Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

"அம்மா' உணவகத்தில் "கவனிக்க' வருகிறது கண்காணிப்பு கேமரா

Print PDF

தினமலர்               13.06.2013

"அம்மா' உணவகத்தில் "கவனிக்க' வருகிறது கண்காணிப்பு கேமரா


கோவை:கோவையிலுள்ள "அம்மா' உணவகங்களில், எவர் சில்வர் தட்டு, டம்ளர் திருட்டு போவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில், "அம்மா உணவகம்' திறக்கப்பட்டுள்ளது.உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலையில் 300 பேர் சாப்பிடும் வகையில் 1,200 இட்லியும், மதியம் சாம்பார் சாதம் 300 பேருக்கும், தயிர் சாதம் 300 பேருக்கும் தயாரிக்கப்படுகிறது.

உணவு வகைகள் தயாரிப்புக்கு 1.62 கோடி ரூபாய் செலவாகும்; உணவு வகைளை விற்பனை செய்வதன் மூலம் 65.71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்; வித்தியாச தொகை 95.95 லட்சம் ரூபாய், மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மா உணவக கட்டட வசதி ஏற்படுத்தவும், சமையல் பாத்திரங்கள், மின் உபகரணங்களுக்கும் 1.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. குறிச்சி, மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் ஆகிய மூன்று உணவகத்தில், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தலா 2 கே.வி.ஏ., சோலார் மின் உற்பத்தி பேனல் அமைக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் ரசீதுக்கு பதிலாக, ஏழு லட்சம் ரூபாய் செலவில், "இ-டோக்கன்' முறை கொண்டு வரப்படுகிறது. சோலார் மின்சக்தி முறையும், இ-டோக்கன் முறையும் தமிழகத்தில் கோவையில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தர ஓட்டல்களை போன்று, எவர் சில்வர் தட்டு, டம்ளர் போன்றவை. அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காலை, மதியம் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, "பபே' முறையில் உணவு சாப்பிடுவர்.

சாப்பிட்ட பின், எவர்சில்வர் தட்டு, டம்ளர்களை "அபேஸ்' செய்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாநகராட்சி அதிகாரிகள், அம்மா உணவகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.
15 தட்டு, 8 டம்ளர் மாயம்

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "உணவகத்தில், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய், புளி, மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, கடுகு, வெந்தயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தினமும் 600 ரூபாய்க்கு காய்கறி, தேங்காய், தக்காளி, வெங்காயம் வாங்கப்படுகிறது. இருப்பு வைக்கும் உணவுப்பொருட்களில் முறைகேடு நடக்கக்கூடாது. மேலும், ஏழு உணவகங்களில் எவர்சில்வர் தட்டு, டம்ளர் காணாமல் போயுள்ளது. இதுவரை 15 தட்டு, எட்டு டம்ளர் திருட்டு போயுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைக்காக, உணவகத்தில் உள்ளே, வெளியே என இரண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. அனைத்து கேமராவும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இணைக்கப்படும். இதற்காக இரண்டு லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

 

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ‘கண்காணிப்பு கேமரா’ தட்டு, தம்ளர் திருட்டு போவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி         13.06.2013

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ‘கண்காணிப்பு கேமரா’ தட்டு, தம்ளர் திருட்டு போவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை


கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் தட்டு, தம்ளர் திருட்டு போவதை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

அம்மா உணவகங்கள்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூ மார்க்கெட், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மணியகாரன்பாளையம், குறிச்சி மாநகராட்சி அலுவலகம், ராமநாதபுரம் 80 அடி ரோடு, திருமால் வீதி திருமண மண்டபம், புதிய பஸ்  நிலையம், மசக்காளிப்பாளையம், சரவணம்பட்டி அம்மன் நகர், குனியமுத்தூர் ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும், சாம்பார் சாதம் ரூ.5–க்கும் விற்பனை  செய்யப்படுகின்றன. காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லியும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் மற்றும் தயிர் சாதமும் வழங்கப்படுகிறது.

தட்டு, தம்ளர் திருட்டு

இதில் ஒருசில உணவகங்களில் சாப்பிட வந்த பொதுமக்களில் ஒருசிலர் தட்டு, தம்ளரை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே உணவகத்துக்கு வருபவர்களை கண்காணிப்பதற்காக கேமரா அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஒவ்வொரு உணவகங்களிலும் எத்தனை கேமராக்கள் அமைக்கப்படுகிறது? எப்போது வைக்கப்படும் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

கண்காணிப்பு கேமரா


கோவை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஒரு அம்மா உணவகத்தில் தட்டு, தம்ளர்கள் திருடப்பட்டு உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவின் விலை குறைவாக இருந்தாலும், தட்டு, தம்ளர்கள் விலை உயர்ந்தது ஆகும். எனவே திருட்டை தடுக்க அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உணவகங்களின் வெளியில் ஒரு கேமரா, உள்பகுதியில் ஒரு கேமரா என்று 2 கேமராக்கள் வீதம் 10 உணவகங்களிலும் 20 கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்க மாநகராட்சியில் டி.வி.கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

கடும் நடவடிக்கை

இதன்மூலம் உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களையும், அங்கு வேலை செய்து வருபவர்களையும் கண்காணிக்க முடியும். உணவகங்களில் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் காய்கறிகள்  திருட்டையும் தடுக்கவும் இது ஏதுவாக இருக்கும். எனவே அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டுவிட்டு, தட்டு, தம்ளரை அங்கேயே வைத்து செல்ல வேண்டும். அதை திருடி செல்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சோலார் முறை

மேலும் பூ மார்க்கெட், குறிச்சி உள்பட 3 அம்மா உணவகங்களில் 2 கிலோவாட் மின்சாரம் தயார் செய்யும் வகையில் சோலார் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு உணவகத்திலும் 10 விளக்குகள், 4 மின்விசிறிகள் மற்றும் ஒரு மிக்சி இயக்கக்கூடிய அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மின்சார செலவு குறைந்து உள்ளது. அதுபோன்று மற்ற உணவகங்களிலும் சோலார் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இனி பெறலாம்

Print PDF
தினகரன்          23.05.2013

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் இனி பெறலாம்


கோவை, : கோவையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனின் பெறும் திட்டத்தை மேயர் துவக்கி வைத்தார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன் லைனில் பொதுமக்கள் பெறும் திட்டத்தை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலு சாமி நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘கோவை மாநகராட்சியில் மலிவுவிலை உணவகம் அமைக்கும் பணிகள் வேகமாக நடை பெற்று வருகின்றன. மக்கள் தேவைகளை, குறைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி அவற்றினை உடனே நிவர்த்தி செய்கின்ற வ¬ கயில் தமிழத்திலேயே முதன் முதலாக கோவை மாநகராட்சியில் தான் எஸ்.எம்.எஸ். வசதி துவக்கப்பட்டது. 4000 சதுர அடி கட்டட அனுமதி ஆன் லைனில் ஒப்புதல் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் வசதி துவக்கப்பட்டுள்ளது. 1981 முதல் 2011 வரையிலான 8,99,954  பிறப்பு பதிவுகளும்,  5,46,320 இறப்பு பதிவுகளும் ஆன் லைன் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கென தனி யாக கணிப்பொறி சர்வர் அமைக்கப்பட்டு ஒரே நேர த்தில் 2000 பேர் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் லதா, துணை ஆணையர் சிவ ராசு, சுகாதார குழு த¬ லவர் தாமரைச்செல்வி, மண்டல குழு தலைவர்கள் ஆதிநாராயணன், ஜெய ராம், சாவித்திரி, பணிக்குழு தலைவர் அம்மன் அர்ச்சுனன், கல்வி குழு தலைவர் சாந்தாமணி, கணக்கு குழு தலைவர் கணேசன், கவுன்சிலர்கள் மாரப்பன், சரஸ் வதி, ராஜேந்திரன், நகர் நல அலுவலர் துள சியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


Page 12 of 41