Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

வேலையில்லா பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வு, உயர் கல்விக்கான பயிற்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்

Print PDF

தினத்தந்தி             11.09.2013

வேலையில்லா பட்டதாரிகளுக்கு போட்டித்தேர்வு, உயர் கல்விக்கான பயிற்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைக்கிறார்

 

 

 

 

 

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வு, உயர் கல்விக்கான பயிற்சியை மேயர் சைதை துரைசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கல்வித்துறை மூலம் பயிற்சி

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மாநகரில் படித்த பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி பல துறைகளைச் சார்ந்த கல்வியையும் (சி.ஏ., ஐ.சி.டயிள்யூ.ஏ., எம்.பி.பி.எஸ்., பி.இ., நுழைவுத்தேர்வுகள் பயிற்சி மற்றும் யு.பி.எஸ்.சி. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பயிற்சி, கணினிக் கல்வி போன்ற படிப்புகள்) அகில இந்திய–மாநில அளவிலான பல வேலைவாய்ப்புகளுக்கான, உயர் கல்விக்கான போட்டித்தேர்வுகள் எழுதிடவும், பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்பவும், பள்ளிகளில் இட வசதிக்கேற்ப இப்பயிற்சியினை தனியார் நிறுவனங்களைச் சார்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கல்வித்துறையின் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

நாளை தொடக்கம்

சென்னைப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ–மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கி சென்னை மாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பள்ளிகளில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தேவைக்கேற்ப போட்டித்தேர்வுக்கான பயிற்சி கட்டணமில்லாமல் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ–மாணவியர்கள் சென்னை மாநகராட்சி இணையதளம் www.chennaicorporation.gov.in மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் தலைமையில், மேயர் சைதை துரைசாமி இன்று (புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் சென்னை கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்தில் போட்டி தேர்வு மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான கலந்தாய்வினை தொடங்கி வைக்க உள்ளார்கள். சென்னையில் நடைபெறும் இக்கலந்தாய்வு விழாவில் விண்ணப்பித்த அனைவரும் மற்றும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யாதவர்களும் வருகை தந்து கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

மாநகராட்சி பள்ளியில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம்

Print PDF

தினகரன்              05.09.2013

மாநகராட்சி பள்ளியில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம்

மதுரை: மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், புதிதாக கற்றறிந்து, புத்தகங்களை நேசிக்கும் ஆர்வத்தை வளர்க்கவும் மதுரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி யில் ‘குளுகுளு’ ஏசி வசதியுடன் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் இயங்கி வருகிறது.

மதுரை ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் இருக்கிறது பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி  மேல்நிலைப்பள்ளி. நகரின் மற்ற பள்ளிகளை விட இப் பள்ளி நூலகம் தனித்துவம் கொண்டிருக்கிறது.  ஓட்டை உடைசல் இருக்கை கள், அழுக்கடைந்த அறை க்குள் தூசு படிந்த ரேக்குகள், அட்டை நைந்த புத்தகங்கள் என பார்த்துப் பழகிய நூலகங்கள் மத்தியில் இந்நூலகம் பளிச்சென்று இருக்கிறது.  வரிசையிட்டு அடுக் கிய புத்தகங்களுடன், கம்ப்யூட்டரில் வகைப்படுத்தி வைத்தும், அமர்ந்து படித் துச் செல்கிற ஆசையை ஊற்றெடுக்கும் வகையிலும் அநேக வசதிகள் இங்கிருக்கின்றன. குளுகுளு ஏசி வசதி, சுழற்சி இருக்கைகள் மட்டுமல் லாது, பல்வேறு தலைப்புக ளில் 7 ஆயிரத்திற்கும் அதிக அரிய புத்தகங்களும் இருக்கிறது.

பள்ளி தலைமையாசிரியை முருகேஸ்வரி கூறு கையில், ‘Ôவெறும் 400 புத்தகங்களுடன் 2008ல் இந்நூலகம் துவக்கப்பட்டது. நேர அட்டவணையில் மதிப்புக் கல்விக்கென வாரம் 5 பீரியட்களை கல்வித்துறை  ஒதுக்கியுள்ளது. இசை, தையல், நீதிபோதனைக்கு 3 பீரியட் போக, மீதி 2 பீரியட்களை நூலகக் கல்வி  என்றே பிரித்து வைத்திருக்கிறோம். இந்நேரத்தில் நூலகம் வரும் மாணவர்கள் முறைப்படி கையெழுத் திட்டு, பாடவாரியாக பிரித்து வைத்திருக்கும் புத்தகங்களை எடுத்து படிக்க லாம். 40 நிமிடத்தில் 30 நிமிடங்கள் வாசித்து முடித்ததும், மாணவர்களிடம் படித்ததில் பிடித்ததைக் கேட்கிறோம். சரியான பதில் தரும் மாணவருக்கு உடனடி பரிசுகளும் தருகிறோம். ஊடகங்களில் வெளிவந்துள்ள புதிய செய்திகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். இவை மாணவர் கல்வித்திறனை மேம்படுத்துகிறது,’Õ என்றார்.

பள்ளி நூலகர் கனகதுர்கா, நூலகத்துறையில் உயர்கல்வியுடன், டெல்லி மத்திய நூலகத்தில் சிறப்புப்  பயிற்சியும் பெற்றுள்ளார். கனகதுர்கா கூறுகையில், ‘Ôபேச்சு, கட்டுரைப் போட்டிகளுக்கும், போட்டித்தேர்வுகளுக்கும் நூலகம் வரும் மாணவர்கள் எளிதாக தயாராகி விடுகின்றனர். Ôபடித்தால் பரிசுÕ என்பதும் மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்திருக்கி றது. ஆண்டுக்கு ஆண்டு  நன்கொடையாளர்களால் புத்தகங்கள் எண்ணிக் கையை அதிகரித்து வருகி றோம். சங்கத்தமிழ் துவங்கி  நவீன அறிவியல் வரை தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இங்கிருக்கின்றன,’Õ என்றார்.

பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘இனிமையான வாசிப்பு அனுபவத்தை எங்கள் பள்ளி நூலகம் தருகிறது. வகுப்பறையை விட பெரும் கல்வியை இந்த நூலக அறைக்குள்தான் கற்கிறோம்,’Õ என்றனர்.

 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15ல் துவக்கம் மாணவர்களுக்கு மனநல கவுன்சலிங்

Print PDF

தமிழ் முரசு              04.09.2013 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15ல் துவக்கம் மாணவர்களுக்கு மனநல கவுன்சலிங்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநல கவுன்சலிங் அளிக்க 14 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று மாநகராட்சி கல்வி அலுவலர் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 36 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இங்கு ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் பலரும் வறுமை மற்றும் குடும்ப பிரச்னைகள், பருவகால கோளாறுகள் உள்ளிட்டவற்றால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களால் பாடங்களில் முழுகவனம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக கண்காணிப்பதில்லை. இதனால், மாணவ, மாணவிகள் சிறுவயதிலேயே காதல் என்ற பெயரில் பாலின ஈர்ப்பில் சிக்குகின்றனர். இதனால், அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியதும், மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றுக்கு தீர்வு காண சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்கள் உள்ளது போல், மாநகராட்சி பள்ளிகளிலும் நியமிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி கல்வி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் உள்ள 72 உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பிஎஸ்சி(சைக்காலஜி) படித்த பட்டதாரிகள் 14 பேரை மன நல ஆலோசகர்களாக(கவுன்சலர்) நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியான 8 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 6 பேரை இம்மாதம் 15ம் தேதிக்குள் தேர்வு செய்ய உள்ளோம். கவுன்சலர்கள் தினமும் மதியம் 2 மணியிலிருந்து பள்ளி முடியும் வரை மாணவ, மாணவிகளுக்கு கவுன்சலிங் வழங்குவர்.

பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மண்டலங்களில் 2 முதல் 3 கவுன்சலர்கள் நியமிக்கப்படுவர். இவர்களின் திறமைக்கு ஏற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும். இந்த கவுன்சலர்கள் மாணவ, மாணவிகளின் பிரச்னைகளை அறிந்து, தனித்தனியாகவும் கவுன்சலிங் கொடுப்பார்கள். வரும் 15ம் தேதியில் இருந்து மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கப்படும். இதில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், பள்ளிகளில் இடைநிற்றல் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


Page 7 of 111