Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க "எஸ்.எம்.எஸ்' அனுப்பும் முறை!

Print PDF
தினமலர்        03.04.2013

மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க "எஸ்.எம்.எஸ்' அனுப்பும் முறை!


கோவை:"எஸ்.எம்.எஸ்' மூலம் புகார் தெரிவிக்கும் முறை, கோவை மாநகராட்சியில் நேற்று அமல்படுத்தப்பட்டது.கோவை மாநகராட்சியில் பொதுமக்களுக்காக, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலையும் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. மேலும், மாநகராட்சி இணையதளத்தில், "ஆன்-லைன்' மூலமும் புகார் பதிவு செய்யப்படுகிறது. "ஆன்-லைன்' சேவையை மேம்படுத்தி, மாநகராட்சி "பேஸ்புக்' மூலமும் புகார் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க "எஸ்.எம்.எஸ்' அனுப்பும் முறை, நேற்று துவங்கப்பட்டது.

மாநகராட்சி மேயர், "எஸ்.எம்.எஸ்' அனுப்பி துவக்கி வைத்தார்.கமிஷனர் லதா கூறியதாவது: மொபைல்போனில் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு அருகில் இருக்கும் பிரச்னைகளை வீட்டில் இருந்தவாரே அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.இந்த சாப்ட்வேரில், மாநகராட்சியிலுள்ள அதிகாரிகள் மொபைல்போன் எண்கள் வார்டு வாரியாக ஒவ்வொரு பிரிவுக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் புகார் சாப்ட்வேர் மூலம் புகார்கள் பெறப்பட்டதும், அந்தந்த வார்டுக்கான அதிகாரிகளின் மொபைல்போன் எண்ணுக்கு "எஸ்.எம்.எஸ்' சென்று விடும்.புகாரில் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு அதிகாரிகள் நேரடியாக சென்று, பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள்.

சீரமைப்பு பணி மேற்கொண்டதற்கான போட்டோவுடன், உயர்அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.புகாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநகராட்சி கமிஷனர், துணைகமிஷனருக்கு "எஸ்.எம்.எஸ்' வந்து விடும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி, புகார்தாருக்கும் "எஸ்.எம்.எஸ்' மூலம் பதில் கொடுக்கப்படும்.மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமில் பெறும் மனுக்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை செய்யப்படும் மனுக்களுக்கும், இந்த சாப்ட்வேரில் பதிவு செய்யப்பட்டு, பதிலளிக்கப்படும்.

மாநகராட்சி இணையதளம் மற்றும் "ஆன்-லைன்' புகார் பணிகள் இரண்டு ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. "எஸ்.எம்.எஸ்' புகார் முறைக்காக கூடுதலாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கமிஷனர் லதா தெரிவித்தார்.துணை கமிஷனர் சிவராசு, செயற்பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் அறிமுகம்:புகார் செய்வது எப்படி?"எஸ்.எம்.எஸ்' மூலம் புகார் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் 92822 02422 என்ற மொபைல்போன் எண்ணை அறிவித்துள்ளது. புகார் செய்யும் போது, வார்டு எண், தெரு பெயர், என்ன பிரச்னை என்பதை "டைப்' செய்து அனுப்ப வேண்டும். "குப்பை அகற்றவில்லையா, சாக்கடையில் அடைப்பா, தெருவிளக்கு எரியவில்லையா, குடிநீர் சப்ளை இல்லையா' மொபைல்போனை எடுங்க, மெசேஜ் டைப் செய்யுங்க, மாநகராட்சி அறிவித்துள்ள எண்ணுக்கு அனுப்புங்க! என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலவச "எஸ்.எம்.எஸ்' சேவை இல்லை, அவரவர் சிம் பிளானுக்கு ஏற்ப கட்டணம் இருக்கும்.
 

வார்டுகளில் குப்பை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினையா? எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காணும் திட்டம் அறிமுகம் மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்

Print PDF
தினத்தந்தி        03.04.2013

வார்டுகளில் குப்பை, தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினையா? எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காணும் திட்டம் அறிமுகம் மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்


கோவை மாநகராட்சி வார்டுகளில் மக்கள் பிரச்சினைகளை எஸ்.எம்.எஸ். மூலம் தீர்வு காணும் திட்டத்தை மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்தார்.

எஸ்.எம்.எஸ் திட்டம்

கோவை மாநகராட்சி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு எஸ்.எம்.எஸ் மூலம் தீர்வு காணும் திட்ட தொடக்க விழா கோவை மாநகராட்சி வளாகத்தில் நடந்தது. இதை கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த சேவையை கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த எஸ்.எம்.எஸ் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரியாமல் இருத்தல், மற்றும் குடிநீர் பிரச்சினைகளை 92822 02422 என்ற எண்ணிற்கு தங்களின் வீதியின் பெயர், மற்றும் வார்டு எண்ணை குறிப்பிட்டு அனுப்பி வைக்கலாம்.

தீர்வு காணப்படும்

இவ்வாறு பெறப்படும் இந்த எஸ்.எம்.எஸ் செய்தி மக்கள் குறை தீர்ப்பு புகார் மென் பொருள் மூலம் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். உடனே 5 பேர் கொண்ட குழு அந்தந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். புகார்கள் பெற்றமைக்கான ஒப்புகையும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.  புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும், குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டம் மக்கள் வீட்டில் இருந்தே குறைகளை அனுப்பி அதை நிவர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் க.லதா, துணை மேயர் லீலாவதி உன்னி, துணை கமிஷனர் சிவராசு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க கம்ப்யூட்டர் வசதி

Print PDF
தினகரன்     27.03.2013

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க கம்ப்யூட்டர் வசதி


சேலம்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை உடனடியாக கொடுப்பதற்கு கம்ப்யூட்டர் வசதி செய்து தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். சண்முகம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் குப்புசாமி துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில், ‘சுகாதார ஆய்வாளர் பயிற்சி முடித்துள்ள அனைவரையும் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கணினி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும். அனைத்து துணை சுகாதார நிலையங்களுக்கும் ஒரு நிரந்த மஸ்தூர் பணியிடம் வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பெரியசாமி மற்றும் செல்வம், பன்னீர்செல்வம், லட்சுமிபதி உட்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 


Page 15 of 41