Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கோவை ஜி.எம்.நகரில் ரூ.70 லட்சம் செலவில் புதிய சாலை

Print PDF

தினத்தந்தி          30.11.2013

கோவை ஜி.எம்.நகரில் ரூ.70 லட்சம் செலவில் புதிய சாலை

கோவை 74–வது வார்டு பகுதி, ஜி.எம்.நகர் உள்பட பல இடங்களில் தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் ஆர்.ஏகாம்பரம் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து கோவை மேயர் செ.ம.வேலுசாமி உத்தரவின்பேரில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜி.எம்.நகர் பகுதி, கோட்டைபுதூர் பகுதிகளில் ரூ.70 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய சாலை அமைக்கப்பட்ட பகுதிகளை உதவி என்ஜினீயர் பாலசந்தர் ஆய்வு செய்தார். புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளதற்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலருக்கு நன்றி தெரிவித்தனர்.
 

நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைப்புபணி துவக்கம்

Print PDF

தினகரன்             29.11.2013

நாசரேத்-குரும்பூர் சாலை சீரமைப்புபணி துவக்கம்

நாசரேத்,  தினகரன் செய்தி எதிரொலியாக பலமாதங்களாக குண்டும் குழியுமாக கிடந்த நாசரேத் - குரும்பூர் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாசரேத்  குரும்பூர் இடையே உள்ள ஓய்யான் குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நெய்விளை, நாலுமாவடி சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்பட்டது. இந்த வழியாக ஏரளமான பஸ்கள், லாரி கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது. குறிப் பாக புன்னைநகர் வனதிருப்பதி கோயிலுக்கும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஜெபக்கூடாரத்துக்கும் மாதந்தோறும் ஏராளமான ஸ்பெஷல் பஸ்களும் வேன்களும் மற்றும் கார்களும் சென்று வருகிறார்கள்.

இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்பட்டனர். இந்த சாலையை விரைவில் சீரமைக்ககோரி கடந்த 24ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தன. இதன் எதிரொலியாக சாலையை அகலப்படுத்தி சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மூக்குப்பீறியில் இருந்தே ரோட்டின் இருபக்கத்திலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தொண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து நாசரேத் காங்கிரஸ் சிறுபான்மைபிரிவு தலைவர் பீட்டர் கூறியதாவது: நாசரேத்-குரும்பூர் சாலை பல மாதங்களாக மோசமான நிலையில் கிடந்தன. இந்த வழியாக மோட்டார் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கடந்த 24 ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வந்த உடனே சாலைப்பணிகள் தொடங்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் இதுகுறித்து நாசரேத்தை சேர்ந்த ஆனந்தராஜ் கூறியதாவது, நாசரேத் குரும்பூர் இடையே சாலைப்பணி தொடங்கப்பட்டுள்ளது இதனை விரைவில் முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

 

தனியார் பங்களிப்புடன் சாலை அமைக்கும் திட்டம் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

Print PDF

தினமலர்             29.11.2013

தனியார் பங்களிப்புடன் சாலை அமைக்கும் திட்டம் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது மாநகராட்சி

சென்னை:திருவனந்தபுரம் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டதை போன்று, தனியார் பங்களிப்புடன் புதிய சாலை அமைக்கும் பணிகளை செயல்படுத்த முடியுமா என, சென்னை மாநகராட்சி ஆய்வு பணிகளை துவக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் தனியார் பங்களிப்புடன் திருவனந்தபுரம் மாநகராட்சியில் நகர சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதை முன்மாதிரியாக கொண்டு, சென்னை மாநகராட்சியிலும் சாலைகளை தனியார் பங்களிப்புடன் உருவாக்க முடியுமா என, ஆய்வு மேற்கொள்ளுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.

அதை அடிப்படையாக கொண்டு, சென்னை மாநகராட்சியில் தனியார் பங்களிப்புடன் சாலைகள் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில், இதற்கான சாத்தியகூறுகள் குறித்து முதலில் ஆய்வு செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிவாக்க பகுதிகளில் இன்னும் புதிய சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் கொண்ட பல பிரதான சாலைகளும் மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த தனியார் பங்களிப்பு திட்டத்தை விரிவாக்க பகுதிகளில் செயல்படுத்த முடியுமா என, சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

இதற்காக விரிவாக்க பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டிய புதிய சாலைகள் குறித்த பட்டியலை மாநகராட்சி தயாரித்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவனந்தபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் நிதி பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு, இந்த சாலைகளை அந்த தனியார் பராமரிக்க வேண்டும்.

இதற்கு நிதி முதலீடு செய்யும் தனியாருக்கு என்னென்ன ஆதாயங்கள் வழங்கப்படுகின்றன என தெரியவில்லை. அதை பொறுத்து சென்னையில் இந்த திட்டம் சாத்தியமா என, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி, தனியார் நிதி பங்களிப்புடன் சாலைகள் அமைக்கப்படுகின்றன. 15 ஆண்டுகளுக்கு இந்த சாலைகளை அந்த தனியார் பராமரிக்க வேண்டும்.

Last Updated on Friday, 29 November 2013 10:25
 


Page 13 of 167