Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி

Print PDF
தின மணி          23.02.2013

கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி


நாட்டிலேயே முதன்முறையாக கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை, மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவில் கட்டட அனுமதி வழங்கும் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாநகராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்டட பட வரைவாளர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஒரிஜினல் விண்ணப்பங்களை நகரமைப்புப் பிரிவில் வழங்க வேண்டும்.

விண்ணப்பித்த 8 மணி நேரத்துக்குள் கட்டட வரைபடம் சரியாக உள்ளதா, அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா எனும் தகவல்களுடன், செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

அதன்படி கட்டட வரைபடம் தயாரித்து 15 நாள்களுக்குள் வங்கியில் உரிய கட்டணங்களை செலுத்தி, மாநகராட்சி அலுவலகத்தில் இதற்காகத் தனியாக அமைக்கப்பட்ட தகவல் வழங்கும் அறையில் உள்ள பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். 15 நாள்களுக்குள் திருத்தப்பட்ட வரைபடத்தை மாநகராட்சியில் செலுத்தாவிட்டால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 3 நாள்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட நாள், ஆணையாளர் உத்தரவு வழங்கப்பட்ட விவரம், பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட கடித விவரம் ஆகியவை அந்தந்த நிலையில் கட்டட உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும். இந்த முறை வியாழக்கிழமை முதல் கோவை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை மேயர் செ.ம. வேலுசாமி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் (பொ.) சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, செயற்பொறியாளர் (திட்டம்) ஆ.வரதராஜன், மண்டலத் தலைவர் ஜெயராமன், கல்விக் குழுத் தலைவர் சாந்தாமணி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர்கள் மாரப்பன், சரஸ்வதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Last Updated on Monday, 25 February 2013 11:55
 

கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி

Print PDF
தின மணி           22.02.2013

கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி

நாட்டிலேயே முதன்முறையாக கோவை மாநகராட்சியில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டட வரைபட அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை, மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவில் கட்டட அனுமதி வழங்கும் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாநகராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்டட பட வரைவாளர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஒரிஜினல் விண்ணப்பங்களை நகரமைப்புப் பிரிவில் வழங்க வேண்டும்.

விண்ணப்பித்த 8 மணி நேரத்துக்குள் கட்டட வரைபடம் சரியாக உள்ளதா, அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா எனும் தகவல்களுடன், செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்த விவரங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

அதன்படி கட்டட வரைபடம் தயாரித்து 15 நாள்களுக்குள் வங்கியில் உரிய கட்டணங்களை செலுத்தி, மாநகராட்சி அலுவலகத்தில் இதற்காகத் தனியாக அமைக்கப்பட்ட தகவல் வழங்கும் அறையில் உள்ள பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். 15 நாள்களுக்குள் திருத்தப்பட்ட வரைபடத்தை மாநகராட்சியில் செலுத்தாவிட்டால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 3 நாள்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட நாள், ஆணையாளர் உத்தரவு வழங்கப்பட்ட விவரம், பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட கடித விவரம் ஆகியவை அந்தந்த நிலையில் கட்டட உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும். இந்த முறை வியாழக்கிழமை முதல் கோவை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தை மேயர் செ.ம. வேலுசாமி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் (பொ.) சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி, செயற்பொறியாளர் (திட்டம்) ஆ.வரதராஜன், மண்டலத் தலைவர் ஜெயராமன், கல்விக் குழுத் தலைவர் சாந்தாமணி, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் பிரபாகரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர்கள் மாரப்பன், சரஸ்வதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Last Updated on Friday, 22 February 2013 11:55
 

குப்பை லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி

Print PDF

தினகரன்           31.08.2012

குப்பை லாரிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி

திருப்பூர் மாநகராட்சியில் சுமார் 100 வாகனங்களில் குப்பை அள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் நிரப்பும் விவரங்கள், இயக்கப்படும் தூரம் ஆகியவை ‘லாக்’ புத்தகத்தில் முறையாக பதிவு செய்யப்படும். திருப்பூர் மாநகராட்சியில் குறிப்பிட்ட நடை (டிரிப்) மட்டும் குப்பைகளை அள்ளிவிட்டு, கூடுதல் நடை ஓட்டியதாக கணக்கு காட்டப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன. இதனால், மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. பணிகளும் முறையாக நடப்பதில்லை.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். எனும் புவியிடங் காட்டி கருவியை பொருத்தி கண்காணிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகராட்சியில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தி, அந்த வாகனங்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த கருவியை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு செல்கிறது என்ற விவரத்தை 100 சதவீதம் முழுமையாக கண்காணிக்க முடியும். வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெட்ரோல், டீசல் விவரங்கள், வாகனத்தை ஓட்டி செல்லும் டிரைவர், வாகனம் ஓட்டப்பட்ட நடை விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தேவையில்லாத எரிபொருள் செலவு குறைவதுடன், பணிக்காலத்தில் டிரைவர்கள் ஏமாற்றுவதும் தவிர்க்கப்படும். விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது,’’ என்றார்.
 


Page 17 of 41