Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

குப்பையிலிருந்து பிளாஸ்டிக் சாலை:மாங்காடு பேரூராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமணி           15.10.2013

குப்பையிலிருந்து பிளாஸ்டிக் சாலை:மாங்காடு பேரூராட்சியில் அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே முதல்முறையாக மாங்காடு பேரூராட்சியில் குப்பைகளை தரம்பிரித்து பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.

இங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கிழ் தனியார் மூலம் 34 ஊழியர்களும், பேரூராட்சி மூலம் 21 துப்புரவு ஊழியர்களும் நியமிக்கப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் நாளொன்றுக்கு 12 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

புதிய அரவை இயந்திரம்...

இந்த குப்பைகள், பேரூராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு பிளாஸ்டிக் பொருள்கள் மட்டும் தனியே பிரிக்கப்படுகின்றன.

பின்னர் பெறப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், கப்கள் உள்ளிட்டவை தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அவை பேரூராட்சியில் புதிதாக வாங்கப்பட்டுள்ள அரவை இயந்திரத்தின் மூலம் அரைக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் சாலை...

இதனைத்தொடர்ந்து அவை, சிறிய பிளாஸ்டிக் துகள்களாக சேகரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் தார்ச் சாலைகளாக மாற்றப்படும்.

இது போன்ற சாலைகள், சாதாரண தார்ச் சாலைகளைக் காட்டிலும் அதிக வலுவுள்ளதாகவும், நீண்டக்காலம் சேதமடையாமலும் இருக்கும்.

இது குறித்து மாங்காடு பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் கூறியது:

மாங்காடு பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பில் புதிய அரவை இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் மூலம் ஒரு மணிநேரத்தில் 40 முதல் 50 கிலோ வரையிலான பிளாஸ்டிக் பொருள்கள் அரைக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படும்.

தற்போது பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் இங்குள்ள சாலைகள் பிளாஸ்டிக் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

பேரூராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு சாலை அமைக்கப்படுவது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மாங்காடு பேரூராட்சியில்தான் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார் அவர்.

 

துரைப்­பாக்கத்தில் கான்­கிரீட் சாலை ரூ.1.2 கோடிக்கு மாந­க­ராட்சி ஒப்­பந்தம்

Print PDF

தினமலர்          15.10.2013

துரைப்­பாக்கத்தில் கான்­கிரீட் சாலை ரூ.1.2 கோடிக்கு மாந­க­ராட்சி ஒப்­பந்தம்

சென்னை : துரைப்­பாக்கம் ஆனந்தா நகரில், கான்­கிரீட் சாலை அமைக்க, 1.2 கோடி ரூபாய்க்கு மாந­க­ராட்சி ஒப்­பந்தம் கோரி­யுள்­ளது.

சோழிங்­க­நல்லுார் மண்­ட­லத்­திற்கு உட்­பட்ட, 193வது வார்டு துரைப்­பாக்கம், ஆனந்தா நகர், விநா­யகா நகர் பகுதி. இங்கு ஏரா­ள­மான குடி­யி­ருப்­புக்கள் உள்ள நிலையில், போதிய அடிப்­படை வச­திகள் இல்­லாத நிலை காணப்­ப­டு­கி­றது.

சாலை, மழைநீர் கால்­வாய்கள் இல்­லா­ததால், மழைக்­காலம் என்­றாலே, இந்த பகு­தி­வா­சிகள், சோகத்தில் மூழ்­கி­வி­டு­கின்­றனர்.

இது குறித்து, மாந­க­ராட்­சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்­ததை தொடர்ந்து, மேயர் சைதை துரை­சாமி, இந்த பகு­தி­களில் நேரில் ஆய்வு செய்தார். இதை அடுத்து, தற்­போது விநா­யகா நகர், ஆனந்தா நகரில் கான்­கிரீட் சாலை அமைக்க மாந­க­ராட்சி முன்­வந்­துள்­ளது. மூன்று சிப்­ப­மாக 1.2 கோடி ரூபாய்க்கு ஒப்­பந்தம் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இதன்­படி ஆனந்தா நகர் பிர­தான சாலையில், 42.89 லட்சம் ரூபாய்க்கும், ரேடியல் சாலை முதல் ஆனந்தாநகர் ஒன்­றா­வது தெரு வரை, விநா­யகா நகர் பிர­தான சாலையில், 43.07 லட்சம் ரூபாய்க்கும், ஆனந்தா நகர் ஒன்­றா­வது தெரு சந்­திப்பு முதல், ஆனந்தா நகர் பிர தான சாலை வரை 34.12 லட்சம் ரூபாய்க்கும் கான் கிரீட் சாலை அமைக்­கப்­பட உள்­ளன.

இந்த பணி­க­ளுக்கு வரும் 25ம் தேதி ஒப்­பந்தம் திறக்­கப்­ப­டு­கி­றது. அடுத்த மாதம் சாலை பணிகள் துவங்கும் என, மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 

உடுமலை பகுதியில் ரூ10 கோடியில் தார்சாலைகள்

Print PDF

தினகரன்             09.10.2013

உடுமலை பகுதியில் ரூ10 கோடியில் தார்சாலைகள்

உடுமலை, : உடுமலை பகுதியில் பல்வேறு ரோடுகள் தார்சாலையாக மாற்றப்படுகிறது. குறிச்சிக்கோட்டையில் இருந்து குமரலிங்கம் ரோடு வரை 8 கி.மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது. கொழுமத்தில் இருந்து கல்லாபுரம் ரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் 600 மீட்டரில் தார்சாலை அமைக்கப்படுகிறது கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. கொழுமத்தில் இருந்து பழனி ரோடு செக்போஸ்ட் வரை தார்சாலை அமைக்கப்படுகிறது. உடுமலை-தாராபுரம் ரோட்டில் 2 கி.மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது. உடுமலை-பல்லடம் ரோடு பூளவாடி பிரிவில் இருந்து பூளவாடி வரை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் ரூ.10 கோடியில் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கான நிதியை அரசு ஒதுக்கி உள்ளது.

 


Page 17 of 167