Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

தானியங்கி தொழில்நுட்பம் முழுமையடைந்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் மிச்சமாகும்

Print PDF

தினமணி 22.12.2009

தானியங்கி தொழில்நுட்பம் முழுமையடைந்தால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் மிச்சமாகும்

கோவை, டிச.21: தானியங்கி தொழில்நுட்பம் முழுமையடைந்தால் கோவை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.39 லட்சம் மிச்சமாகும் என்று சால்ஜர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசாமி கூறினார்.

இது குறிóத்து கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

கோவை, மதுரை மாநகராட்சிகளில் தானியங்கி தொழில்நுட்ப முறையில் தெரு விளக்குகளை பராமரித்து வருகிறோம். குஜராத், பெங்களூர் மாநகராட்சிகளிலும் இதே திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி முழுவதும் சுமார் 34 ஆயிரம் விளக்குகள் உள்ளன. இதற்கு ஆண்டுக்கு ரூ.1.30 கோடி மின்செலவு ஏற்படுகிறது. தானியங்கி தொழில்நுட்பம் அமல்படுத்தும் பணி விரைவில் முடிவடைந்துவிடும். இப் பணி முடிவடைந்தால் ஆண்டுக்கு ரூ.39 லட்சம் (ஏற்கெனவே ஆகும் மின்செலவில் 30 சதவீதம்) சேமிப்பாகும்.

இதுதவிர, ஆண்டுக்கு 1,300 டன் அளவுக்கு கார்பன்டை ஆக்ûஸடு வெளியேறுவது தடுக்கப்படும். மாநகராட்சியில் எரியாத தெருவிளக்குகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து எளிதில் கண்டுபிடிக்க இயலும். வோல்டேஜ் சென்சிங் மெக்கானிசம் பயன்படுத்தப்படுவதால் விளக்குகளின் ஆயட்காலமும் அதிகரிக்கிறது.

தானியங்கி தொழில்நுட்பம் முழுமையானதும் அதில் சேமிப்பாகும் தொகையில் 95 சதவீதம் எங்களது நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கும் என்றார்.

நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரைசாமி, துணைத் தலைவர் ஆர்.நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

ஆன்லைனில் புகார் செய்யும் வசதி கம்பம் நகராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமலர் 16.12.2009

 

மாநகராட்சி முழுவதும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையம்

Print PDF

தினமணி 08.11.2009

மாநகராட்சி முழுவதும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையம்

திருப்பூர், நவ.7: மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், வரி வசூலை தீவிரப்படுத்தவும் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் என ரூ.35 கோடிக்கும் அதிகமான வரித்தொகை வசூலிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் வரி வசூலை தீவிரப்படுத்தவும், ஒரே இடத்தில் வரி செலுத்துவதால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கவும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், குமரன் வணிக வளாகம், தாராபுரம் சாலையிலுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குமார் நகர் நீர்தேக்கத் தொட்டி, புதுராமகிருஷ்ணாபுரம், ராயபுரம் நீர்த்தேக்கத் தொட்டி, பூச்சக்காடு நீர்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் இந்த கணினி வரி வசூல் மையங்கள் செயல்பட உள்ளன.

இந்த வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்பட துவங்கியுள்ளன. இம்மையங்களில் உள்ள கணினிகள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் உடனுக்குடன் வரி வசூல் கண்காணிக்க முடியும் என்றார் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விரைவில் 100 சதவீத வரிவசூல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Page 35 of 41