச்சியில், அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், என்.ஆர்.காங். கட்சி நிர்வாகிள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 12 of 167