Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF
தினமலர்        26.03.2013

கம்ப்யூட்டர் பயிற்சி

 
பழநி:பழநி நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை முகாம் மார்ச் 27, 28 ல் நகராட்சி கடைவீதி பள்ளியில் நடைபெறவுள்ளது.வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆகியவற்றுடன் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என பழநி நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

கிழக்கு தில்லி மாநகராட்சியில் இலவச உதவி தொலைபேசி சேவை

Print PDF
தினமணி           08.03.2013

கிழக்கு தில்லி மாநகராட்சியில் இலவச உதவி தொலைபேசி சேவை


கிழக்கு தில்லி மாநகராட்சியில் புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில் இலவச உதவி தொலைபேசி சேவையை மாநகராட்சி மேயர் அன்னபூர்ணா மிஸ்ரா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சி சேவைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கவும், மாநகராட்சியின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் இலவச உதவி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இந்த தொலைபேசி எண் 155303.

இந்த சேவைக்கான அலுவலகம் கிழக்கு தில்லி மாநகராட்சித் தலைமை அலுவலகமான உத்யோக் சதனில் செயல்படும். இந்த தொலைபேசி எண்ணில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த சேவையை விரைவில் 24 மணி நேரமும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அளிக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும்.

குப்பைகள் அள்ள 30 புதிய லாரிகள்: கிழக்கு தில்லி மாநகராட்சியை மேலும் தூய்மையாக வைக்க,குப்பைகளை அள்ள 30 புதிய லாரிகளின் சேவையை அன்னப்பூர்ணா மிஸ்ரா கர்கர்டோமாவில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ""குப்பைகள் அள்ளப்பட்டு, காஜிப்பூருக்கு எடுத்து செல்ல இந்த லாரிகள் பயன்படுத்தப்படும்'' என்றார்.
 

தொடுதிரை கணினி அமைக்க கோரிக்கை

Print PDF
தின மணி           27.02.2013

தொடுதிரை கணினி அமைக்க கோரிக்கை


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை நகராட்சியில் சொத்து வரி, தண்ணீர் வரி, நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்ட விபரங்கள் அறிவதற்கு மக்கள் நகராட்சியில் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த விபரங்களை விரைவாக அறிந்து கொள்வதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் வசதிக்காக தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடுதிரை கணினியை கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் அமைக்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு சிரமமும், அலுவலர்களின் பணிச்சுமையும் குறையும்.   இதுகுறித்து நகர் காங்கிரஸ் தலைவர் ஹமீதுகான் கூறுகையில், ஏற்கெனவே காரைக்குடி,சிவகங்கை போன்ற நகராட்சி அலுவலகங்களில் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். நகராட்சி கணினியில் உள்ள தகவல்களை அப்படியே தொடுதிரை கணினிக்கு மாற்றம் செய்வது தற்போதய கணினி உலகத்தில் மிகவும் எளிதாகும். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அலுவலக  வளாகத்தில் தொடுதிரை கணினி அமைக்க வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 27 February 2013 10:35
 


Page 16 of 41