Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

160 சாலைகளில் பள்ளம்: செங்கல் தூள் கொண்டு நிரப்பும் பணி தீவிரம்

Print PDF

தினமணி 9.11.2009

160 சாலைகளில் பள்ளம்: செங்கல் தூள் கொண்டு நிரப்பும் பணி தீவிரம்

சென்னை, நவ.8: சென்னையில் பெய்து வரும் தொடர் மழைக்கு 160 சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களை செங்கல் தூள்கள் கொண்டு நிரப்பும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

சென்னையில் பெய்து வரும் தொடர் மழைக்கு 160 சாலைகளில் புதிதாக பள்ளங்கள் உருவாகியுள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஆர்க்காடு சாலை, எல்.பி. சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, டிடிகே சாலை, ஜி.என். செட்டி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இந்தப் பள்ளங்களை செங்கல் தூள்கள் போட்டு நிரப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை நின்றதும் தார் போட்டு மூடும் பணி மேற்கொள்ளப்படும்.

35 ஆயிரம் பேருக்கு குளோரின் மாத்திரைகள்: மழைக்கால நோய்களைத் தடுப்பதற்காக வியாசர்பாடி, கணேசபுரம், பெரம்பூர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 24சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. இதில் 3,437 பேர் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 35,533 பேருக்கு, குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

154 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 124 கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மூலம், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 09 November 2009 09:21
 

சாலைகளை மேம்படுத்த மாநகராட்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 6.11.2009

சாலைகளை மேம்படுத்த மாநகராட்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

திருச்சி, நவ. 5: தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளை மேம்படுத்த ரூ.100கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் டி.எச்.வி. இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி பேசியது:

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் மாநகராட்சிகளுடன், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கரூர், இனாம் கரூர், ஆலந்தூர் மற்றும் வளசரவாக்கம் போன்ற நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள், மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள், நடைபாதை மேம்பாலங்கள் போன்றவை மேம்படுத்தப்பட உள்ளன.

டி.எச்.நி. நிறுவனம் மூலம் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, ஓராண்டுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நவம்பர் 10 ஆம் தேதி தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது என்றார் ஆணையர்.

இக் கூட்டத்தில், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகமது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாச்சலம், டி.எச்.வி. நிறுவனப் பொது மேலாளர் ஆர். ஜகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 06 November 2009 06:31
 

நல்லூர் நகராட்சி ரோட்டை செப்பனிட ஆறு லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 05.11.2009

 


Page 161 of 167